'பாகுபலி' புகழ் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி உள்ள 'ஆர்ஆர்ஆர்' படத்தின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கிடக்கின்றனர்.
இந்நிலையில் அவரோ, உக்ரேனில் நடைபெறும் தாக்குதல்கள் குறித்து கவலையில் மூழ்கி உள்ளார்.
இந்தப் படத்தின் முக்கிய காட்சிகள் சிலவற்றை உக்ரேனில்தான் படமாக்கினாராம். அப்போது அந்நாட்டின் அழகில் மயங்கிப் போனதாகச் சொல்கிறார் ராஜமௌலி. படப்பிடிப்பு நடத்துவதற்கான அனைத்து வசதிகளும் கொண்ட நாடு உக்ரேன் என்கிறார்.
"அங்குள்ள சில தொழில்நுட்ப வல்லுநர்களும் எங்களுடன் இணைந்து பணியாற்றினர். மிகவும் நட்பாகப் பேசிப் பழகிய அவர்களின் நிலை என்னவாகுமோ என்று கவலையாக உள்ளது. தொலைபேசி மூலம் அவர்களிடம் அவ்வப்போது பேசி வருகிறேன்.
"பெரும்பாலானவர்கள் பாதுகாப்புடன் இருப்பதாகச் சொல்கிறாரா்கள். எனினும் போர்ச் சூழல் கவலை அளிக்கிறது," என்கிறார் ராஜமௌலி.
மார்ச் 25ஆம் தேதி வெளியீடு காண்கிறது ஆர்ஆர்ஆர். ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
, :

