'காலம் வெகுவாக மாறிவிட்டது'

'காலம் வெகுவாக மாறிவிட்டது'

3 mins read
67c598a9-2c2d-4e47-80ec-d0e7a4c24e0b
-

கடந்த பல ஆண்­டு­க­ளாக தமிழ் சினி­மா­வில் வடஇந்­திய நடி­கை­க­ளின் ஆதிக்­கம்­தான் நிலவி வந்­தது. அதன்பிறகு நயன்­தாரா, சமந்தா, நித்யா மேனன் என தென்­னிந்­திய நடி­கை­கள் மெல்ல அங்கு வேரூன்­றி­யதை அடுத்து நிலைமை இப்­போது மாறி­யுள்­ளது.

இந்­நி­லை­யில், இந்­தித் திரை­யு­ல­கில் மீண்­டும் தென்­னிந்­திய நடி­கை­கள் ஆதிக்­கம் செலுத்­தத் தொடங்கி உள்­ள­னர்.

அட்லி இயக்­கத்­தில் உரு­வா­கும் 'லயன்' படத்­தில் ஷாருக்­கா­னுக்கு ஜோடி­யாக நடித்து வரு­கி­றார் நயன்­தாரா. சமந்தா நடித்த இந்தி இணை­யத் தொட­ரான 'தி ஃபேமிலி மேன்' சில சர்ச்­சை­க­ளுக்கு வித்­திட்­டா­லும் சமந்­தாவை இந்தி ரசி­கர்­கள் மத்­தி­யில் பர­வ­லா­கக் கொண்டு போய்ச் சேர்த்­தது. மலை­யா­ளப் படங்­களில் கவ­னம் செலுத்தி வந்த பிரியா மணிக்­கும் இந்­தத் தொடர் இந்­தி­யில் நல்­ல­தோர் அறி­மு­கத்தை ஏற்­ப­டுத்­தித் தந்­தது.

இதை­ய­டுத்து, நித்யா மேனன், கீர்த்தி சுரேஷ் உள்­ளிட்­டோர் அண்­மை­யில் நடித்த படங்­கள் நாடு முழு­வ­தும் பல்­வேறு மொழி­களில் வெளி­யீடு கண்­டன.

இந்­தப் படங்­க­ளைப் பார்த்து ரசித்த வடஇந்­திய ரசி­கர்­க­ளுக்­குத் தென்­னிந்­திய நாய­கி­களைப் பிடித்­துப்­போ­னது. சமூக ஊட­கங்­களில் இந்த நடி­கை­க­ளைப் பாராட்டிப் பதி­வி­டு­வது, அவர்­க­ளு­டைய புகைப்­ப­டங்­க­ளைப் பகிர்­வது என தங்­கள் பாசத்­தைக் காட்டி வரு­கின்­ற­னர்.

இதை­யெல்­லாம் கவ­னித்த பாலி­வுட் தயா­ரிப்­பா­ளர்­களும் இயக்­கு­நர்­களும் சும்மா இருப்­பார்­களா? அவர்­கள் தங்­கள் பார்வையை மொத்­த­மாக தென்­னிந்­தியத் திரை­யு­ல­கத்தை நோக்­கித் திருப்பியுள்­ள­னர். அதன் பல­னாகவே நயன்­தாரா, சமந்தா உள்­ளிட்ட நடிகை­க­ளுக்கு இந்­திப் பட வாய்ப்­பு­கள் தேடி வரு­கின்­றன.

நயன்­தா­ரா­வைப் பொறுத்­த­வரை, 'லயன்' படத்­துக்­காக பெருந்­தொ­கையை சம்­ப­ள­மா­கப் பெற்­றுள்­ளார். இது அவரே எதிர்­பார்க்­காத தொகை என்­கி­றார்­கள். ஆனால், படத்­தின் தயாரிப்­புத்­த­ரப்பு நன்கு யோசிக்­கா­மல், கணக்­குப்­போ­டா­மல் இந்­தத் தொகை­யைத் தூக்­கிக் கொடுக்­க­வில்லை.

நயன்­தா­ரா­வின் படங்­க­ளுக்கு தென்மாநி­லங்­களில் கிடைக்­கும் வர­வேற்பு, அவற்­றின் வியா­பார மதிப்பு ஆகி­ய­வற்றை எல்­லாம் கவ­னித்த பிறகே அவரை ஒப்­பந்­தம் செய்­துள்­ள­னர். இதே­போல், மற்ற நாய­கி­க­ளின் சந்தை மதிப்­பை­யும் தெரிந்துகொண்ட பிறகே ஒப்­பந்­தம் செய்­கிறார்­கள்.

"நயன்­தாரா தமி­ழில் ஐந்து கோடி ரூபாய் சம்­ப­ளம் பெறு­கி­றார் என்­றால், இந்­தி­யில் அது நிச்­ச­யம் இருமடங்­காக அதிகரிக்கும். முன்­பெல்­லாம் தென்­னிந்­திய நடி­கை­க­ளின் அழகு, நட­னத்­தி­ற­மைக்­காக இந்­திப் படங்­களில் வாய்ப்பு அளித்­த­னர். எனி­னும், தொழில் போட்டி கார­ண­மாக அவர்­களால் பாலி­வுட்­டில் நீண்­ட­கா­லம் தாக்­குப்­பி­டிக்க முடி­யா­மல் போனது. நடி­கை­கள் அசின், இலி­யானா போன்­ற­வர்­களை இதற்கு உதா­ர­ண­மா­கச் சொல்­ல­லாம்.

"ஆனால் நயன்­தாரா, சமந்தா உள்­ளிட்ட இன்­றைய நடி­கை­கள் விவ­ரம் அறிந்­த­வர்­கள். என்ன மாதி­ரி­யான பிரச்­சி­னை­களை, எதிர்ப்­பு­க­ளைச் சந்­திக்க வேண்­டி­யிருக்­கும் என்­பதை நன்கு அறிந்து வைத்­துள்­ள­னர். இவர்­களின் அழகு, திறமை, சந்தை மதிப்பு ஆகி­ய­வற்­றின் அடிப்­படை­யில் இந்­திப் படங்­களில் ஒப்­பந்­தம் செய்­வ­தோடு தயா­ரிப்­பா­ளர்­கள், இயக்­கு­நர்­க­ளின் வேலை முடிந்­து­விடு­கிறது. அதன்பிறகு ரசி­கர்­களை எவ்­வாறு கவர வேண்­டும் எனும் சூட்­சு­மத்தை அறிந்து வைத்துள்ள தென்­னிந்­திய நடி­கை­கள் மற்­ற­வற்­றைப் பார்த்­துக்கொள்­கி­றார்­கள்," என்­கிறார்­கள் திரை­யு­லக விவ­ரப்புள்­ளி­கள்.

தென்­னிந்­திய நடி­கை­க­ளால் நிச்­ச­யம் பாலி­வுட்­டில் கோலோச்ச முடி­யும் என்­கி­றார் நித்யா மேனன். மும்­பை­யில் தமக்கு ஏற்­பட்ட ஓர் அனு­ப­வத்­தை­யும் அவர் பகிர்ந்­து­கொண்டுள்­ளார்.

"பல்­வேறு தென்­னிந்­திய மொழி­களில் நடிப்­ப­தால் என்­னால் தென்மாநி­லங்­க­ளின் எந்தப் பகு­திக்­குச் சென்­றா­லும் தனி­மையை அனு­ப­விக்க இய­லாது. கார­ணம், எல்­லா­ருக்­கும் என்­னைத் தெரி­யும். ஆனால், மும்­பை­யில் என்­னால் சுதந்­தி­ர­மாக வலம் வர முடி­யும் என்று நினைத்­தேன்.

"அண்­மை­யில் அங்கு சென்­றி­ருந்­த­போது, என் தோழி ஒரு­வ­ரு­டன் இரவு உண­வுக்­காக வெளியே சென்­றி­ருந்­தேன். பிறகு நான் தங்­கி­யி­ருந்த இடத்­துக்­குச் செல்ல, அந்த உண­வ­கத்­துக்கு வெளியே எனது காருக்­கா­கக் காத்­தி­ருந்­தேன்.

"அப்­போது நான் சற்­றும் எதிர்­பா­ராத வகை­யில் ஏரா­ள­மான ரசி­கர்­கள் என்­னைச் சூழ்ந்து­கொண்­ட­னர். என்­னு­டைய அடுத்த படங்­கள், கதா­பாத்­தி­ரங்­கள் குறித்து அவர்­கள் இந்தி­யில் கேள்­வி­களை அடுக்­கி­ய­போது என்­னால் சமா­ளிக்க முடி­ய­வில்லை. மொழி­மாற்­றம் செய்­யப்­பட்ட எனது படங்­க­ளைப் பார்த்து ரசித்­த­தாக அவர்­கள் கூறி­னர். அப்­ப­டி­யா­னால் நேரடி இந்­திப் படங்­களில், இணை­யத் தொடர்­களில் நடித்­தால் எனக்­கான வர­வேற்பு எப்­படி இருக்­கும் என யோசித்­துப் பார்த்­தேன்," என்­கி­றார் நித்யா மேனன்.

மொத்­தத்­தில், அடுத்த சில ஆண்டு­களில் இந்­திப் படங்­களில் ஏரா­ள­மான தென்­னிந்­திய முகங்­களைப் ­பார்க்க முடி­யும்.