தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுசீந்திரன்: இசை ஞானத்தை ஒளித்து வைத்திருந்தார் ஜெய்

2 mins read
bc333d83-a66e-4f03-8fc7-20829451be94
'வீரபாண்டியபுரம்' படத்தில் ஜெய், மீனாட்சி. -

நடி­கர் ஜெய் இசை­ய­மைப்­பா­ள­ராக அறி­மு­க­மாகி உள்ள படம் 'வீர­பாண்டி­ய­பு­ரம்'. இது அவர் நடித்­துள்ள முப்­ப­தா­வது படம். சுசீந்­திரன் இயக்கி உள்­ளார்.

"ஜெய் நல்ல இசை ஞானம் உள்­ள­வர், நல்ல இசை­ய­மைப்­பா­ளர் என்­பதை முன்பே அறி­வேன். ஆனால் இது­கு­றித்து அவர் அதிகம் பேச­மாட்­டார்.

"ஒரு கட்­டத்­தில் நான்­தான் வலிய சென்று என் படத்­துக்கு இசை­ய­மைக்­கு­மாறு கேட்­டுக்­கொண்­டேன்.

'வீர­பாண்­டி­ய­பு­ரம்' படத்­தின் கதையை நான் முத­லில் ஜெய்­யிடம் சொல்­ல­வில்லை. கதையை எழுதி­ய­தும் நான்­கைந்து நாய­கர்­க­ளி­டம் சொன்­னேன்.

"எதற்­கும் இருக்­கட்­டுமே என்று ஒரு­நாள் ஜெய்­யை­யும் தொடர்பு கொண்டு கதை சொல்ல வரட்­டுமா என்று கேட்­ட­போது, அவர் அதெல்­லாம் தேவையே இல்லை என்­றார். உங்­கள் படம் என்­றால் கதை கேட்க வேண்­டிய அவ­சி­யம் இல்லை என்று கூறி­விட்­டார்.

"நீ்ண்ட இடை­வெ­ளிக்­குப் பிறகு அவர் நடித்­துள்ள படம் இது. மேலும், இசை­ய­மைப்­பா­ள­ராகவும் அவரை அறி­மு­கப்­ப­டுத்­தும் படம். எனவே 'வீர­பாண்­டி­ய­பு­ரம்' படத்­தின் வெற்­றியை உறுதி செய்­யும் பொறுப்­பை­யும் நான் சுமக்க வேண்­டி­யி­ருந்­தது," என்­கி­றார் சுசீந்­தி­ரன்.

'வீர­பாண்­டி­ய­பு­ரம்' அண்­மை­யில் வெளி­யாகி விமர்­சன ரீதி­யில் நல்ல வர­வேற்­பைப் பெற்­றுள்­ளது. இதை­ய­டுத்து இசை­ய­மைப்­பா­ள­ரா­க­வும் புதுப்­ப­ய­ணத்தைத் தொடங்கி உள்­ளார் ஜெய்.

"ஜெய் இசை­ய­மைத்­துள்ள விதம் கண்டு வியப்­பின் உச்­சத்­தில் இருக்கிறேன். அவ­ருக்­குள் இப்­ப­டி­யொரு திறமை இருக்­கிறது என்­பதை இன்­னும் என்­னால் நம்ப முடி­ய­வில்லை.

"அதி­லும் இந்­தப் படத்­தில் இடம்­பெற்­றுள்ள 'காட முட்ட...' பாட­லைக் கேட்டு அசந்து போனேன். இவ்­வ­ளவு நாள் இந்தத் திற­மையை ஏன் ஒளித்து வைத்­தீர்­கள் என்று அவ­ரி­டம் கடிந்து கொண்­டேன்.

"அவ­ரு­டன் இணைந்து உரு­வாக்­கிய 'குற்­றம் குற்­றமே' படத்­தின் பணி­களை 26 நாள்­களில் முடித்­தோம்.

"இப்­போது 'வீர­பாண்­டி­ய­பு­ரம்' படத்­தை­யும் திட்­ட­மிட்டபிட முடித்­தி­ருக்­கி­றோம் என்­றால் அதற்கு ஜெய்­தான் கார­ணம்," என்று பாராட்­டித் தீர்க்­கி­றார் இயக்கு­நர் சுசீந்­தி­ரன்.

தாம் அடுத்து இயக்­கும் படங்­க­ளி­லும் ஜெய் இசை­ய­மைப்­பா­ள­ரா­கப் பணி­யாற்ற வாய்ப்­புண்டு என்று குறிப்­பி­டு­ப­வர், மற்ற படங்­களுக்­கும் ஜெய் இசை­ய­மைத்­தால் நன்­றாக இருக்­கும் என்­கி­றார்.

"நம்மிடம் உள்ள திறமையை வீணடித்துவிடக் கூடாது. உரிய நேரத்தில் அவற்றை வெளிப்படுத்த வேண்டும," என்கிறார் சுசீந்திரன்.