'நீதிக்காகப் போராட வேண்டும்'

'நீதிக்காகப் போராட வேண்டும்'

1 mins read
46cffff9-5b9f-4478-a04b-153a3d6eef8e
'ராக்கெட்ரி' படத்தில் இடம்பெறும் காட்சியில் மாதவன், சிம்ரன். -

"என் வாழ்க்­கையைத் திரைப்­ப­ட­மாக எடுக்க நடி­கர் மாத­வன்­தான் பொருத்­த­மா­ன­வர்," என்று முன்­னாள் இஸ்‌ரோ விஞ்­ஞானி நம்பி நாரா­ய­ணன் கூறி­யுள்­ளார்.

இவ­ரது வாழ்க்­கை­யைச் சித்­தி­ரிக்­கும் வகை­யில் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது 'ராக்­கெட்­ரி : தி நம்பி எஃபெக்ட்' திரைப்­ப­டம்.

எதிர்­வ­ரும் ஜூலை 1ஆம் தேதி இப்­ப­டம் திரை­ய­ரங்­கு­களில் வெளி­யா­கிறது. இந்­நி­லை­யில் இதன் முன்­னோட்­டக்காட்­சித் தொகுப்பை துபா­யில் வெளி­யிட்­ட­னர்.

அதில் கலந்துகொண்டு பேசிய விஞ்­ஞானி நம்பி நாரா­ய­ணன், தமது வாழ்க்கை வர­லாற்­றைத் திரைப்­ப­ட­மாக எடுக்க பலர் முன்­வந்­த­தா­கக் குறிப்­பிட்­டார்.

"ஆனால் பொறி­யி­யல் துறைசார் அறி­வின் சாராம்­சத்­தைப் புரிந்து கொள்­ளக்­கூ­டிய ஒரு­வ­ரால் என் கதை சொல்­லப்­பட வேண்­டும் என நான் விரும்­பி­னேன். அந்­த­ வ­கை­யில், மாத­வன் ஒரு பொறி­யா­ளர் என்­ப­தால், என் கதையை அவ­ரிடம் சொல்­வது எனக்கு மிக எளி­தாக இருந்­தது.

"ஒரு ராக்­கெட் விஞ்­ஞானி, உண்­மை­யின் பாதை­யில் செல்ல வேண்­டும் என்­ப­து­தான் இந்­தப் படத்­தின் கருத்து. உங்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­பட்­டால், சோர்ந்து போய்விடக்­கூ­டாது. நீதி கிடைக்கும் வரை போராட வேண்­டும் என்ற செய்­தியை இளை­ஞர்­க­ளுக்கு இந்த படம் தெரி­விக்­கும்," என்­றார் நம்பி நாரா­ய­ணன்.

இந்­திய விண்­வெளி ஆய்வு மையத்­தில் பணி­யாற்­றி­ய­போது உளவு பார்த்­த­தாக குற்­றம்­சாட்­டப்­பட்ட இவர், பல ஆண்­டு­கள் நீடித்த சட்­டப் போராட்­டத்­துக்­குப் பின்­னர் நிர­ப­ராதி என்று விடு­விக்­கப்­பட்­டார்.