'இது பத்தாண்டு உழைப்பு'

'இது பத்தாண்டு உழைப்பு'

3 mins read
22e0724e-1983-44c2-934e-07a349d51566
-

பத்து ஆண்­டு­க­ளாக கடும் உடற்­ப­யிற்சி மேற்­கொண்டு வரு­கி­றார் ஆரவ். 'சிக்ஸ் பேக்ஸ்' உடற்­கட்­டு­டன் காட்­சி­ய­ளிக்­கும் புகைப்­ப­டங்­கள் சமூக ஊட­கங்­களில் பர­வ­லா­கப் பகி­ரப்­பட்டு வரு­கின்­றன.

'பிக்­பாஸ்' போட்­டி­யில் வெற்றிபெற்ற உட­னேயே இரண்டு படங்­களில் ஒப்­பந்­த­மா­னார் ஆரவ்.

'மார்­கெட் ராஜா எம்.பி.பி.எஸ்' படம் விமர்­சன ரீதி­யில் வெற்றி பெற­வில்லை என்­ற­போதி­லும், அடுத்து, 'ராஜ பீமா' படத்­தில் ஒப்­பந்­த­மா­னார்.

"படத்தை முடித்து வெளி­யி­டு­வ­தற்­கான அனைத்து ஏற்­பா­டு­களும் செய்­யப்­பட்­டி­ருந்த நிலை­யில், கொரோ­னா­வால் அனைத்­தும் கெட்­டுப்­போ­னது. சரி­யான தேதி­யும் போது­மான திரை­ய­ரங்­கு­களும் கிடைத்­தால் போதும், படம் உடனே வெளி­யா­கி­வி­டும்," என்று சொல்­லும் ஆரவ்­வுக்கு கொரோனா முடக்­க­நிலை பெரும் சோத­னை­யாக அமைந்­து­விட்­ட­தாம்.

அந்­தச் சம­யத்­தில்­தான் இவ­ரது தந்­தைக்கு உடல்­ந­லம் பாதிக்­கப்­பட்­டது. அவர் பார்க்கவேண்­டும் என்­ப­தற்­கா­கவே விரை­வாக திரு­ம­ணம் செய்­து­கொண்­ட­தா­க­வும் அதன்பின்­னர் தந்தை இறந்­து­போ­ன­தா­க­வும் சொல்­கி­றார்.

அந்த சோகத்­தில் இருந்து மீண்டு வர சற்று கால அவ­கா­சம் தேவைப்­பட்­ட­தா­கச் சொல்­ப­வர், மகன் பிறந்த பிறகு அந்த சோகம் குறைந்­தி­ருப்­ப­தா­கக் கூறு­கி­றார்.

"அப்­பாவே எனக்கு மக­னா­கப் பிறந்­தி­ருப்­ப­தாக நினைக்­கி­றேன். மகன் பிறந்த பிற­கு­தான் பழைய இயல்­புக்கு மாறி­யுள்­ளேன். இப்­போது மீண்­டும் புது வாய்ப்­பு­கள் தேடி வரு­கின்­றன. அடுத்து, மகிழ்­தி­ரு­மேனி இயக்­கத்­தில் உத­ய­நி­தி­யு­டன் ஒரு படத்­தில் நடித்­துள்­ளேன். மேலும், ஒரு பெரிய நிறு­வ­னம் என்னை ஒப்­பந்­தம் செய்­துள்­ளது.

"இப்­போது நான் படங்­க­ளின் எண்­ணிக்கை குறித்து கவ­லைப்­படு­வ­தாக இல்லை. நல்ல கதை­களாகத் தேர்ந்­தெ­டுத்து நடிக்க விரும்­பு­கி­றேன்.

"மகிழ் சார் படங்­கள் எப்­போ­துமே வித்­தி­யா­ச­மாக இருக்­கும். இந்­தப் படத்­தி­லும் புது­மை­யான அம்­சங்­களை வைத்­துள்­ளார். நானும் உத­ய­நி­தி­யும் எதி­ரெ­திர் துரு­வங்­க­ளாக திரை­யில் தோன்று­கி­றோம். என்னை வில்­லன் என்­றும் சொல்லமுடி­யாது, எதிர்­மறை கதா­பாத்­தி­ரம் என்­றும் குறிப்­பிட முடி­யாது," என்­கி­றார் ஆரவ்.

'பிக்­பாஸ்' வெற்­றிக்­குப் பிறகு அவ்­வப்­போது மகிழ்­திருமேனியைச் சந்­தித்­துள்­ளா­ராம். அப்­போ­தெல்­லாம் தமக்கு வாய்ப்பு அளிக்­கும்­படி அவ­ரி­டம் கேட்­டுள்­ளார்.

இந்­நி­லை­யில், உத­ய­நி­தியை வைத்து இயக்­கப்­போ­கும் படத்­துக்­கான கதையை எழு­தி­ய­போது, ஆரவ் நினை­வுக்கு வரவே, உட­ன­டி­யாக அழைத்­துப் பேசி ஒப்­பந்­தம் செய்­துள்­ளார்.

"எனி­னும், அந்­தச் சம­யத்­தில் நான் ஒல்­லி­யாக இருந்­தேன். என் உடற்­கட்டை மாற்றி அமைக்கவேண்­டும் என்­றார். ஒரு மாதம் அவ­கா­சம் கேட்டு கடு­மை­யாக உடற்­ப­யிற்சி மேற்­கொண்­ட­தன் பல­னா­கவே இப்­போது உள்ள உடற்­கட்­டைப் பெற முடிந்தது. அதன்பிறகு என்­னைப் பார்த்­த­வ­ருக்கு முழு­மை­யான மன­நி­றைவு ஏற்­பட்­டது.

"இதில் முக்­கி­ய­மான விஷ­யம் என்­ன­வென்­றால், எனக்கு முன்பு பல கதா­நா­ய­கர்­க­ளி­டம் இந்­தப் பாத்­தித்­தில் நடிக்­கக் கேட்­டா­ராம். ஏதோ ஒரு கார­ணத்­தால் யாரும் முன்­வ­ர­வில்லை. அத­னால் எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

"மகிழ் சார் படத்­தில் நடிப்­பது தெரிந்­த­தும், பல படங்­களில் வில்­ல­னாக நடிக்க வாய்ப்­பு­கள் தேடி வந்­தன. ஆனால், எதை­யும் ஏற்­கத் தோன்­ற­வில்லை. 'எதற்­கும் துணிந்­த­வன்' படத்­தில் வில்­ல­னாக நடிக்­கும் வாய்ப்­பும் கிடைத்­தது. ஆனால், மகிழ் சார் படத்­துக்­கான தோற்­றத்­து­டன் வேறு படங்­களில் நடிக்கமுடி­யாது என்­ப­தால் அந்த வாய்ப்பை ஏற்­க­வில்லை," என்­கி­றார் ஆரவ்.

திரு­மண வாழ்க்கை மகிழ்ச்­சி­க­ர­மா­கப் போய்க்­கொண்­டி­ருப்­ப­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், மனை­வி­யின் ஆத­ர­வால்­தான் திரை­யு­ல­கில் முழுக்­க­வ­னத்­தை­யும் செலுத்த முடி­வ­தா­கச் சொல்­கி­றார்.

"மகிழ் சார் படத்­துக்­காக தேவைப்­படும் இந்த உடற்­கட்­டைக் கொண்டு வரு­வ­தற்கு மிக­வும் சிர­மப்­பட்­டேன். பிடித்த உண­வு­கள் எதை­யுமே சாப்­பிட முடி­யாது. பால், உப்பு, சீனி சார்ந்த உணவு வகை­க­ளைத் தொட இய­லாது. ஒட்­டு­மொத்த உடம்­பி­லும் 8% கொழுப்பு மட்­டுமே இருக்கவேண்­டும்.

"பிரி­யா­ணி ­சாப்­பிட முடி­யா­மல் தவித்­தேன். அப்­போ­தெல்­லாம் மனை­வி­யின் ஆத­ர­வும் அர­வ­ணைப்­பும் பெரிய பல­மாக இருந்­தது. மகன் பிறந்த பிறகு கூடு­தல் உற்­சா­கத்­து­டன் வேலை பார்க்­கி­றேன்," என்கிறார் ஆரவ்.