இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்தர் சிங் தோனி 'அதர்வா: தி ஒரிஜின்' என்ற கிராஃபிக்ஸ் நாவலில் கதாநாயகனாக சித்திரிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் கதையில் இடம்பெற்றுஉள்ள 'சூப்பர் நாயகன்' கதாபாத்திரத்துக்கு தோனியின் உருவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நாவலுக்கான முதல்தோற்றச் சுவரொட்டியை அவரே அண்மையில் தமது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
வரலாற்றுக் கதையைப் பின்னணியாகக் கொண்ட இந்த நாவலுக்காக 150 ஓவியங்கள் வரையப்பட்டன. தோனியின் தோற்றத்துக்கு ரசிகர்களிடையே மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், தோனியின் 'அதர்வா: தி ஒரிஜின்' என்ற கிராஃபிக்ஸ் நாவல் புத்தகத்தின் முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். இதையடுத்து இதன் முன்னோட்டக் காட்சித் தொகுப்பும் வெளியானது.

