'திருக்குறளை நேசிக்கிறேன்'

'திருக்குறளை நேசிக்கிறேன்'

4 mins read
9bca99d4-de05-4c3e-b0ad-a4fd639823eb
-

தன் தாத்­தா­வுக்­கும் தமிழ்த் திரை­யு­ல­குக்­கும் இடையே இருந்த உறவு முடிந்­து­வி­டக்­கூ­டாது என்­ப­தற்­கா­கவே திரை­யு­ல­கில் கால்­ப­தித்­த­தா­கச் சொல்­கி­றார் இளம் நாயகி சாய் பிரியா தேவா.

தமி­ழில் ராகவா லாரன்ஸ் நடித்த 'சிவ­லிங்கா' படத்­தில் நடி­கர் ஷக்­திக்கு ஜோடி­யாக நடித்­த­வர் இவர். பின்­னர் மலை­யா­ளத்­தில் நடித்த படங்­கள் வெற்றி பெறவே, அங்கு சில காலம் கவ­னம் செலுத்தி வந்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், இயக்­கு­நர் எழி­லின் 'யுத்த சத்­தம்' படத்­தின் மூலம் மீண்­டும் தமி­ழுக்கு வந்­துள்­ளார்.

"ஆனால் இம்­முறை கதா­நா­ய­கி­யாகத் திரும்­பி­யுள்­ளேன். இதுவே பெரிய வளர்ச்­சி­யா­கத் தோன்­று­கிறது.

"எனக்­கும் சினி­மா­வுக்­கும் உள்ள இந்த பந்­தம் என் தாத்­தா­வின் ஆசி­யால் ஏற்­பட்­ட­தா­கக் கரு­து­கி­றேன். கார­ணம், ஒரு காலத்­தில் அவரை தெரி­யா­த­வர்­கள் தமிழ்த் திரை­யு­ல­கில் இருந்தி­ருக்க முடி­யாது," என்­கி­றார் சாய் பிரியா.

சென்­னை­யில் அந்த காலத்­தில் மின்ட் பகு­தி­யில் அமைந்­தி­ருந்த 'முரு­கன் டாக்­கீஸ்' திரை­ய­ரங்­கம் மிக­வும் பிர­ப­லம். அதன் உரி­மை­யா­ளர் பர­ம­சி­வம் முத­லி­யா­ரின் பேத்­தி­தான் சாய் பிரியா.

"அப்பா கப்­பல் பொறி­யி­ய­லா­ளர். அம்மா ஆசி­ரியை. தாத்­தா­வின் மர­ப­ணுக்­கள்­தான் என்­னுள் இருப்­ப­தாக கரு­து­கி­றேன். என் கொள்ளு தாத்தா சென்னை திரை­ய­ரங்­கைத் தொடங்கி வெற்­றி­க­ர­மாக நடத்­தி­னார். என் தாத்தா பர­ம­சி­வம் அதை சிறப்­பா­கப் பரா­ம­ரித்­தார்.

"எங்­கள் திரை­ய­ரங்­கில் எம்­ஜி­ஆ­ரின் பல படங்­கள் நிறைய நாள்­கள் வெற்­றி­க­ர­மாக ஓடின. அத­னால் எம்­ஜி­ஆ­ரும் தாத்­தா­வும் நெருங்­கிய நண்­பர்­க­ளாக இருந்­த­னர்.

"அப்­போ­தெல்­லாம் சினிமா குறித்து, திரை­யு­லக நிகழ்­வு­கள் பற்றி பெரி­ய­வர்­கள் பேசிக்­கொள்­வதை பல­முறை கேட்­டி­ருக்­கி­றேன்," என்று சிறு வயது நினை­வு­களை அசை­போ­டு­கி­றார் சாய் பிரியா.

இவர் பேசும் தமிழ் அசத்­த­லாக உள்­ளது. தாயார் தமிழ் ஆசி­ரியை என்­ப­தால் தமி­ழில் சர­ள­மா­கப் பேச முடி­கி­ற­தாம். அது மட்­டு­மல்ல, சென்னை பெண்­ணான இவர், எந்த மேடை­யில் ஏறி­னா­லும், ஒரு திருக்­கு­றளை சொன்ன பிறகே பேசத்­தொ­டங்­கு­வா­ராம்.

"அம்மா தேவிகா தமிழ் ஆசி­ரியை என்­ப­தால் எனக்­குள் தமிழ்ப் பற்றை வளர்த்­தார். தின­மும் திருக்­கு­றள் சொல்­லிக்­கொ­டுப்­பார். அத­னால் மேடை ஏறி­ய­தும் தானா­கவே திருக்­கு­றள் வந்­து­வி­டும்.

"பள்­ளிப்­ப­டிப்பை முடித்த கையோடு, லண்­டன் சென்று பல்­லூ­ட­கத் துறை­யில் பட்­டம் பெற்­றேன். பின்­னர் சென்னை வந்­த­தும் நடிப்­புப் பயிற்­சி­யும் மேற்­கொண்­டேன்.

"ஆனால் நான் சினி­மா­வில் நடிப்­பதை வீட்­டில் விரும்­ப­வில்லை. எனக்கு உள்ள ஆர்­வத்­தைப் பார்த்­த­தும் அரை மன­து­டன் சம்­ம­தித்­த­னர். இப்­போது எல்­லாருமே என் பக்­கம் வந்­து­விட்­ட­னர்.

"தொடக்­கம் முதல் அம்­மா­தான் ஆத­ர­வாக இருந்­தார். நடிப்­புப் பயிற்­சி­யு­டன் சில விளம்­ப­ரப் படங்­க­ளி­லும் நடிக்­கும் வாய்ப்பு கிடைத்­த­போது வீட்­டில் பேசி நடிக்க அனு­மதி பெற்­றுத் தந்­தார்," என்­கி­றார் சாய் பிரியா.

"இயக்­கு­நர் எழில் சாரின் 'யுத்த சத்­தம்' படத்­திற்­கான நடிப்­புத் தேர்வு நடை­பெ­று­வ­தாக தக­வல் கிடைத்­த­போது உடனே புறப்­பட்­டுச் சென்­றேன். அதிர்ஷ்­ட­வ­ச­மாக அந்­தப் படத்­தின் நாய­கி­யாக தேர்வு பெற்­றேன். எழில் சார் இயக்­கத்­தில் கௌதம் கார்த்­திக்­கு­டன் இணைந்து நடித்­தது பெரு­மை­யாக உள்­ளது.

"சிறு வய­தில் சினிமா மீது அதீத ஆர்­வம் ஏற்­பட்­டது. எதிர்­கா­லத்­தில் சினி­மா­வில்­தான் சாதிக்க வேண்­டும் என எனக்­குள் நானே ஒரு விதையை விதைத்­துக்­கொண்­டேன். அது­தான் இப்­போது வளர்ந்து பெரி­தாகி என் ஆசையை நிறை­வேற்றி உள்­ளது.

"இதற்கு எனது முன்­னோர்­க­ளின் ஆசி­யும் கார­ணம் என்று நம்­பு­கி­றேன். இல்­லை­யெ­னில் நான் உங்­கள் முன்பு நடி­கை­யாக இன்று பேசிக் கொண்­டி­ருக்க முடி­யாது. ஏதே­னும் வெளி­நாட்­டில் வேலை பார்த்­துக் கொண்­டி­ருந்­தி­ருப்­பேன். அல்­லது வேறு துறை­யில் பணி­யாற்­றிக்கொண்­டி­ருந்­தா­லும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை," என்­கி­றார் சாய் பிரியா.

மலை­யா­ளத்­தில் இவர் நடித்து வெற்­றி­பெற்ற 'என்டே உம்­மண்டே பேரு' படத்­தைத் தயா­ரித்த நிறு­வ­னமே தமி­ழில் ஒரு படத்தை தயா­ரிக்க உள்­ள­தாம். அதில் சாய் பிரி­யா­தான் கதா­நா­யகி.

பாதி படப்­பி­டிப்பு முடி­வ­டைந்­துள்­ளது. மேலும், வடி­வு­டை­யான் இயக்­கத்­தில் 'பாம்­பாட்­டம்' படத்­தில் நடிக்க ஒப்­பந்­த­மாகி உள்­ளார். இதில் 'நான் அவ­னில்லை' ஜீவன் நாய­க­னாக நடிக்­கி­றார்.

இது­வரை தனக்கு வாய்ப்பு கேட்டு இவர் யாரை­யுமே அணு­கி­ய­தில்­லை­யாம். தமக்­கான வாய்ப்­பு­கள் தன்­னால் தேடி வரும் என்ற நம்­பிக்­கை­யு­டன் காத்­தி­ருப்­ப­தா­கச் சொல்­கி­றார். மேலும், இந்த கொள்­கை­யு­டன் இருப்­ப­தால் தான் தமக்கு தொடக்­கம் முதலே திரை உல­கில் ஒரு மரி­யாதை இருப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

"எதிர்­கா­லத்­தில் விஜய், அஜித், சூர்யா, சிம்பு என பெரிய நடி­கர்­கள் அனை­வ­ரு­ட­னும் நடிக்க வேண்­டும் என விரும்­பு­கி­றேன். அதே­போல் பெரிய இயக்­கு­நர்­க­ளின் படங்­க­ளி­லும் நடிக்க ஆசை.

"சிறு வய­தில் என் மன­துக்­குள் நானே விதைத்த விதை என்னை நடி­கை­யாக்கி உள்­ளது. அதே­போல் எனது எதிர்­கால விருப்­பங்­களும் நிச்­ச­யம் நிறை­வே­றும் என உறு­தி­யாக நம்­பு­கி­றேன்," என்று கண்­களில் கன­வு­கள் மின்­னச் சொல்­கி­றார் சாய் பிரியா தேவா.

, :

  

சாய்

பிரியா