'இது சவாலான கதாபாத்திரம்'

'இது சவாலான கதாபாத்திரம்'

3 mins read
8706711c-1a49-4fdf-89b4-1e1a28412ef5
-

'எஃப்ஐ­ஆர்' படத்­தின் வெற்­றி­யைத் தொடர்ந்து, அடுத்து நடிக்க உள்ள படங்­களில் கவ­னம் செலுத்­தத் தொடங்கி உள்­ளார் விஷ்ணு விஷால். அவர் நடிப்­பில் உரு­வா­கும் 'மோகன்­தாஸ்' படம் வேக­மாக வளர்ந்து வரு­கிறது.

முரளி கார்த்­திக் இயக்­கும் இந்­தப் படத்­துக்­காக தனது உடல் மொழி­யில் பல மாற்­றங்­க­ளைக் கொண்டு வர­வேண்டி இருந்­த­தா­கச் சொல்­கி­றார் விஷ்ணு.

"உதா­ர­ணத்­துக்கு, இப்­ப­டம் முழு­வ­தும் நான் கண்­ணாடி அணிந்­தி­ருக்க வேண்­டும். நான் இது­வரை குளிர்­கண்­ணாடி மட்­டுமே அணிந்­துள்­ளேன். அத­னால் பார்­வைக்­ கு­றை­பாட்­டுக்­கான கண்­ணா­டியை அணி­வ­தில் சிர­மம் ஏற்­பட்­டது.

"எனவே உண்­மை­யான தேவைக்­காக முகக்­கண்­ணாடி அணி­ப­வர்­களை சில நாள்­கள் கவ­னித்­தேன். அவர்­கள் எப்­படி கண்­ணா­டி­யைக் கையாள்­கி­றார்­கள், எப்­போது அதை, எதற்காகக் கழற்­று­கி­றார்­கள், எப்படி சுத்­தம் செய்­கி­றார்­கள் என்­ப­தைத் தெரிந்து கொண்­டேன்.

"கண்­ணா­டி­யின் உத­வி­யோடு நம் மன உணர்­வு­க­ளைப் பல­வி­த­மாக வெளிப்­ப­டுத்த முடி­யும். உதா­ர­ண­மாக, அதை வேக­மாக பின்­னுக்கு நகர்த்­தி­னால் கோபம் என்று அர்த்­தம். கண்­ணா­டி­யின் ஃபிரேம் பகு­தியை இரு விரல்­க­ளால் பிடித்­துக் கொண்­டால் நாம் ஏதோ சிந்­திப்­ப­தாக எதி­ரில் இருப்­ப­வர்­கள் புரிந்­து­கொள்­வார்­கள்.

"ஆனால் இதை மனத்­திற்­கொண்டு நடிக்­கும்­போது, அது இயல்­பாக இருக்க வேண்­டும். நடிப்­புக்­கா­கச் செய்­கி­றோம் என்­பதை ரசி­கர்­கள் புரிந்­து­கொண்­டால் நம் நடிப்பு எடு­ப­டா­மல் போய்­வி­டும்," என்­கி­றார் விஷ்ணு விஷால்.

என்­ன­தான் கவ­ன­மா­கச் செயல்­பட்­டா­லும், கண்­ணாடி அணிந்­து­கொண்டு சண்­டைக் காட்­சி­களில் நடிப்­பது மிக­வும் ஆபத்­தா­னது என்று சொல்­ப­வர், இயக்­கு­நர் அளித்த தைரி­யத்­தால் அவற்­றில் நடித்­த­தா­கக் கூறு­கி­றார்.

"ஒரு குறிப்­பிட்ட சண்­டைக்­காட்­சி­யில் எதி­ரி­கள் என்னை முகத்­தில் தாக்­கும்­போது, என் கண்­ணாடி நொறுங்­கி­வி­டும். எனி­னும் எனது கதா­பாத்­தி­ரத்­திற்கு கண்­ணா­டி­யைக் கழற்­றி­னால் எதி­ரில் உள்ள எது­வுமே தெளி­வா­கத் தெரி­யாது என்­ப­தால், அதைக் கழற்­றா­மல் எதி­ரி­க­ளு­டன் மோத வேண்­டி­யி­ருந்தது.

"சற்றே கவ­னக்­கு­றை­வாக இருந்­தா­லும், உடன் நடிக்­கும் சண்­டைக் கலை­ஞர்­கள் நடிப்­புக்­காக விடும் குத்து என் முகத்தை வீங்­கச் செய்­து­வி­டும். இந்­தப் பயம் மன­துக்­குள் இருந்­தா­லும் அதை வெளிப்­ப­டுத்­திக் கொள்­ளா­மல் சமா­ளிக்க முயன்­றேன்.

"நான் பிற­ரைத் தாக்­கும்­போ­தும் ஓடும்­போ­தும் மிகுந்த கவ­னம் தேவைப்­பட்­டது. எப்­ப­டியோ, அந்­தக் காட்­சி­கள் இயல்­பா­க­வும் நன்­றா­க­வும் பட­மாக்­கப்­பட்­டுள்­ளன," என்று சொல்­லும் விஷ்ணு விஷால், இந்­தப் படத்­தில் தாம் வச­னம் பேசும் வித­மும் மாறு­பட்­ட­தாக இருக்­கும் என்­கி­றார்.

அதி­க­மாக பயப்­படும் இளை­ஞர் எப்­ப­டிப் பேச வேண்­டும் என்­பது குறித்து இயக்­கு­நர் முர­ளி­யு­டன் விரி­வாக ஆலோ­சித்­தா­ராம். முத­லில் வச­னங்­களை மெது­வாக, நிதா­ன­மா­கப் பேசு­வது என்று முடிவு செய்­துள்­ள­னர். பிறகு அவ்­வாறு இழுத்­த­டித்­துப் பேசி­னால் படத்­தின் நீளம் அதி­க­மாகி, ரசி­கர்­க­ளுக்கு போர­டிக்­கும் என்று தோன்­றவே, வச­னங்­க­ளின் தன்­மைக்­கேற்ப வேகம், நிதா­னம் என்­பதை முடிவு செய்­து­கொள்­வது என்று முடி­வெ­டுத்­துள்­ள­னர்.

"இந்­தப் படத்­தில் நடி­கர் இந்­தி­ர­ஜித் காவல்­துறை அதி­கா­ரி­யாக நடித்­துள்­ளார். அவ­ரது நடிப்பு என்னை அசர வைத்­துள்­ளது. ஒரு காட்­சி­யில் அவர் உணர்­வு­பூர்­வ­மாக நடித்த தைக் கண்டு, நான் பேச வேண்­டிய வச­னத்தை மறந்­து­விட்­டேன் என்­றால் பார்த்­துக்­கொள்­ளுங்­கள்.

"வச­னம் பேசு­வ­தில் தொடங்கி, தோற்­றம், உடல்­மொழி எனப் பல­வி­த­மான மெனக்­கெ­டல்­கள் தேவைப்­பட்­டன. அவை அனைத்­தி­லும் எந்­த­வித குறை­யும் வைக்­கா­மல் உழைத்­தி­ருக்­கி­றேன். எனவே 'ராட்­ச­சன்' படத்­துக்­குப் பிறகு 'மோகன்­தாஸ்' எனக்கு மற்­றொரு வெற்­றிப்­ப­ட­மாக அமை­யும் என்ற நம்­பிக்கை உள்­ளது," என்­கி­றார் விஷ்ணு விஷால்.

'மோகன்­தாஸ்' படத்­தின் குறு முன்­னோட்­டக் காட்­சித் தொகுப்­பில், 'இன்று நீ என்ன செய்­கி­றாய் என்­பதே எதிர்­கா­லத்தை தீர்­மா­னிக்­கும்' என்ற வரி இடம்­பெற்­றுள்­ளது.

"இது உண்­மைக்­க­தையை மட்­டுமே தழுவி எடுக்­கப்­பட்ட படம் என்று கூறி­ இய­லாது. படத்­தில் இடம்­பெற்­றுள்ள சில சம்­ப­வங்­கள் சில­ரது வாழ்க்­கை­யில் நடந்­த­வை­யாக இருக்­க­லாம். என­வே­தான் முன்­னோட்­டத்­தின் முடி­வில், இது உண்­மைக் கதை­யா­க­வும் இருக்­கக்­கூ­டும் என்ற வரி இடம்­பெற்­றுள்­ளது," என்­கி­றார் இயக்­கு­நர் முரளி கார்த்­திக்.