விஜய் நடிக்கும் 66வது படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதால், சற்று ஓய்வு கிடைத்துள்ளதாம்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தனது கல்லூரி கால நண்பர்களை அண்மையில் சந்தித்துள்ளார் விஜய். கலகலப்பாக நடந்து முடிந்த இந்தச் சந்திப்புக்குப் பிறகு, இனி ஆண்டுக்கு ஒருமுறையாவது இவ்வாறு ஒன்றுகூட வேண்டும் என முடிவெடுத்துள்ளனர்.
மேலும், நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்காக இந்தச் சந்திப்புக்கு விஜய் ஏற்பாடு செய்யவில்லையாம். கொரோனா நெருக்கடி வேளையில் இவரது நண்பர்கள் சிலருக்கு தொழில் ரீதியில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதை அறிந்து கவலைப்பட்டவர், நேரில் சந்தித்தபோது அதுகுறித்து கேட்டறிந்துள்ளார். பிறகு அந்த நண்பர்களுக்குப் பண உதவியும் செய்துள்ளாராம்.
'விஜய் 66' படத்தில் இந்தி நடிகர் விவேக் ஓபராய் வில்லன் என்றும் ராஷ்மிகா மந்தனா தான் நாயகி என்றும் கூறப்படுகிறது.

