அனைவரும் வாழ்க்கையைச் சமாளிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஐஸ்வர்யா தனுஷ் தெரிவித்துள்ளார்.
அண்மைய பேட்டி ஒன்றில் தனது மணமுறிவு குறித்து அவர் மறைமுகமாக இப்படி குறிப்பிட்டுள்ளார்.
"நாம் அனைவருமே வாழ்க்கையில் எதிர்கொள்பவற்றைச் சமாளிக்க வேண்டும். நம் வழியில் வரும் அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இறுதியில், நமக்கென்று என்ன இருக்கிறதோ அது நம்மிடம் நிச்சயம் வரும்," என்று ஐஸ்வர்யா கூறியுள்ளார்.
இதற்கிடையே, அவரது இயக்கத்தில் உருவாகி உள்ள இசைத்தொகுப்புக்கு 'முசாபிர்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதை தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியிட உள்ளனர். இதற்கிடையே, குறும்படம் ஒன்றை இயக்கும் முயற்சியிலும் ஐஸ்வர்யா ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

