மண்வளம் போற்றும் ஸ்ரீநிதி

மண்வளம் போற்றும் ஸ்ரீநிதி

3 mins read
2e25e7ba-dbc0-482f-81e9-b6f75e7f690b
-

அஜய் ஞான­முத்து இயக்­கத்­தில் விக்­ரம் நாய­க­னாக நடிக்­கும் 'கோப்ரா' படத்­தில் அவ­ரது ஜோடி­யாக நடித்­துள்­ளார் ஸ்ரீநிதி ஷெட்டி. படம் இன்­னும் வெளி­யா­கா­விட்­டா­லும் தமிழ் ரசி­கர்­க­ளுக்கு இவரை நன்கு தெரிந்­தி­ருக்­கும்.

'கேஜி­எஃப்' படத்­தின் மூலம் திரை­யு­ல­கில் அறி­மு­க­மா­ன­வர். முதல் படத்­தின் பிரம்­மாண்ட வெற்றி இவரை நாடு முழுவதும் உள்ள திரை ரசி­கர்­க­ளி­டம் கொண்டு போய் சேர்த்­துள்­ளது.

உலக அள­வில் பெயர் வாங்­கி­யுள்ள மாடல் அழகி, நடிகை, மண் வளம் குறித்து பிர­சா­ரம் மேற்­கொள்­ளும் சமூக ஆர்­வ­லர் என்று ஸ்ரீநிதி பல்வேறு விஷ­யங்­களில் தம்மை ஈடு­ப­டுத்­திக்கொண்டு, பர­பரப்­பாக வலம் வரு­கி­றார்.

'கேஜி­எஃப்' படத்­தின் இரண்­டாம் பாகம் வெளியான பிற­கு­தான் அடுத்த படத்­தில் நடிக்க வேண்­டும் என முடிவு செய்­தி­ருந்­தா­ராம். ஆனால் 'கோப்ரா' படத்­தின் கதை­யும் அதில் தனக்­கான கதா­பாத்­தி­ரத்­தின் தன்­மை­யும் மனதை மாற்­றி­விட்­ட­தா­கச் சொல்­கி­றார்.

"கடந்த 2016ஆம் ஆண்டு என்­னு­டன் திரை­யு­ல­கில் அறி­மு­க­மான மற்ற நடி­கை­கள் எல்­லாம் பத்து படங்­களில் நடித்து முடித்­துள்­ள­னர். நான் மட்­டும் இரண்டு படங்­க­ளில்­தான் நடித்­தி­ருக்­கி­றேன். இந்­தக் கவலை எனக்­குள்­ளும் எழுந்­தது.

"ஆனால் ஒரு விஷ­யத்தை மறந்துவிடக்கூடாது. ஒரு­வேளை கன்­ன­டம், தெலுங்­கில் நானும் பத்து படங்­களில் நடித்­தி­ருந்­தா­லும்­கூட இந்­த­ளவுக்கு புகழ் கிடைத்­தி­ருக்­குமா என்­பது சந்­தே­கம்­தான். 'கேஜி­எஃப்' என்ற ஒற்­றைப் படம் என்னை இந்­திய அள­வில் அறி­யப்­பட்ட நடி­கை­யாக மாற்­றி­யுள்­ளது. அத­னால் ஆறு ஆண்­டு­களில் இரண்டு படங்­கள் மட்­டுமே நடித்­தி­ருக்­கி­றோம் என்ற கவ­லையோ, அதிக எண்­ணிக்கை­யி­லான படங்­களில் நடிக்­க­வில்லை என்ற வருத்­தமோ எனக்கு அறவே இல்லை," என்­கி­றார் ஸ்ரீநிதி.

சிறு வயது முதலே இவர் விக்­ர­மின் தீவிர ரசி­கை­யாம். விக்­ரம் நடித்­துள்ள அனைத்து படங்­க­ளை­யும் ஒன்­று­வி­டா­மல் பார்த்­துள்­ளா­ராம்.

'கோப்­ரா' படத்தில் இவரை ஒப்­பந்­தம் செய்­வதற்கு முன்பு, தாம் இயக்­கி­யுள்ள இரண்டு படங்­க­ளை­யும் பார்க்­கு­மாறு கேட்­டுக் கொண்டுள்­ளார் அஜய் ஞான­முத்து.

"ஒரே நாளில் இரண்டு படங்­க­ளை­யும் பார்த்து முடித்­தேன். காட்சி அமைப்பு, கதா­பாத்­தி­ரங்­கள் என அனைத்து வகை­யி­லும் அசத்தி இருந்­தார் அஜய். அவர் திற­மை­யான இயக்­கு­நர் என்­பதை உணர்ந்­து­கொண்­டேன்.

"'கோப்ரா' படத்­தில் என்னை இன்­னும் அழ­காக, குடும்­பப்­பாங்­காக காட்­டி­யி­ருக்­கி­றார். அதற்­காக நன்றி தெரி­விக்­கி­றேன். இந்­தப் படம் இந்­திய அள­வில் வெளி­யீடு காண வேண்­டிய படைப்பு. விக்­ரம் ஏழு­வி­த­மான தோற்­றங்­களில் வந்து போவார். ஒவ்­வொரு தோற்­ற­மும் வித்தி­யா­ச­மாக, அதே­ச­ம­யம் ரசி­கர்­களை மிரள வைக்­கும் வகை­யில் இருக்­கும்.

"ஏ.ஆர்.ரகு­மா­னின் பின்­னணி இசைக்கு ஈடு இணையே இல்லை. இந்­தப் படத்­துக்­காக கடும் உழைப்­பைக் கொடுத்­தி­ருக்­கி­றார். இவ்­வளவு சீக்­கி­ரத்­தில் ரகு­மான் இசை­யில் நடிப்பேன் என்று கன­வில்­கூட நினைத்­துப் பார்த்­த­தில்லை," என்று உற்­சா­கத்­து­டன் பேசு­கி­றார் ஸ்ரீநிதி.

மாட­லிங் உல­கில் ஸ்ரீநி­திக்கு இப்­போ­தும் பெரும் வர­வேற்பு உள்­ளது. உலக அள­வில் மாட­லிங் அழ­கி­க­ளுக்­கான போட்­டி­யில் பங்கேற்ற அனு­ப­வம் உள்­ள­வர். இந்­திய அள­வில் மிகச்­சி­றந்த 'மாடல்' அழ­கி­யாக தேர்வு பெற்­ற­வர்.

படப்­பி­டிப்பு, மாட­லிங் நிகழ்­வு­க­ளுக்கு மத்தி­யில் 'மண் வளம் காப்­போம்' என்ற இயக்­கத்­துக்­காக பிர­சார குறும்­ப­டங்­க­ளி­லும் நடித்­துள்­ளார். மண் வளத்தை காக்­கும் பொறுப்­பும் கடமை­யும் அனை­வ­ருக்­கும் உள்­ளது எனப் பொறுப்­பு­டன் பேசு­கி­றார்.

"நாடு முழு­வ­தும் விவ­சா­யத்­தின் முக்­கி­யத்­து­வம் குறித்து விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்த வேண்டி­ உள்­ளது. விளை மண், தன்­னு­டைய வளத்தை­யும் அதன் இயல்­பான தன்­மை­யை­யும் இழந்­து­கொண்டே வரு­கிறது. நம் நாட்­டில் மட்­டு­மல்ல, உல­கின் பெரும்­பா­லான நாடு­கள் இந்­தப் பிரச்சினை­யை எதிர்­கொண்­டுள்­ளன.

"உலக வெப்­ப­ம­ய­மா­தல் குறித்து பல­ருக்­குத் தெரி­ய­வில்லை. திடீர் வெள்­ளம், மண் சரிவு என பல பிரச்­சி­னை­கள் மண்­ணின் வளத்தை மேலும் பாதிக்­கின்­றன.

"மிக முக்­கி­ய­மான இந்­தப் பிரச்­சி­னையை 'சேவ் சாயில்' என்­கிற இயக்­கம் மூலம் ஏரா­ள­மா­னோர் ஒருங்­கி­ணைந்து எதிர்­கொண்­டுள்­ள­னர். அவர்­களில் நானும் ஒருத்தி," என்­கி­றார் ஸ்ரீநிதி ஷெட்டி.

'பீஸ்ட்', 'கேஜி­எஃப்' ஆகிய இரு படங்­களும் கிட்­டத்­தட்ட ஒருசேர வெளி­யா­கின்­றன. இத­னால் அடுத்த ஒரு வாரத்­துக்கு திரை­ய­ரங்­கு­களில் ரசி­கர் கூட்­டம் அலை­மோ­தும் என எதிர்­பார்க்­க­லாம். இரு படங்­க­ளை­யும் சூட்­டோடு சூடாக பார்க்க ஆவ­லு­டன் காத்­தி­ருப்­ப­தா­கச் சொல்­கி­றார் ஸ்ரீநிதி.