சிறந்த நடிகைகள் என்று பெயரெடுத்துள்ள வித்யா பாலன், ஷெஃபாலி ஷா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் 'ஜல்சா' இந்திப்படம் நேரடியாக இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஒரு சாலை விபத்தை மையப்படுத்தி இந்தப் படத்தை உருவாக்கி உள்ளனர். ஒரு சிறுமியின் மீது கார் மோதுகிறது. ஆனால் அந்த ஓட்டுநர் நிற்காமல் சென்றுவிடுகிறார். பிறகு அந்தச் சிறுமி பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறாள் என்பதாக கதை நகர்கிறது.
வித்யா பாலனும் ஷெஃபாலியும் தாங்கள் ஏற்றுக்கொண்ட பாத்திரமாகவே திரையில் வாழ்ந்து காட்டிஇருப்பதாக ஊடகங்கள் பாராட்டுகின்றன. வித்யா காவல்துறை அதிகாரியாகவும் ஷெஃபாலி சமையல் கலைஞராகவும் நடித்துள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த செரிபிரல் பால்சி என்ற பாதிப்பு உள்ள பத்து வயதுச் சிறுவன் வித்யாவின் மகனாக நடித்துள்ளான். இப் படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

