'பொன்னியின் செல்வன்' திரைப்படம் ஓர் அழகான காவியம் என்கிறார் அதிதி ராவ்.
இத்தனைக்கும் அவர் அந்தப் படத்தில் நடிக்கவில்லை. இந்நிலையில் அண்மைய பேட்டியில், அப்படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
"நான் மணிரத்னத்தின் தீவிர ரசிகை என்று ஏற்கெனவே பலமுறை கூறியுள்ளேன். 'பொன்னியின் செல்வன்' படம் வெளியான முதல் நாளன்றே அதைப் பார்க்க விரும்புகிறேன். ரசிகர்கள் மத்தியில் அமர்ந்து, கைதட்டி ஆரவாரத்துடன் படத்தைப் பார்த்து ரசிக்க வேண்டும் என விரும்புகிறேன்.
"நடிகையாக வேண்டும் என்ற ஆசை ஏற்படக் காரணமே மணி சார்தான். அவரது இயக்கத்தில் நாயகியாக நடிக்க வேண்டும் என்பதே நான் நடிகையாக முக்கியக் காரணம்.
"அவரைத்தான் எனது குருவாகவும் கருதுகிறேன். அவரது அடுத்த படத்தில் ஒப்பந்தம் செய்வார் என்ற எதிர்பார்ப்பில் பாராட்டவில்லை.
"அவரது அடுத்தடுத்த படங்களில் இருப்பேனா என்பது தெரியாது," என்கிறார் அதிதி.

