'யார் அந்த பத்மா என்று கேட்பார்'

'யார் அந்த பத்மா என்று கேட்பார்'

1 mins read
f2d46d21-4eb1-47ff-948e-89531c60c615
தன் மகள்களுடன் எம்.எஸ்.விஸ்வநாதன். -

காலஞ்­சென்ற இசை­ய­மைப்­பா­ளர் எம்.எஸ்.விஸ்­வ­நா­த­னுக்கு பாலக்­காடு பகு­தி­யில் நினை­வி­டம் கட்ட ஒரு கோடி ரூபாய் ஒதுக்கி உள்­ளது கேரள அரசு. இந்­நி­லை­யில், தமது தந்­தை­யின் இசைச் சேவை உரிய வகை­யில் அங்­கீ­க­ரிக்­கப்­பட வில்லை என்­கி­றார் எம்.எஸ்.வி. மகள் லதா.

சுமார் எழு­நூ­றுக்­கும் மேற்­பட்ட படங்­க­ளுக்கு இசை­ய­மைத்­துள்ள எம்.எஸ்.வி.க்கு இந்­திய அர­சின் பத்ம விரு­து­கள் அவர் வாழும்­வரை அறி­விக்­கப்­ப­டவே இல்லை என்று வருத்­தத்­து­டன் சுட்­டிக்­காட்­டு­கி­றார்.

"என் தந்­தை­யின் திறமை குறித்து எங்­கள் குடும்­பத்­தி­ன­ரை­விட, ரசி­கர்­க­ளை­விட, அவ­ரு­டன் இணைந்து பணி­யாற்­றிய திரையுலக, அர­சி­யல் பிர­மு­கர்­கள் பல­ருக்கு நன்­றா­கத் தெரி­யும். எனி­னும் அவ­ரது திற­மைக்கு நியா­ய­மாக கிடைத்­தி­ருக்க வேண்­டிய அங்­கீ­கா­ரம், அவர் வாழ்ந்த காலத்­தி­லேயே கிடைக்­காத ஆதங்­கமுண்டு.

"இது­கு­றித்து அப்­பா­வி­டம் பல­முறை கேட்­டி­ருக்­கி­றோம். 'இந்த ஆண்­டும்­கூட உங்­க­ளுக்கு பத்ம விருது அறி­விக்­கப்­ப­ட­லை­யேப்பா' என்று வருத்­தப்­ப­டு­வோம்.

"அவரோ, 'யாரும்மா அந்த பத்மா' என்று வெள்­ளந்­தி­யாகக் கேட்­பார்.

"பத்ம விரு­து­கள் பற்றி விவ­ரித்­தால், 'மக்­க­ளு­டைய அன்பு­தான் பெரிது. அது எனக்கு அள­வுக்கு அதி­க­மா­கவே கிடைத்­துள்­ளது' என்று சொல்­லிச் சிரிப்­பார்.

"அப்­பா­வின் மறை­வுக்­குப் பிறகு, ஒரே வாரத்­தில் 'என்னுள்­ளில் எம்.எஸ்.வி' என்ற இசை நிகழ்ச்சி நடத்தி அவ­ருக்கு இளை­ய­ராஜா அண்­ணன் இசை­அஞ்­சலி செலுத்­தி­யதை மறக்கவே முடி­யாது," என்கிறார் லதா.