'சர்தார்' பெற்ற வரவேற்பு

'சர்தார்' பெற்ற வரவேற்பு

3 mins read
e11ddb72-0ba6-4dbf-a398-3fd45690b219
-

'சர்­தார்' படம் குறித்து கோடம்­பாக்­கத்­தில் பர­ப­ரப்­பா­கப் பேசப்­படு­கிறது. கார­ணம், இறு­திக்­கட்­டப் படப்­பி­டிப்பு தொடங்கு­வ­தற்கு முன்பே அதன் 'ஓடிடி' உரிமை பெரிய தொகைக்கு விலை­போ­யி­ருக்­கிறது.

இத­னால் ஒட்­டு­மொத்த படக்­கு­ழு­வி­ன­ரும் உற்சாகத்­தில் உள்­ள­னர். ஆனால் கார்த்­தியோ அமைதி­யாக அடுத்­த­கட்ட வேலை­களில் கவ­னம் செலுத்தி வருகிறார்.

இதற்­கி­டையே, 'சர்­தார்' படம் நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யீடு காண உள்­ள­தாக வெளி­யான தக­வல் உண்­மை­யல்ல எனத் தயா­ரிப்­புத் தரப்பு விளக்­கம் அளித்­துள்­ளது. என்ன நடந்­தது?

'புஷ்பா' படப்­பு­கழ் அல்லு அர்­ஜூன் 'ஆஹா' என்ற 'ஓடிடி' நிறுவனத்தை நடத்தி வரு­கி­றார். அந்த நிறு­வனம்­தான் 'சர்­தார்' படத்­தின் ஓடிடி வெளி­யீட்டு உரி­மை­யைப் பெற்­றுள்­ளது.

இரு­பது கோடி ரூபாய் கொடுக்­கத் தயா­ராக இருப்­ப­தாக அந்­நி­று­வ­னம் கூற, மறு­பேச்சின்றி ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்­டுள்­ளது 'சர்­தார்' தயா­ரிப்­புத் தரப்பு. இத்­த­னைக்­கும் இறு­திக்­கட்ட படப்­பிடிப்புகூட இன்­னும் தொடங்கவில்லை.

"சத்­தமே இல்­லா­மல் வியா­பா­ரத்­தின் அடுத்த கட்­டத்தை எட்­டி­யுள்­ளோம். திரை­ய­ரங்­கில் வெளி­யீடு காண்­ப­தற்­கும் முன்பே 20 கோடி ரூபாய்க்கு வியா­பா­ரம் ஆகி­யுள்­ளது என்­பது தமிழ்த் திரை­யு­ல­கில் புதிய சாதனை," என்­கி­றார் இணைத் தயா­ரிப்­பா­ளர் ராஜ­சே­கர் கற்­பூ­ர­பாண்­டி­யன்.

'சர்­தார்' படத்தை கார்த்­தி­யின் 'தேவ்' படத்தை தயா­ரித்த லட்­சு­ம­ணன் தயா­ரித்து வரு­கி­றார். இவர் கார்த்­தி­யின் நெருங்­கிய நண்­ப­ரா­வார்.

'இரும்­புத்­திரை' மித்­ரன் இயக்­கத்­தில் உரு­வா­கிறது 'சர்­தார்' படம்.

இதில் அப்பா, மகன் என இரண்டு வேடங்­களில் அரு­மை­யாக நடித்து வரு­கி­றா­ராம் கார்த்தி. அவற்­றுள் ஒரு கதா­பாத்­தி­ரம் காவல்­துறை அதி­காரி என்று கூறப்­ப­டு­கிறது.

ராஷி கண்ணா, ரஜிஷா விஜ­யன் என இரண்டு நாய­கி­கள் உள்­ள­னர். சிம்­ரன், முனீஸ் காந்த், முரளி ஷர்மா, இள­வ­ரசு எனப் பல­ரும் நடித்து வரு­கின்­ற­னர்.

இரண்டுகட்ட படப்­பி­டிப்பை சென்­னை­யில் முடித்­து­விட்டு, மூன்­றாம் கட்ட படப்­பி­டிப்பை மைசூ­ரில் நடத்தி உள்­ள­னர்.

"இந்­தப் படம் நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யா­வ­தா­கக் கூறப்­ப­டு­வது தவறு. படத்தை அறு­பது கோடி ரூபாய் செல­விட்டு உரு­வாக்கி வரு­கி­றோம். அதை இரு­பது கோடி ரூபாய்க்கு விற்க முடி­யுமா?

"ஓடிடி வெளி­யீட்­டுக்கு மட்­டுமே இந்­தத் தொகை பேசப்­பட்­டுள்­ளது. படம் திரை­ய­ரங்­கில் வெளி­யாகி மூன்று அல்­லது நான்கு வாரங்­கள் முடிந்த பிறகே ஓடி­டி­யில் வெளி­வரும். எனவே படத்­தின் வியா­பா­ரம் தொடங்கி உள்­ளது என்­பது மட்­டுமே சரி. இன்­னும் இசை உரிமை, செயற்­கைக்­கோள் உரிமை எனப் பல்­வேறு உரி­மை­களை விற்க வேண்­டி­யுள்­ளது. இந்த வியா­பா­ரம் மூலம் வரக்­கூ­டிய தொகை­க­ளை­யும் சேர்க்க வேண்­டும்," என்­கிறது 'சர்­தார்' படத்­தின் தயா­ரிப்­புத் தரப்பு.

எதிர்­வ­ரும் ஏப்­ர­லில் 'சர்­தார்' படப்­பி­டிப்பை முடித்து­விட்டு, அடுத்து ராஜு ­மு­ரு­கன் இயக்­க­வுள்ள படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார் கார்த்தி.

இந்­நி­லை­யில் மணி­ரத்­னம் இயக்­கும் 'பொன்­னி­யின் செல்­வன்' பட வேலை­கள் மீண்­டும் தொடங்கி இருப்­பதை அடுத்து, அதி­லும் கவ­னம் செலுத்­து­கி­றாராம்.

இந்­தப் படத்­தில் வந்­தி­யத்­தே­வ­னாக கார்த்­தி­யும் அருள்­மொழி வர்­ம­னாக ஜெயம் ரவி­யும் நடித்­துள்­ள­னர்.

பெரும்­பா­லான காட்­சி­களை தாய்­லாந்­தில் பட­மாக்­கிய நிலை­யில், படத்­தில் திருப்­பு­மு­னையை ஏற்­ப­டுத்­தும் சில காட்­சி­களை மும்­பை­யில் பட­மாக்கி வரு­கின்­றனர்.

"வந்­தி­யத்­தே­வன் கப்­ப­லில் இருந்து கட­லில் குதித்து தப்­பும் காட்­சியை கட­லுக்கு அடி­யில் பட­மாக்க வேண்­டி­யுள்­ளது. அதற்­கான அனு­ம­தியை சில தினங்­க­ளுக்கு முன்­பு­தான் மகா­ராஷ்­டிர மாநில அரசு வழங்­கி­ய­தாம்.

அதற்­கான படப்­பி­டிப்பு தொடங்­கி­யதை அடுத்து கார்த்­தி­யும் ஜெயம் ரவி­யும் மும்­பை­யில் முகா­மிட்­டுள்­ள­னர்.

படத்தின் நாயகிகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராய் சம்பந்தப்பட்ட காட்சிகளை யும் வேகமாகப் படமாக்கி வருகிறாராம் மணிரத்னம். இயக்குநர் ஆக வேண்டும் என்பதுதான் கார்த்தியின் முதன்மை விருப்பம். எனினும் காலம் அவரை நடிகராக மாற்றி உள்ளது.

மணிரத்னத்தி டம் உதவி இயக்குநராகப் பணியாற்றி உள்ளார். இந்நிலையில், தனது குருநாதருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதன் மூலம் திரைப்பட இயக்கம் தொடர்பான பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிகிறது என்கிறார்.

"அதிலும், 'பொன்னியின் செல்வன்' பட அனுபவத்தை மறக்கவே இயலாது. மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்தைக் கையாள்வது எல்லா இயக்குநர்களுக்கும் சாத்தியமானதல்ல. இயக்கம் தொடர் பான அனைத்து நுணுக்கங்களை யும் அறிந்தவருக்கு மட்டுமே இது சாத்தியம். மணிரத்னம் அப்படிப்பட்ட இயக்குநர்," எனப் பாராட்டுகிறார் கார்த்தி.

, :

  