சிலர் தம்மைத் தவறாக வழிநடத்தியதாக இயக்குநர் அட்லீ சாடியுள்ளார். இவர் ஷாருக்கானை வைத்து இந்தியில் இயக்கி வந்த படம் திடீரென கைவிடப்பட்டதாக அண்மையில் தகவல் வெளியானது. அதில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார்.
இந்நிலையில், இந்தப் படத்தின் கதை தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகின.
வேறொரு படத்தின் கதையைத் தழுவி அட்லீ தன் படத்துக்கான கதையை தயார் செய்திருப்பதாகவும் பல காட்சிகள் வேறு படங்களில் இடம்பெற்றவை என்றும் சமூக ஊடகங்களில் பலர் பதிவிட்டனர். இது ஷாருக்கானின் கவனத்துக்குச் செல்ல, அவர் மிகுந்த வருத்தத்தில் மூழ்கி உள்ளதாகத் தகவல். இதையடுத்தே, பட வேலைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அவர் கூறியதாகத் தெரிகிறது.
இந்நிலையில், "சிலர் உங்களை ஏன் தவறாக நடத்தினார்கள் என்று வருத்தப்படும் காலம் உங்களது வாழ்வில் வரும். என்னை நம்புங்கள்," என்று பதிவிட்டுள்ளார் அட்லீ. அவர் யாரைப்பற்றி இவ்வாறு குறிப் பிட்டுள்ளார் எனத் தெரியவில்லை.

