அஜித்: பெருமைக்குரிய மகனாக உணர்கிறேன்

அஜித்: பெருமைக்குரிய மகனாக உணர்கிறேன்

1 mins read
0b89ab3a-0c21-463d-8017-0cf404ded58c
-

'வலிமை' திரைப்­ப­டம் குடும்­பத்­து­டன் பார்த்து ரசிக்­கக்­கூ­டிய தர­மான படைப்­பாக உரு­வாகி உள்­ளது என்கி­றார் அதன் இயக்­கு­நர் வினோத்.

இந்­தப் படத்­தில் நடித்­த­தற்­காக தாம் பெரு­மைப்­ப­டு­வ­தாக அஜித் தம்­மி­டம் கூறி­ய­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

இன்­றைய சமூகம் எதிர்­கொண்­டுள்ள பிரச்­சி­னை­க­ளைப் பற்றி 'வலிமை' பேசும் என்று கூறும் வினோத், படத்­தில் நடித்­துள்ள அனை­வ­ருமே மிகச்­சி­றந்த பங்­க­ளிப்பை அளித்­த­தா­கச் சொல்­கி­றார்.

"குடும்­பப் படம் என்­ப­தால், ஒரு ​​குடும்­பத்­தில் ஏற்­படும் பிரச்­சி­னை­களை அல­சு­வ­தாக முடிவு செய்­துவிட வேண்­டாம். ஒரு குற்­றச்செயல் குறித்து கதா­நா­ய­க­னுக்கு விவ­ரம் தெரிய வரு­கிறது. அத­னால் தன் குடும்­பம் பாதிக்­கப்­படும் என்­பதை உணர்­கி­றார். அதன் பின்­னர் தன் குடும்­பம் சிதைந்­து­வி­டா­மல், அந்­தக் குற்­றத்தைத் தடுக்க அவர் முயற்சி செய்­கி­றார்.

"படம் முழு­மை­யாக முடிந்த பின்­னர் திரை­யிட்­டுப் பார்த்­தார் அஜித். அதன் பிறகு இந்­தப் படத்­தில் நடித்­தமைக்­கா­கப் பெரு­மைப்­ப­டு­கி­றேன் என்­றார். மேலும், இந்­தப் படத்­தில் நடித்த பிறகு பெரு­மைக்­கு­ரிய மகனாக உணர்­கி­றேன். இந்­தப் படத்தை என் பெற்­றோர், குழந்­தை­களு­டன் ஒன்­றாக அமர்ந்து பார்த்து ரசிப்­பேன் என்று அஜித் கூறி­னார்.

அவர் அப்­ப­டிச் சொன்ன தருணத்தை வாழ்­நா­ளில் மறக்க முடி­யாது," என்­கி­றார் வினோத்.