'கன்னத்தில் அறைந்தார்'

'கன்னத்தில் அறைந்தார்'

3 mins read
40fc3ecf-b6a8-443b-ae82-813228ce593f
வர்ஷா -

இடை­வி­டாத படப்­பி­டிப்பு களைப்பை ஏற்­ப­டுத்­தும் என்றா­லும், அதன் மூலம் கிடைக்­கும் இனிய அனு­ப­வங்­களை மறக்­கவே இய­லாது என்­கி­றார் வர்ஷா.

'பிகில்' படத்­தின் மூலம் தமிழ் சினி­மா­வில் வலு­வாக காலூன்றி உள்ள இவர், தற்­போது ஜி.வி.பிரகாஷு­டன் 'செல்ஃபி' படத்­தில் நடித்­துக்­கொண்­டி­ருக்­கி­றார். இப்­ப­டத்­தின் படப்­பி­டிப்பு சென்­னை­யில் உள்ள நெருக்­கடி மிகுந்த திரு­வல்­லிக்­கேணி பகு­தி­யில் அண்­மை­யில் நடை­பெற்­ற­தாம். குறு­க­லான சந்­து­களும் சாலை­களும் உள்ள அப்­ப­கு­தி­யில் மக்­கள் நட­மாட்­டம் அதி­கம் இருக்­கும்.

இத­னால் ரசி­கர்­கள் தொல்லை இருக்­கும் எனப் பயந்­தா­ராம் வர்ஷா. ஆனால், அவர் நினைத்­த­தற்கு நேர்­மா­றா­கத்­தான் எல்­லாம் நடந்­துள்­ளன.

"உண்­மை­யில், ஒரு­வர்­கூட எங்­க­ளுக்கு எந்­த­வி­தத் தொல்­லை­யும் தர­வில்லை. தின­மும் நாங்­கள் காட்­சி­களைப் பட­மாக்­கும் வரை ஒரு ரசி­கர்­கூட எங்­களை அணு­கிப் பேச முயற்சி செய்­ய­வில்லை. இயக்­கு­நர் 'பேக் அப்' என்று சொன்ன பிற­கு­தான், எங்­க­ளி­டம் வந்து பேசி­னர்.

"திரு­வல்­லிக்­கேணி பகு­தி­யில் கிடைக்­கும் சில உணவு வகை­கள் உல­கின் வேறு எந்­தப் பகு­தி­யி­லும் கிடைக்­கா­தவை. ஜி.வி.பிர­காஷ் இதை நன்கு அறிந்து வைத்­துள்­ளார். தின­மும் அவர் சில உணவு வகை­களை வர­வ­ழைத்து படக்­கு­ழு­வி­ன­ருக்கு வழங்­கு­வார். அவற்­றுள் சமோ­சா­வும் தயி­ரில் தயா­ரா­கும் 'லஸ்ஸி'யும் ரொம்­ப­வும் சுவை­யா­னவை.

"வழக்­க­மாக உணவு கட்­டுப்­பா­டு­க­ளைக் கடைப்­பிடிப்­ப­வள் என்­ப­தால் இது­போன்ற உணவு வகை­களை, குறிப்­பாக இனிப்­பு­க­ளைச் சாப்­பிட மாட்­டேன். ஆனால், ஜி.வி.பிர­கா­ஷால் எனது இந்­தக் கட்­டுப்­பாடுகள் பறந்து­போ­யின. உடல் எடை கூடும் என்­பது குறித்து கவலைப்­படா­மல் அனைத்­தை­யும் ஒரு­பிடி பிடித்­தேன்," என்று சிரித்­த­படி படப்­பி­டிப்பு அனு­ப­வங்­களை விவ­ரிக்­கி­றார் வர்ஷா.

திரு­வல்­லிக்­கேணி வீடு­களில் உள்ள அறை­களும் மிகச் சிறி­ய­தா­கத்­தான் இருக்­கும். அங்கு கேம­ரா­வை­யும் விளக்­கு­க­ளை­யும் வைத்து காட்­சி­யைப் பட­மாக்கு வதற்கு கூடு­த­லாக மெனக்­கெட வேண்­டி­யி­ருக்­கும்.

"கேம­ராவை ஓரி­டத்­தில் வைத்த பிறகு, அதற்­குப் பின்னே உள்ள இடை­வெ­ளி­யில் தன்னை நுழைத்­துக்­கொண்டு நிற்­பார் ஒளிப்­ப­தி­வா­ளர். தலையை நிமர்த்தி­னால் மேல்­த­ளம் தலை­யில் முட்­டும் என்­ப­தால் குனிந்­த­படியே இருப்­பார். சுற்­றி­லும் படப்­பி­டிப்­புக்­கான விளக்கு­கள் இருப்­ப­தால், கை கால்­களை அசைப்­பதில் கூட அதிக கவ­னம் தேவைப்­படும்.

"இந்­நி­லை­யில், ஒரு சண்­டைக் காட்­சி­யில் நடித்­தேன். சண்­டைக் கலை­ஞர் ஒரு­வர் என்னைக் கன்­னத்­தில் அறைய வேண்­டும். அப்­போது நான் முகத்தை திருப்­பிக்­கொள்ள வேண்­டும் என்று இயக்­கு­நர் கூறி­யி­ருந்­தார்.

"அந்த சண்­டைக் கலை­ஞர் அதிக அனு­ப­வம் உள்­ள­வர். காட்சி­யைப் பட­மாக்­கி­ய­போது, நான் எதிர்­பார்த்­த­தை­விட வேக­மாக கையை வீசி­னார்.

"அனால் குறித்த நேரத்­தில் என்­னால் முகத்­தைத் திருப்ப முடி­ய­வில்லை. கன்­னத்­தில் பலத்த அறை விழுந்­தது. அவர் அடித்த வேகத்­தில் கீழே விழுந்­து­விட்­டேன்.

"அனை­வ­ருக்­கும் முன்­னால் இப்­படி அடி வாங்­கி­விட்­டோமே என்று ஒரு வகை­யில் வெட்­க­மாக இருந்­தது. ஆனால், காட்­சியை மீண்­டும் பட­மாக்க வேண்­டிய அவ­சி­யம் எழ­வில்லை. உண்­மை­யில் சொல்­லப்­போ­னால், நாங்­கள் எதிர்­பார்த்­த­தை­விட சிறப்­பா­கவே அமைந்­தது அக்­காட்சி," என்­கி­றார் வர்ஷா.

இந்­தப் படத்­துக்­காக சென்னை புற­ந­கர்ப் பகு­தி­யில் வர்ஷா பேருந்­தில் செல்­வ­து­போன்ற சில காட்­சி­க­ளை­யும் பட­மாக்கி உள்­ள­னர். அப்­போது பள்­ளிப் பரு­வத்­தில் பேருந்­தில் சென்ற நினை­வு­கள் மன­தில் எட்­டிப்­பார்த்­த­ன­வாம்.

"நாள் முழு­வ­தும் அந்­தப் பேருந்­தி­லேயே சென்று கொண்­டி­ருக்க வேண்­டும் என்று ஆசை­யாக இருந்­தது. பள்ளி நாள்­களை நினை­வூட்­டிய படப்­பி­டிப்பு இனி­மை­யான அனு­ப­வ­மாக அமைந்­தது," என்­கி­றார் வர்ஷா.