மீண்டும் இணைந்த 'பாவலர் சகோதரர்கள்'

மீண்டும் இணைந்த 'பாவலர் சகோதரர்கள்'

1 mins read
5e151a97-1de3-415e-a0e1-6bf9c1f3a236
-

இசை­ய­மைப்­பா­ளர் இளை­ய­ரா­ஜா­வும் அவ­ரது சகோ­த­ரர் கங்கை அம­ர­னும் நீண்ட இடை­வெ­ளிக்­குப் பிறகு சந்­தித்­துப் பேசி­யுள்­ள­னர். இது இசை ரசி­கர்­க­ளுக்கு மகிழ்ச்சி அளித்­துள்­ளது.

கருத்து வேறு­பாடு கார­ண­மாக இரு­வ­ரும் ஒரு­வரை ஒரு­வர் சந்­திக்­கா­மல் இருந்­த­னர். மேலும், குடும்ப நிகழ்­வு­க­ளி­லும்­கூட ஒன்­றா­கப் பங்­கேற்­பதை தவிர்த்து வந்­த­னர்.

சில பேட்­டி­களில் இளை­ய­ரா­ஜா­வின் செயல்­பா­டு­களை வெளிப்­படை­யாக விமர்­சித்­தி­ருந்­தார் அம­ரன். அதே­ச­ம­யம் தனது மூத்த சகோ­த­ரர் இளை­ய­ரா­ஜா­வின் திற­மைக்கு ஈடு இணை இல்லை என்­ப­தை­யும் அவர் பதிவு செய்­யத் தவ­றி­யது இல்லை.

இந்­நி­லை­யில், நேற்று முன்­தி­னம் சகோ­த­ரர்­கள் இரு­வ­ரும் சந்­தித்­துப் பேசி­யுள்­ள­னர். அது குறித்து தமது டுவிட்­டர் பக்­கத்­தில் படங்­க­ளு­டன் பதி­விட்­டுள்­ளார் கங்கை அம­ரன்.

"இன்று நடந்த சந்­திப்பு... இறை அரு­ளுக்கு நன்றி... உற­வு­கள் தொடர்­கதை," எனக் குறிப்­பிட்­டுள்­ளார் கங்கை அம­ரன்.

அந்­தப் பதிவை அவ­ரது மக­னும் இயக்­கு­ந­ரு­மான வெங்­கட் பிரபு தமது சமூக ஊட­கப் பக்­கங்­களில் பகிர்ந்­துள்­ள­து­டன், 'பாவ­லர் பிர­தர்ஸ் மீண்­டும் இணைந்­துள்­ள­னர்' என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

இந்­தச் சந்­திப்­பின் மூலம் இளை­ய­ராஜா, கங்கை அம­ரன் இடை­யே­யான கருத்து வேறு­பாடு முடி­வுக்கு வந்­தி­ருப்­ப­தாக எண்ணி ரசி­கர்­கள் மகிழ்ச்சி தெரி­வித்­துள்­ள­னர்.