உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகி வருகிறது பேட்டரி படம். மணிபாரதி இயக்கி உள்ளார்.
மருத்துவக் கருவிகளை வாங்குவதில் நடக்கும் முறைகேடுகள் குறித்து இந்தப் படத்தில் விவரிக்கப்பட்டுள்ளதாம்.
"இந்திய மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு பேர் ஏழைகளாக உள்ளனர். வறுமை கோட்டிற்குக் கீழ் வாழும் அந்த மக்களுக்கு மருத்துவச் செலவு என்பது பெரும் சுமையாகவே இருக்கும்.
"இந்நிலையில் மருத்துவக் கருவிகள் தொடர்பாக நடக்கும் முறைகேடுகள் காரணமாக ஓர் ஏழைக் குடும்பம் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பதை நெஞ்சம் பதைபதைக்க சொல்லும் படம் இது.
"காவல்துறை ஆய்வாளரான நாயகன் செங்குட்டுவனை, நாயகி அம்மு அபிராமி காதலிக்கிறார். ஆனால், ஒரு கொலை வழக்கில் குற்றவாளியைத் தேடிக்கொண்டிருக்கும் செங்குட்டுவன், அதன் தீவிரத்தால் காதலை ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகிறார். காதல், குற்றச்செயல்களை சரிவிகிதத்தில் கலந்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது," என்கிறார் மணிபாரதி.

