சிபி: செல்ல 'டான்' சிவா

சிபி: செல்ல 'டான்' சிவா

3 mins read

முதன் முறை­யாக கல்­லூரி மாண­வர் வேடத்­தில் நடித்­துள்­ளார் சிவ­கார்த்­தி­கே­யன். சிபி சக்­க­ர­வர்த்தி இயக்­கத்­தில் உரு­வா­கும் 'டான்' படத்­தில்­தான் அழ­கான கல்­லூரி மாண­வ­ராக வலம் வரு­கி­றார் சிவா.

'டான்' என்­றால் ரவு­டிக்­ கும்­ப­லின் தலை­வன், நிழல் உலக தாதா, கடத்­தல் கும்­ப­லின் தலை­வன் என்று பல­வி­த­மாக யோசிக்க வேண்­டாம். இது­வரை 'டான்' கதா­பாத்­தி­ரம் உல­கெங்­கும் இப்­ப­டித்­தான் சித்­தி­ரிக்­கப்­பட்டு வரு­கிறது. ஆனால் இந்த தமிழ் 'டான்' கொஞ்­சம் வித்­தி­யா­ச­மா­ன­வ­ராம்.

"கல்­லூ­ரி­யில் தனக்­கென ஒரு கூட்­டத்தை சேர்த்துக்­கொண்டு திரி­யும் செல்­ல­மான 'டான்'தான் நம்ம சிவா. அந்­தக் கல்­லூ­ரிக்­கும் தனக்­கும் எந்­த­வி­தத் தொடர்­புமே இல்­லா­த­து­போல் அவன் நடந்துகொள்­வ­தும் பேரா­சி­ரியர்­களி­டமே வம்­புக்­குப் போவ­தும் ரக­ளை­யாக இருக்­கும்," என்­கி­றார் இயக்­கு­நர் சிபி சக்­க­ர­வர்த்தி.

படத்­தின் கதைக்­க­ளம் எப்­ப­டிப்­பட்­ட­தாக இருக்­கும்?

"இது முழுக்க முழுக்க கல்­லூரி மாண­வர்­கள் சம்­பந்­தப்­பட்ட கதை என்­று­தான் பல­ரும் நினைத்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். ஆனால் அதற்கு நேர்­மா­றாக இருக்­கும் என்பது­தான் உண்மை. கல்­லூரி என்­பது இப் படத்­தின் ஒரு பகுதி மட்­டும்­தான்.

"அவற்றை எல்­லாம் கடந்து, ஒரு எதார்த்­த­மான பைய­னின் சுற்­றம், அவனது குடும்­பம் எப்­படி இருக்­கும் என்­பதையும் அவ­னது உணர்­வு­கள் எப்­படி வெளிப்­படும் என்­ப­தை­யும் காட்­சிப்படுத்­தும் படம் இது. ஒரு பையன் பிறந்­தது முதல் முப்­பது வயது வரை என்ன செய்­கி­றார் என்­ப­து­தான் இப்­ப­டத்­தின் ஒரு­வ­ரிக் கதை," என்­கி­றார் சிபி.

கடந்த 2018ஆம் ஆண்­டி­லேயே இந்­தக் கதையை சிவா­வி­டம் விவ­ரித்­தா­ராம். ஆனால் அந்­தச் சம­யத்தில் அவ­ருக்கு அந்­தக் கதை பொருந்­த­வில்­லை­யாம்.

ஆனா­லும் சிபி சும்மா இருக்­க­வில்லை. தனது கதை­யில் பல­வி­த­மான மாற்­றங்­க­ளைச் செய்து, சரி­யாக ஓராண்டுக்­குப் பிறகு சிவாவை மீண்­டும் சந்­தித்து கதை சொல்ல, அந்­தச் சம­யத்­தில் கல்­லூரி நாய­க­னாக நடிக்க வேண்­டும் என்ற விருப்­பம் சிவா­வுக்­கும் இருக்க, 'டான்' வேலை­கள் தொடங்­கின.

படப்­பி­டிப்­புக்­குச் செல்­லும் வரை கதையில் பல மாற்­றங்­க­ளைச் செய்து கொண்டே இருந்­தா­ராம்.

"பெரும் பொருள்­செ­ல­வில் பிரம்­மாண்­ட­மாக உரு­வா­கும் படத்­தின் மூலம் திரை­யு­ல­கில் இயக்­கு­ந­ராக அறி­மு­க­மா­வேன் என்று நினைத்­துக்­கூ­டப் பார்க்­க­வில்லை. ஆனால் சிவா சார் ஆத­ர­வால் இது சாத்­தி­ய­மாகி உள்­ளது," என்று நெகிழ்­கி­றார் சிபி.

'டான்' படத்­தில் ஆறு இயக்­கு­நர்­கள் நடித்­துள்­ள­னர். எஸ்.ஜே.சூர்யா, சமுத்­தி­ரக்­கனி, சிங்­கம்­புலி, மனோ­பாலா, கவிதா பாரதி ஆகி­யோ­ரைத் தவிர கௌதம் மேனன் கௌரவ வேடத்­தில் தோன்­று­கி­றார்.

"ஒரு இயக்­கு­நரை வைத்துப் படம் இயக்­கு­வதே பெரிய சவால். நான் ஆறு இயக்­கு­நர்­களைச் சமா­ளித்­தி­ருக்­கிறேன். எனி­னும் அனைவரும் தங்­கள் அனு­ப­வத்தை பொருட்­படுத்­தா­மல் எனது எதிர்­பார்ப்­புக்கு ஏற்ப நடித்­துக் கொடுத்­தனர்.

"'டான்' கதா­பாத்­தி­ரத்தை அடிப்­ப­டை­யாக வைத்து தமிழ், இந்தி உள்­ளிட்ட அனைத்து மொழி­க­ளி­லுமே பல படங்­கள் வெளி­வந்­துள்­ளன. அவற்­றில் இருந்து இந்த தமிழ் 'டான்' வித்­தி­யா­ச­மாக இருக்க வேண்­டும் என்­ப­தில் மொத்­தக் குழு­வும் தெளி­வாக உள்­ளது.

"இந்­தப் படம் ஒரு வாழ்க்­கைப் பய­ண­மாக இருக்­கும். கல்­லூரி பகு­தி­யைக் கடந்­த­வு­டன் சுவா­ர­சி­ய­மான தந்தை, மகன், ஆசி­ரி­யர்­கள்-மாண­வர்­கள், காதல் - நண்­பர்­கள் என்று எல்­லாமே இருக்­கும். ஏற்­கெனவே அனி­ருத் இசை­யில் அமைந்த பாடல்­கள் பெரிய அள­வில் வர­வேற்பைப் பெற்­றுள்­ளன.

அனி­ருத்­து­டன் பணி­யாற்­றும்­போது நமக்­கும் ஒரு­வித நேர்­மறை உணர்வு ஏற்­படும். எந்த நேரத்­தி­லும் உற்­சா­க­மாக இருப்­பார். படத்தைப் பார்த்து­விட்டு சிறப்­பாக வந்­தி­ருப்­ப­தா­கப் பாராட்­டி­னார்.

"இந்­தக் கதையை எழு­தும்­போதே தமிழ் தெரிந்த நாயகியைத்­தான் ஒப்­பந்­தம் செய்ய வேண்­டும் என்­ப­தில் உறு­தி­யாக இருந்­தேன். அதற்­கேற்ப பிரி­யங்கா மோக­னின் கால்­ஷீட் கிடைத்­தது.

"மிகுந்த அர்ப்­ப­ணிப்­பு­டன் கூடிய நடிகை. மொழி தெரி­வ­தால் வச­னங்­களை நன்கு உள்­வாங்­கிக்கொண்டு உணர்­வு­களை வெளிப்படுத்து­கி­றார்.

"இந்­தப் படத்­தி­லும் சூரியும் சிவா­வும் நகைச்­சு­வைக் கூட்­டணி அமைத்­துள்­ள­னர். தவிர, காளி வெங்­கட், மிர்ச்சி விஜய், பால­ச­ரவணன், முனீஸ்­காந்த், ராதா­ரவி உள்­ளிட்ட பலர் உள்­ள­னர்.

"மொத்­தத்­தில் இந்த 'டான்' உங்­களை அனைத்து வகை­யி­லும் மகிழ்­விப்­பான்," என்று நம்­பிக்­கை­யு­டன் சொல்­கி­றார் சிபி சக்­க­ர­வர்த்தி.