தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வித்யா: என்னைப் புறக்கணித்தனர்

2 mins read
40dc420c-fef9-4969-b213-43851814ad79
-

இந்­தி­யில் முன்­னணி கதா­நா­ய­கர்­கள் தம்மை நிரா­க­ரித்­த­தா­க­வும் எனி­னும் தாம் அது­கு­றித்து வருத்­தப்­ப­ட­வில்லை என்­றும் கூறு­கி­றார் நடிகை வித்யா பாலன்.

திரை­யு­ல­கத்­துக்கு நல்ல கதை­கள்­தான் ஆன்மா போன்­றவை என்­றும் அப்­ப­டிப்­பட்ட கதை­க­ளைத்­தான் தாம் விரும்­பு­வ­தா­க­வும் சொல்­கி­றார்.

"பல முன்­னணி நடி­கர்­கள் என்னை ஒதுக்­கு­வதாக உணர்ந்­தேன். அதற்­காக எனது விருப்­பங்­க­ளை­யும் அதற்­காக எதிர்­கொள்­ளும் போராட்­டத்­தை­யும் கைவிட இய­லாது.

"இவ்­வாறு முடிவு செய்­த­தும் நல்ல கதை­களை மட்­டுமே தேர்வு செய்து நடிக்­கத் தொடங்­கி­னேன். எனது முடிவு வீண்­போ­க­வில்லை. நான் நடித்த பல படங்­கள் எனக்­கான நல்ல பெயரை வாங்­கிக் கொடுத்­தன. ரசி­கர்­களும் என்னை ஏற்­றுக்­கொண்­ட­னர்," என்­கி­றார் வித்யா.

நடிக்க வந்த புதி­தில் தாம் எதிர்­கொண்ட சில மோச­மான அனு­ப­வங்­களை மறக்­கவே இய­லாது என்று குறிப்­பி­டு­ப­வர், அச்­ச­ம­யம் 13 படங்­களில் இருந்து தாம் அடுத்­த­டுத்து நீக்­கப்­பட்­ட­தாக நினைவு­கூர்­கி­றார்.

"அதி­லும் குறிப்­பிட்ட ஒரு படத்­தில் இருந்து என்னை நீக்­கிய தயா­ரிப்­பா­ளர், அதன் பிறகு என்­னி­டம் மிக மோச­மான முறை­யில் நடந்து கொண்­டார். நான் மிக­வும் அசிங்­க­மா­ன­வள் என்­பது போன்ற தோற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­னர். என்­னைப் பற்றி நானே அவ்­வாறு நினைக்­கும்­படி செய்­த­னர்.

"அதன் கார­ண­மாக முகக் கண்­ணாடி பயன்­படுத்­து­வ­தைத் தவிர்த்­தேன். கண்­ணா­டி­யில் என்­னைப் பார்ப்­ப­தற்­கான துணிச்­சல் வர ஆறு மாதங்­கள் தேவைப்­பட்­டன. ஆனால் அன்று, நீ வேண்­டாம் என்று ஒதுக்­கித் தள்­ளிய அதே தயா­ரிப்­பா­ளர்­க­ளி­டம் இருந்து இப்­போது தொலை­பேசி அழைப்­பு­கள் வரு­கின்­றன.

"அவர்­கள் தயா­ரிக்­கும் படங்­க­ளுக்­காக எனது கால்­ஷீட் தேவைப்­ப­டு­வ­தா­கச் சொல்­கின்­ற­னர். ஆனால் அந்த வாய்ப்­பு­களை ஏற்க மாட்­டேன் என்பது ரசி­கர்­க­ளுக்கு நன்கு தெரி­யும்," என்­கி­றார் வித்யா பாலன்.

பல ஆண்­டு­க­ளுக்கு முன்பு தமி­ழில் பாலச்­சந்­தர் இயக்­கத்­தில் நடிப்­ப­தாக இருந்­தா­ராம். படப்­பி­டிப்­புக்­காக நியூ­சி­லாந்து புறப்­பட இருந்த நிலை­யில், படத்­தில் இருந்து நீக்­கப்பட்டதை அறிந்­தா­ராம்.

"படக்­கு­ழு­வைச் சேர்ந்த ஒரு­வர்­கூட என்­னி­டம் விவ­ரம் தெரி­விக்­க­வில்லை. பய­ணத்­துக்கு முன்பு சில விவ­ரங்­க­ளைக் கேட்­ட­றி­வ­தற்­காக என் தாயார் தொடர்பு கொண்­ட­போ­து­தான் தக­வல் தெரிந்­தது.

"இத­னால் ஆத்­தி­ர­ம­டைந்து மும்பை நக­ரச் சாலை­களில் மணிக்­க­ணக்­கில் வெயி­லில் நடந்து சென்­றேன். மும்பை கட­லோ­ரத்­தில் அமர்ந்து கதறி அழுதேன். அந்த நினை­வு­கள் என்­றும் என் மனதை விட்டு நீங்­காது. அனைத்தை­யும் கடந்து இன்று ரசி­கர்­க­ளின் மனத்­தில் இடம்­பி­டித்­துள்­ளேன். எனக்கு அது­போ­தும்," என்­கி­றார் வித்யா பாலன்.

இவர் நடித்­துள்ள 'ஜல்சா' திரைப்­ப­டம் கடந்த 18ஆம் தேதி வெளி­யாகி உள்­ளது.