நடிகை காயத்ரியின் இன்ஸ்டகிராம் கணக்கை இணைய ஊடுருவிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதையடுத்து தன் பெயரில் வெளியாகும் பதிவுகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
"எனது இன்ஸ்டகிராம் கணக்கு முடக்கப்பட்டு உள்ளது. அதை மீட்கும் பணிகள் நடக்கின்றன. எனவே எனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் இருந்து ஏதேனும் தகவல்கள் வந்தால் அதை புறக்கணிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்," என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் காயத்ரி.
அவர் பெயரில் நடிகர் பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட சிலருக்கு தகவல் போயிருக்கிறது. காயத்ரி கணக்கில் இருந்து வந்த தகவலை அவர் திறந்து பார்த்தபோது, சம்பந்தம் இல்லாத இணையத்தளம் ஒன்றுடன் தனது கணினி இணைக்கப்பட்டதாகவும் உடனடியாக அதிலிருந்து வெளியேறியதாகவும் பிரேம்ஜி கூறியுள்ளார்.
அண்மையில்தான் நடிகர் துல்கர் சல்மானின் இன்ஸ்டகிராம் பக்கமும் முடக்கப்பட்டது.

