ஸ்ரீலீலா: படிப்பு, நடிப்பு இரண்டும் முக்கியம்

2 mins read

தெலுங்கு திரை­யு­ல­கில் இருந்து ஆண்­டுக்கு பத்து கதா­நா­ய­கி­க­ளா­வது கோடம்­பாக்­கத்­துக்கு இறக்­கு­மதி ஆகி­வி­டு­வர். கொரோனா விவ­கா­ரம் கட்­டுக்­குள் வந்­தி­ருப்­பதை அடுத்து, இந்த இறக்­கு­ம­திப் பட­லம் மீண்­டும் சூடு­பி­டித்­துள்­ளது.

ராஷ்­மிகா, பூஜா ஹெக்டே, கீர்த்தி ஷெட்டி ஆகி­யோ­ரின் வரி­சை­யில் தமிழ்த் திரை­யு­ல­கில் அடுத்து கள­மி­றங்­கப் போகி­றார் ஸ்ரீலீலா.

விஜய்­யின் அடுத்த படத்­தில் ராஷ்­மி­கா­தான் நாயகி. பூஜா ஹெக்­டே­வைப் பொறுத்­த­வரை 'பீஸ்ட்' பட வெளி­யீட்­டிற்­காக காத்­தி­ருக்­கி­றார்.

சூர்­யா­வின் அடுத்த படத்­தில் கீர்த்தி ஷெட்டி நாயகி­யாக ஒப்­பந்­தம் செய்­யப்­பட்­டுள்­ளதாகக் கூறப்படுகிறது.

இந்­நி­லை­யில், தனு­ஷுக்கு ஜோடி­யாக ஸ்ரீலீலா ஒப்­பந்­தம் செய்­யப்­பட்­டி­ருப்­ப­தாக ஒரு தக­வல் உலா வரு­கிறது.

ராஷ்­மிகா, பூஜா ஹெக்டே, கீர்த்தி ஷெட்டி, ஸ்ரீலீலா ஆகிய நால்­வ­ருமே கர்­நா­ட­கா­வைப் பூர்­வீ­க­மா­கக் கொண்­ட­வர்­கள். கன்­ன­டத்­தில் இரண்டு படங்­களில் நடித்து முடித்­தி­ருந்த நிலை­யில், தெலுங்கு சினிமா ஸ்ரீலீ­லாவை வர­வேற்று அர­வணைத்­தது.

'பெல்லி சண்­டாடி' படத்­தின் மூலம் தெலுங்­கில் அறி­மு­க­மான அவ­ருக்கு, வாய்ப்­பு­கள் குவிந்து வரு­கின்­றன. ரவி தேஜா­வுக்கு ஜோடி­யாக 'தமாகா' படத்­தில் நடித்து வரு­ப­வர், அடுத்து பிர­பாஸ் நடிக்­கும் புதிய படத்­தில் மூன்று நாய­கி­களில் ஒரு­வ­ராக ஒப்­பந்­த­மாகி உள்­ளார்.

ஸ்ரீலீலாவுக்கு இப்­போ­து­தான் 20 வய­தா­கிறது. மருத்­து­வம் படித்து வரு­கி­றார்.

ஒரு பக்­கம் வாய்ப்­பு­கள் குவிந்து கொண்­டி­ருக்க, இவரோ கால்­ஷீட் ஒதுக்க முடி­யா­மல் தடு­மா­று­கி­றார். கார­ணம், ஒரே சம­யத்­தில் படிப்­பை­யும் நடிப்­பை­யும் கையாள்­வது சவா­லாக இருக்­கி­ற­தாம்.

"என்னை நேரில் சந்­திக்­கும் நலன்­வி­ரும்­பி­கள் அனை­வ­ருமே படிப்பு குறித்­து­தான் விசா­ரிப்­பார்­கள். அவர்­க­ளி­டம் எனக்கு எல்­லாம் பழ­கி­விட்­டது என்று பதில் சொல்­கி­றேன். ஆனால், உண்­மை­யில் ஒவ்­வொரு நாளும் சவா­லா­ன­தாக அமை­கிறது. "படப்­பி­டிப்­புக்­குச் செல்­லும்­போது பாடப்­புத்­த­கங்­க­ளை­யும் சுமக்­கி­றேன். சிறிது நேரம் ஓய்வு கிடைத்­தா­லும் பாடங்­க­ளைப் படிக்­கி­றேன்.

"இந்த விஷ­யத்­தில் எனக்கு முன்­மா­தி­ரி­யாக சிலர் உள்­ள­னர் என்­ப­தில் நம்­பிக்கை அளிக்­கிறது. நடித்­துக்­கொண்டே அவர்­கள் படிப்­பை­யும் வெற்­றி­க­ர­மாக முடித்­துள்­ள­னர்," என்­கி­றார் ஸ்ரீலீலா.

இவ­ரைப் போல் மருத்­து­வம் படிக்­கும் சாய் பல்­லவி, ஐஸ்­வர்யா லட்­சுமி ஆகி­யோ­ரைத்­தான் முன்­மா­திரி என்று குறிப்­பி­டு­கி­றார். இரு­வ­ரை­யும் நேரில் சந்­தித்து சில அறி­வு­ரை­க­ளைப் பெற வேண்­டும் என்­றும் விரும்­பு­கி­றா­ராம்.

எந்தக் கார­ணத்தை முன்­னிட்­டும் தம்­மால் நடிப்பு, படிப்பு ஆகிய இரண்­டை­யும் கைவிட முடி­யாது என்று குறிப்­பி­டு­ப­வர், மருத்­து­வப் படிப்பை முடித்­த­தும் மக்­க­ளுக்கு சேவை­யாற்ற விரும்­பு­வ­தா­க­வும் சொல்­கி­றார். தமி­ழில் முன்­னணி நாய­கர்­க­ளு­டன் நடிக்க விரும்­பு­வ­தா­கக் கூறும் ஸ்ரீலீலா, தமக்கு விருப்­ப­மான நாய­கர்­கள் என்று பெரிய பட்­டி­யலே வைத்­துள்­ளார். எனி­னும், தெலுங்­கில் முன்பே ஒப்­புக்­கொண்­டுள்ள படங்­களை முடிக்க வேண்­டி­யது தனது கடமை என்­றும் சுட்­டிக்­காட்­டு­கி­றார்.