புரட்சி நாயகனாக மாறிய சூர்யா

3 mins read
8ff140cf-9f39-4e94-9f4f-a49af3170012
-

நடி­கர் சூர்யா நடித்­தி­ருக்­கும்

'எதற்­கும் துணிந்­த­வன்' படம் முதல் 'புரட்சி நாய­கன்' என்ற பட்­டப்­பெ­ய­

ரு­டன் திரைக்காண இருக்­கி­றார்.

சூர்யா நடித்­தி­ருக்­கும் 'எதற்­கும் துணிந்­த­வன்' படத்­தின் முன்­னோட்­டக் காட்சி நேற்று வெளி­யாகி ரசி­கர்­க­ளி­டையே நல்ல வர­வேற்­பைப் பெற்­றுள்­ளது.

அனைத்து அம்­சங்­களும் நிறைந்த பட­மாக 'எதற்­கும் துணிந்­த­வன்' படம் இருக்­கும் என்ற எதிர்­பார்ப்பை முன்­னோட்­டக் காட்சி உரு­வாக்­கி­உள்­ளது.

வழக்­க­மாக இயக்­கு­நர் பாண்­டி­ரா­ஜின்

படங்­கள் அனைத்­தும் குடும்ப உற­வு­க­ளுக்கு இடை­யே­யான பாசப்­போ­ராட்­ட­மா­கவே இருக்­கும்.

ஆனால், இந்­தப் படத்தில் சண்­டைக் காட்சி

களுக்கு அதிக முக்­கி­யத்­து­வம் கொடுக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கிறது. மேலும் பொள்­ளாச்சி சம்­ப­வத்தை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு இந்­தப் படம் உரு­வா­கி­யுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில் இந்­தப் படத்­தின் பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்பு நேற்று சென்­னை­யில் நடை­பெற்­றது.

நிகழ்ச்­சி­யில் பேசிய நடி­கர் சத்­ய­ராஜ், "சூர்­யா­வுக்கு 'புரட்சி நாய­கன்' என்ற பட்­டத்தை அளிக்கிறேன்.

எம்­ஜி­ஆ­ருக்கு பிறகு திரை­

யி­லும் நிஜ வாழ்­வி­லும்

நடி­கர் சூர்யா ஒரே மாதி­ரி­தான் இருக்­கி­றார்.

"ஜெய்­பீம்' போன்ற படத்­தில் நடித்­ததே துணிவு தான். மேலும், அம்­பேத்­கர், பெரி­யார் கருத்து

களைத் திரைப்­ப­டங்­களில் அதி­கம் காட்ட வேண்­டும். சூர்யா ரசி­கர்­கள் அவ­ரைப் பின்­பற்ற வேண்­டும்.

"கல்­விக்­கொடை, வள்­ளல் தன்மை, எதை­யும் துணிச்­ச­லாக சூர்யா பேசு­வதை அவ­ரு­டைய ரசி­கர்­கள் பின்­பற்ற வேண்­டும்.

"பெரி­யார் சீடன் என்­ப­தால் என் மன­தில் பட்­டதை அப்­ப­டியே பேசு­வேன். அத­னால் எனக்கு படங்­கள் கிடைக்­க­வில்லை, இருந்­தா­லும் பர­வா­யில்லை," என்று அவர் மேடை­யில் பேசி­னார்.

ரஜி­னி­காந்­துக்கு 'சூப்­பர் ஸ்டார்', கமல்­ஹா­ச­னுக்கு 'உலக நாய­கன்', விஜய்க்கு 'தள­பதி', அஜித்­துக்கு 'தல' என்று நடி­கர்­க­ளுக்கு பட்­டங்­கள் வழங்­கப்­பட்­டி­ருக்­கும் நிலை­யில் சூர்­யா­வுக்­கும் 'புரட்சி நாய­கன்' என்ற பட்­டம் வழங்­கப்­பட்டு இருப்­பதை அவ­ரு­டைய ரசி­கர்­கள் பெரி­தும் வர­வேற்­றி­ருக்­கின்­ற­னர்.

அத­னைத் தொடர்ந்து 'எ­தற்­கும் துணிந்­த­வன்' படத்­தில் 'புரட்சி நாய­கன்' சூர்யா என பதிவு செய்­யப்­படும் என்­றும் இனி அடுத்­த­டுத்து வரும் சூர்­யா­வின் படங்­க­ளி­லும் 'புரட்சி நாய­கன்' என்ற பட்­டம் குறிப்­பி­டப்­படும் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

'எற்­கும் துணிந்­த­வன்' படத்­தி­லி­ருந்து

டி.இமானின் இசை­யில் பாடல்­கள் வெளி­யாகி நல்ல வர­வேற்­பைப் பெற்று வரு­கின்­றன. இந்­தப் படத்­தில் சூர்­யா­வுக்கு ஜோடி­யாக பிரி­யங்கா மோகன் நடித்­துள்­ளார்.

படத்­தில் வினய், சுப்பு பஞ்சு உள்­பட ஒரு சில வில்­லன்­கள், சத்­ய­ராஜ், சரண்யா பொன்­வண்­ணன் உள்­பட ஒரு சில குண­சித்­திர கதா­பாத்­தி­ரங்­கள், சூரி, தேவ­தர்­ஷினி, புகழ் ஆகிய நகைச்­சுவை நடி­கர்­கள் என மொத்­தத்­தில் ஒரு வெற்­றிப் பட­மாக 'எதற்­கும் துணிந்­த­வன்' அமைந்து உள்­ளது என்­பது இந்த முன்­னோட்­டக் காட்­சி­யில் இருந்து தெரிய வரு­கிறது.

மேலும் படத்­தில் சூர்­யா­வின் அதி­ரடி சண்­டைக் காட்­சி­கள், சூர்யா - பிரி­யங்­கா­ மோ­க­னின் காதல் காட்­சி­கள், சூரி-புகழ் நகைச்­சு­வைக் காட்­சி­கள் என அனைத்து அம்­சங்­களும் இந்த படத்­தில் நிறைந்­தி­ருப்­பது வர­வேற்­கும்­படி இருக்­கிறது.

பெண்­கள் என்­றால் பல­வீ­ன­மா­ன­வர்­கள் என்று நினைத்­துக் கொண்­டி­ருப்­ப­வர்­க­ளுக்கு பெண்­கள் என்­றால் பல­மா­ன­வர்­கள் என்­பதை நிரூ­பிக்க வேண்­டும் என்பது போன்ற அர்த்­த­முள்ள வச­னங்­கள் இந்த படத்­தின் கூடு­தல் வெற்­றிக்கு உகந்த காட்சி­க­ளாக இருக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மார்ச் 10ஆம் தேதி படம் வெளி­யாக உள்­ளது. சூர்­யா­வின் படங்­கள் தொடர்ந்து 'ஓடிடி'யில் வெளியான நிலையில் அதற்கு முற்­றுப்­புள்ளி வைக்­கும் வகை­யில் 'எதற்­கும் துணிந்­த­வன்' படம் திரை­ய­ரங்­கு­களில் வெளி­யா­க­ இருப்­ப­தால் படத்­தின் மீதான எதிர்­பார்ப்பு அதி­க­ரித்­துள்­ளது.

இந்­நி­லை­யில் சூர்­யா­வும் ஜோதி­கா­வும் பல ஆண்­டு­கள் கழித்து மீண்­டும் ஒரு படத்­தில் இணைந்து நடிக்க இருப்­ப­தாக செய்­தி­கள் வெளி­

வ­ரு­கின்­றன. அது­பற்றி அதி­கா­ர­பூர்வ செய்தி விரை­வில் வெளி­வ­ரும் என்று அவ­ரின் ரசி­கர்­கள் காத்­தி­ருக்­கின்­ற­னர்.