'திக்குமுக்காடிப் போனேன்'

3 mins read
477a7881-059d-43be-8df9-b239b27b78e9
-

அமை­தி­ திலகம் என்று நடிகை 'கயல்' ஆனந்தியை தயக்­க­மின்­றிக் குறிப்­பி­ட­லாம். அந்த அள­வுக்கு அமை­தி­யா­ன­வர், மிகுந்த பொறு­மை­சாலி என்று கோடம்­பாக்­கத்­தில் பெயர் வாங்கி உள்­ளார்.

திரு­ம­ணத்­துக்­குப் பிறகு தமக்கு நல்ல வாய்ப்­பு­கள் தேடி­வ­ரு­வது உற்­சா­கம் அளிப்­ப­தா­க­வும் தர­மான கதை­களை மட்­டுமே தேர்ந்­தெ­டுத்து நடித்து வரு­வ­தா­க­வும் அண்மைய பேட்­டி­யில் இவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனந்தி இப்­போது நடித்து வரும் படம் 'நதி'. தாம­ரைச் செல்­வன் இயக்­கு­கி­றார்.

மது­ரை­யில் முதற்­கட்­டப் படப்­பி­டிப்பை நடத்தி உள்­ள­னர். அங்­குள்ள பர­ப­ரப்­பான வீதி­களில் காட்­சி­களைப் பட­மாக்­கி­ய­போது பெருந்­தி­ர­ளாக ரசி­கர்­கள் கூடி­விட்­ட­ன­ராம். அப்­போது ஏற்­பட்ட அனு­ப­வங்­களை விவ­ரித்­துள்­ளார் ஆனந்தி.

"இது­போன்ற வெளிப்­புறப் படப்­பி­டிப்­பு­களின் போது­தான் சினிமா என்­பது எவ்வளவு சக்தி வாய்ந்த ஊட­கம் என்­ப­தைப் புரிந்­து­கொள்ள முடி­கிறது. திரை­யு­ல­கக் கலை­ஞர்­கள் மீது ரசி­கர்­கள் மிகுந்த அன்­பும் பாசமும் கொண்­டி­ருக்­கி­றார்­கள். மது­ரை­யில் ரசி­கர்­களின் அன்பு என்­னைத் திக்­கு­முக்­காட வைத்­தது.

"நான் தங்­கி­யி­ருந்த தங்குவிடு­தி­யில் இருந்து காலை ஐந்து மணிக்கு படிப்­பிடிப்புக்­காக வெளியே கிளம்­பு­வேன். அந்த நேரத்­தி­லும்­கூட ஏரா­ள­மான ரசி­கர்­கள் எனக்­கா­கக் காத்­தி­ருப்­பார்­கள். அதி­லும், பலர் குடும்­ப­மாக வந்­தி­ருப்­ப­தைப் பார்த்து பல­முறை வியந்துபோயி­ருக்­கி­றேன்.

"படப்­பி­டிப்பு நடக்­கும் இடத்­தி­லும் தின­மும் நூற்­றுக்­க­ணக்­கா­னோர் காத்­தி­ருந்­த­னர். நான் எனது கேர­வே­னில் இருந்து இறங்­கி­னால் போதும், உடனே கைதட்டி ஆர­வா­ரம் செய்­வார்­கள்.

"படப்­பி­டிப்புக்காக வெவ்­வேறு இடங்­களுக்­குச் செல்­லும்­போதும் விட­மாட்­டார்­கள். ஏரா­ள­மா­னோர் எங்­க­ளைப் பின்­தொடர்­வது வாடிக்­கை­யாக இருந்­தது.

"இதன் மூலம் கலை­ஞர்­கள் மீது தமிழ் மக்­கள் எந்த அளவு அன்பு வைத்­தி­ருக்­கி­றார்­கள் என்­பதை என்­னால் உணர முடிந்­தது. இது நிபந்­த­னை­யற்ற ஆத­ரவு என்­பதை­யும் நாம் மன­தில் கொள்ள வேண்­டும்," என்­கி­றார் ஆனந்தி.

மது­ரை­யில் சுட்­டெ­ரிக்­கும் வெயி­லில் படப்­ப­டிப்பை நடத்­தி­ய­தால், வெப்­பம் தாங்க முடி­யா­மல் அவ­திப்­பட்­டா­ராம். இருப்­பி­னும் வேடிக்கை பார்க்­கக்கூடிய ரசி­கர்­கள் அவ்­வப்­போது குரல் எழுப்பி உற்­சா­கப்­ப­டுத்­தி­ய­தால், சோர்வை மீறி நடிக்க முடிந்­த­தாம்.

அது மட்­டு­மல்ல. 'நதி' படத்­துக்­காக ஒரு பேருந்­தின் மீது ஏறி நின்று நட­ன­மும் ஆடி­யுள்­ளார் ஆனந்தி.

"ஒரு பாடல் காட்­சிக்­காக இவ்­வாறு நட­ன­மாட வேண்­டி­யி­ருந்­தது. இயக்­கு­நர்­கூட சற்று பயந்­தார். ஆனால் நான் துணிச்­ச­லு­டன் நட­னமா­டி­னேன்.

"பொது­வாக நான் அமை­தி­யான பெண்­தான். அதே­ச­ம­யம் சாகச முயற்­சி­களில் ஈடு­ப­டு­வது, அபா­ய­க­ர­மான விஷ­யங்­களைச் செய்­வதில் எனக்கு மிகுந்த ஆர்­வம் உண்டு. இது பலருக்கும் தெரி­யாது.

"பேருந்து நட­னக் காட்­சிக்­காக ஒரு­முறை ஒத்­திகை பார்த்­தோம். அதன் பிறகு கச்­சி­த­மாக நடித்து முடித்­தேன். எனி­னும் இவ்­வாறு நட­ன­மா­டு­வது அவ்­வ­ளவு எளி­தல்ல. கொஞ்­சம் கவனக்­கு­றை­வாக இருந்­தா­லும் நமது முயற்சி ஆபத்­தில் முடிந்து­வி­டும்.

"ஓடும் பேருந்­தில் நட­ன­மா­டும்­போது அதன் மையப் பகு­தி­யில் நிற்­பதை உறுதிசெய்துகொள்ள வேண்­டும். பேருந்­தின் ஓரப் பகு­திக்­குச் செல்­லக்­கூடாது. இயக்­கு­நர் சொல்­வது மட்­டுமே உங்­கள் காதில் ஒலிக்க வேண்­டும். வேறு எதி­லும் கவனம் செலுத்­தக்­கூடாது.

"இதை­யெல்­லாம் கவ­னத்­தில் கொண்டு நடித்து முடித்­தேன். இந்­தப் பேருந்து நடனம் ரசி­கர்­களால் நிச்­ச­யம் பாராட்­டப்­படும். இதற்­காக படக்­கு­ழு­வில் இருந்த அனை­வ­ரும் என்னைப் பாராட்டி­னர்," என்­கி­றார் ஆனந்தி.

தமிழ் சினிமா உல­கில் சம்­பள விஷ­யத்­தில் கறார் காட்­டாத ஒரு­சில நடி­கை­களில் இவ­ரும் ஒருவர்.

படப்­பி­டிப்­புக்கு தாம­த­மாக வரு­கிறார், நடிப்­பில் கவ­னம் செலுத்­த­வில்லை என்­பன போன்ற எந்த புகார்­க­ளுக்­கும் ஒரு­மு­றை­கூட ஆனந்தி ஆளா­னது இல்லை.