'முன்னறியும் கதாநாயகன்'

'முன்னறியும் கதாநாயகன்'

3 mins read
8fa2168e-d901-436e-a311-853c57d2fc3d
-

பரத் நடிப்­பில் உரு­வாகி வரும் புதுப்­ப­டம் 'முன்­ன­றி­வான்'. விஜய் ராஜ் இயக்­கும் இந்­தப் படத்­தில் அவ­ரது ஜோடி­யாக ஜனனி நடித்­துள்­ளார்.

மேலும், மிர்ச்சி செந்­தில், கரு பழ­னி­யப்­பன், அஸார் உள்­ளிட்­டோர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர். தரண் குமார் இசை­ய­மைத்­துள்­ளார்.

"முன்­ன­றி­வான் என்­ப­தற்கு நடக்­கக்­கூ­டிய அனைத்­தை­யும் முன்பே கணிக்­கக்­கூ­டிய வல்­லமை பெற்­ற­வன் என்று பொருள் கொள்­ள­லாம். இந்­தக் கதை­யின் நாய­கன் அத்­த­கைய திறன் கொண்­ட­வன் என்­ப­தால் இந்­தத் தலைப்பை தேர்வு செய்­தோம்.

"இது முழு­நீள திகில் பட­மாக உரு­வாகி வரு­கிறது," என்­கி­றார் இயக்­கு­நர் விஜய் ராஜ்.

இந்­தப் படத்­தில் மிக நவீன தொழில்­நுட்­பத்­தைப் பயன்­படுத்தி உள்­ள­னர். அதன்­படி ஒவ்­வொரு காட்சி­யை­யும் ஐந்து முறை பட­மாக்க வேண்­டி­யி­ருந்­த­தாம். அண்­மைய பேட்­டி­யில் தனது படப்­பி­டிப்பு அனு­ப­வங்­களை விவ­ரித்­துள்­ளார் பரத்.

"கதைப்­படி நான் அனைத்­தை­யும் முன்­கூட்­டியே கணிப்­ப­வன். நான் அனைத்­தை­யும் எத்­த­கைய கோணத்­தில் பார்க்­கி­றேன், கேட்­கி­றேன், உணர்­கி­றேன் என்­பதை காட்­சிப்­ப­டுத்த, ஒவ்­வொரு காட்­சி­யை­யும் பல்­வேறு சிறு பகு­தி­க­ளாக பதிவு செய்­துள்­ளோம். இது­போன்ற 700 'ஷாட்­'கள் படத்­தில் உள்­ளன.

எண்­ணிக்கை அளவில் இது மிக அதி­கம் என்­பது மட்­டு­மல்ல, பட­மாக்­கு­வ­தும் மிகக் கடி­ன­மான பணி. இதற்­காக ஒளிப்­ப­தி­வா­ளர் ஓம் பல­வி­த­மான கேம­ராக்­க­ளைப் பயன்­ப­டுத்த வேண்­டி­யி­ருந்­தது.

"உதா­ர­ண­மாக, நான் ஒரு பொருளை உற்­றுப் பார்ப்­ப­தாக ஒரு காட்சி. நான் அதைப் பார்ப்­பதை முத­லில் நேர­டி­யாக, வழக்­க­மான கேம­ரா­வில் பட­மாக்­கு­வோம். அதன் பிறகு சிறப்­புக் கேம­ரா­வைக் கொண்டு அதே ஷாட் மீண்­டும் பட­மாக்­கப்­பட வேண்­டும். இப்­படி அந்த நொடிப்­பொ­ழு­துக் காட்­சியை இரு­பது வெவ்­வேறு சிறு பதி­வு­க­ளாக மாற்றுவர். அது­வரை நான் அந்­தப் பொருளை உற்­றுப் பார்த்­த­ப­டியே காத்­தி­ருக்க வேண்­டும் என்­ப­து­தான் சவால். அதிலும் எனது முக பாவ­னை­களை சிறி­த­ள­வும் மாற்­றக்­கூ­டாது. இதற்கு அதீத பொறுமை மட்டு­மல்­லா­மல், பொறு­மை­யும் கவ­ன­மும் தேவை.

"கேட்­ப­தற்கு எளி­தாக இருந்­தா­லும், நடை­மு­றை­யில் இதைச் செயல்­ப­டுத்­து­வது மிகக் கடி­ன­மான விஷ­யம். நம் முக பாவனை லேசாக மாறி­னா­லும்­கூட, மீண்­டும் அனைத்­தை­யும் முத­லில் இருந்து தொடங்க வேண்­டி­யி­ருக்­கும்.

"ஒரு­வேளை என்­னு­டன் வேறு கதா­பாத்­தி­ரங்­களும் இணைந்து நடிக்­கும் காட்சி என்­றால், அவர்­களும் இதே போல் நடிக்க வேண்­டி­யி­ருந்­தது. இதற்­காக உடல் ரீதி­யில் மட்­டு­மல்­லா­மல், மன ரீதி­யா­க­வும் என்னை தயார்­ப­டுத்­திக்­கொண்­டேன். நீண்ட நேரம் படப்­ப­டிப்­புக்­கான விளக்­கு­கள் முன்பு நின்­ற­தால் அதன் வெப்­பத்தை தாங்க வேண்­டி­யி­ருந்­தது.

"தமிழ் சினி­மா­வுக்கு இத்தொழில்­நுட்­பம் புது வரவு. இதன் தாக்­கம் எப்­ப­டிப்­பட்­டது என்­பதை படத்தை திரை­யில் பார்க்­கும் போது­தான் அனை­வ­ரா­லும் புரிந்­து­கொள்ள முடி­யும்," என்­கி­றார் பரத்.

சில முக்­கிய காட்­சி­களை இரவு நேரத்­தில் வனப்­ப­கு­தி­யில் பட­மாக்கி உள்­ள­னர். இதற்­கான ஏற்­பா­டு­கள் தயா­ராக இருந்த நிலை­யில், திடீ­ரென மழை பெய்­யத் தொடங்­கி­விட்­ட­தாம்.

"கடும் மழை­யி­லும் அன்­றைய தினம் படப்­பி­டிப்பை நடத்­தி­னோம். முன்­ன­தாக, மிக விலை­யு­யர்ந்த கேமரா உள்­ளிட்ட படப்­பி­டிப்பு சாத­னங்­களை மழை­யில் இருந்து பாது­காக்க படா­த­பாடு பட்­டோம்.

"நல்ல வேளை­யாக, பெரிய கூடா­ரத்தை அமைப்­ப­தற்­குத் தேவை­யான பொருள்­கள் கைவ­சம் இருந்­த­தால் படக்­கு­ழு­வி­னர் இணைந்து தற்­கா­லிக கூடா­ரத்தை அமைத்­தோம். சில மணி­நே­ரங்­கள் அனை­வ­ரும் அதன் கீழே ஒதுங்கி நின்­றோம்.

"மழை விட்­ட­தும் படப்­பி­டிப்பு தொடங்­கி­யது. சும்மா இருந்த போதும்­கூட படம் குறித்­தும் எடுக்­கப்­பட வேண்­டிய காட்­சி­கள் பற்­றி­யும் மற்­ற­வர்­க­ளு­டன் பேசிக்­கொண்­டி­ருந்­தோம். இது­போன்ற அர்ப்­ப­ணிப்­பும் கூட்டு முயற்­சி­யும்­தான் ஒரு படம் வெற்றி அடை­வ­தற்­குத் தேவை­யான முக்­கிய அம்­சங்­கள் எனக் கரு­து­கி­றேன்," என்­கி­றார் பரத்.