நடிகர் விஜய்யைப் போல் கடும் உழைப்பாளியைத் தாம் கண்டதில்லை என்கிறார் பூஜா ஹெக்டே (படம்).
பாடல், சண்டைக்காட்சிகளில் மட்டுமல்லாமல், சிறு சிறு நுணுக்கமான விஷயங்களிலும் அவர் கவனம் செலுத்துவது தம்மை வியப்பில் ஆழ்த்தியது என்றும் அவர் கூறியுள்ளார்.
"தன்னுடன் நடிக்கும் மற்ற நடிகர்களுக்கும் படத்தில் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று விரும்புவார் விஜய். அனைவரிடமும் அன்பாக இருக்கும் ஒருசில நாயகர்களில் இவரும் ஒருவர்.
"படப்பிடிப்புக்கு அதிகாலையிலேயே வந்து மற்றவர்களுக்காக காத்திருப்பார். மேலும், இயக்குநர் அழைக்கும் முன்பே கேமரா முன் வந்து நிற்பார்.
"உச்ச நடிகராக இருப்பவர் இந்த அளவுக்கு எளிமையான மனிதராக இருப்பது ஆச்சரியம். பல கதாநாயகர்களுடன் நடித்த அனுபவத்தை வைத்து இதைச் சொல்கிறேன். என்னைப் பொறுத்தவரை விஜய்தான் உண்மையான சூப்பர் நாயகன்," என்கிறார் பூஜா ஹெக்டே.

