சிக்கலைக் கடந்து வெளியாகிறது 'கள்ளன்'

சிக்கலைக் கடந்து வெளியாகிறது 'கள்ளன்'

1 mins read
f3a92e33-78e5-4281-be10-138103d23144
'கள்ளன்' படத்தில் கரு.பழனியப்பன். -

சில சிக்­கல்­க­ளைக் கடந்து ஒரு­வழி­யாக திரை காண்­கிறது இயக்­கு­ந­ரும் நடி­க­ரு­மான கரு. பழ­னி­யப்­பன் கதை­யின் நாய­க­னாக நடித்­தி­ருக்­கும் 'கள்­ளன்' திரைப்­ப­டம். அறி­முக இயக்­கு­நர் சந்­திரா தங்­க­ராஜ் இயக்­கி­யுள்ள படம் இது.

தமி­ழக மலைக்­கி­ரா­மங்­களில் வேட்­டை­யா­டு­தலை தொழி­லாகக் கொண்ட மக்­க­ளின் வாழ்­வி­யலை மையப்­ப­டுத்தி இந்­தப் படத்தை உரு­வாக்­கி­யுள்ள சந்­திரா, அடிப்­படை­யில் நல்ல எழுத்­தா­ளர். உதவி இயக்­கு­ந­ராக அனு­ப­வம் பெற்ற பிறகே தனி­யாக படம் இயக்­கும் துணிச்­சல் தமக்கு வந்­த­தா­கச் சொல்­கி­றார்.

"குற்­றச்சம்­ப­வங்­களும் திகி­லும் நிறைந்­துள்ள இப்­ப­டம் அனைத்து தரப்பு ரசி­கர்­க­ளுக்­கும் நிச்­ச­யம் பிடிக்­கும். வேட்­டைச் சமூ­கத்­தில் பிறந்து வளர்ந்த ஒரு­வன், இனிமேல் வேட்­டை­யா­டக்­கூ­டாது என்று தடை விதிக்­கப்­ப­டும்­போது அதிர்ந்து போகி­றான். வறு­மை­யின் கார­ண­மாக வாழ்க்­கை­யில் ஒரே­யோரு தவற்­றைச் செய்­யும் சூழ­லுக்­கும் தள்­ளப்­ப­டு­கி­றான். அந்­தத் தவறு அவ­னது வாழ்க்­கையை மொத்­த­மா­கப் புரட்­டிப் போட்­டு­வி­டு­கிறது.

"வாழ வழி­யில்­லா­மல் அவ­னும் அவ­னது நண்­பர்­களும் ஓடு­கிற ஓட்­டத்­தில், கடை­சி­யில் அறம்­தான் வெற்றி பெறும் என்­ப­தைப் பர­ப­ரப்­பா­கச் சொல்­லும் ஒரு வணி­கப்­ப­டம்தான் இது," என்­கி­றார் இயக்­கு­நர் சந்­திரா தங்­க­ராஜ்.

படத்­தின் தலைப்பு தொடர்­பாக நீதி­மன்­றத்­தில் வழக்கு தொட­ரப்­பட்­டது. எனி­னும், தீர்ப்பு சாத­க­மாக வந்­ததை யடுத்து, கடந்த ஐந்து ஆண்டு­களாக தயா­ரிப்­பில் இருந்த இப்­ப­டம் இப்­போது சிக்­க­லின்றி வெளி­யீடு காண்­கிறது.