ஆண்ட்ரியாவின் அர்ப்பணிப்பு

ஆண்ட்ரியாவின் அர்ப்பணிப்பு

3 mins read
e104248e-0522-4ce2-adbb-cff3cad9382e
-

இப்­போ­தெல்­லாம் நாய­கி­களை மையப்­ப­டுத்தி உரு­வா­கும் படங்­களும் அடி­த­டி­யும் அதி­ர­டி­யும் நிறைந்த படைப்­பு­க­ளாக உரு­வா­கின்­றன.

அந்த வகை­யில் ஆண்ட்­ரியா நாய­கி­யாக நடித்­துள்ள 'நோ என்ட்ரி' பட­மும் ரசி­கர்­க­ளின் கவ­னத்தை ஈர்க்­கும் வகை­யில் வித்­தி­யா­ச­மான கதைக்­க­ளத்­து­டன் உரு­வாகி உள்­ளது.

இந்­தப் படத்­துக்­காக ஆண்ட்­ரியா மிகுந்த அர்ப்­ப­ணிப்­பு­டன் உழைத்­தி­ருப்­ப­தா­கச் சொல்­கி­றார் அறி­முக இயக்­கு­நர் அழகு கார்த்­திக்.

"இந்­தக் கதைக்கு எனது முத­லும் கடை­சி­யு­மான தேர்வு ஆண்ட்­ரி­யா­தான். கதையை சொல்­லத் தொடங்­கிய சில நிமி­டங்­க­ளி­லேயே தனக்­குப் பிடித்­தி­ருப்­ப­தா­க­வும் தாம் எதிர்­பார்த்த மாதி­ரியே இருப்­ப­தா­க­வும் சொல்­லி­விட்­டார். ஏற்­றுக்­கொண்ட கதா­பாத்­தி­ரத்­துக்­காக கடு­மை­யாக உழைக்­கக்­கூ­டிய ஒரு­சில நடி­கை­களில் இவ­ரும் ஒரு­வர்.

"எல்­லோ­ருக்­கும் முன்­பா­கவே படப்­பி­டிப்­புக்கு வந்­து­வி­டு­வார். தின­மும் அவர் வந்த பிறகே நானும் மற்­ற­வர்­களும் வந்து சேர்­வோம். முன்­னணி நடிகை என்­றா­லும் அவ­ரி­டம் எந்­த­வித பந்­தா­வும் இருந்­த­தில்லை," என்று பாராட்­டு­கி­றார் அழகு கார்த்தி.

மனித நட­மாட்­டம் இல்­லாத மலைப் பகுதி. அங்கு ஒரு மர­வீடு. அதன் உரி­மை­யா­ளர் வாழ்ந்து வரு­கி­றார். அந்த இடத்­துக்கு சில தம்­ப­தி­யர் வரு­கி­றார்­கள். அதே இடத்­துக்கு நாய­கி­யும் சில கார­ணங்­க­ளுக்­காக வரு­கி­றார். அங்கு நடக்­கும் சம்­ப­வங்­கள்­தான் கதை.

"அந்த மலைப்­ப­கு­தி­யில் விஞ்­ஞானி ஒரு­வர் இந்­திய எல்­லைப் பாது­காப்­புக்­காக சில உயி­ரி­யல் மாற்றங்களோடு நாய்­களை பயன்­படுத்து­வது தொடர்­பில் ஓர் ஆய்­வில் ஈடு­பட்­டுள்­ளார். அந்த நாய்­கள் மிக­வும் ஆக்­ரோ­ஷ­மா­னவை. நான்கு நாய்­கள் ஒன்று சேர்ந்­தால் ஒரு யானையை காலி பண்­ணி­டும்.

"அப்­ப­டிப்­பட்ட நாய்­கள் இருக்­கும் இடத்­துக்­குத்­தான் காதல் ஜோடி­களும் தம்­ப­தி­ய­ரும் நாய­கி­யும் வந்து சேர்­கி­றார்­கள். இதை­ய­டுத்து ஆபத்­தில் சிக்­கும் அவர்­கள் அதி­லி­ருந்து எப்­படி தப்­பு­கி­றார்­கள் என்­பதை விறு­வி­றுப்­பாக காட்­சிப்­ப­டுத்தி உள்­ளோம்.

"நாங்­கள் படப்­பி­டிப்பு நடத்­திய இடம் மிக­வும் வித்­தி­யா­ச­மான பகுதி. அங்­குள்ள பாலத்­தில் முக்­கிய காட்­சி­க­ளைப் பட­மாக்­கி­னோம். நான்­கா­யி­ரம் படி­கள் ஏறி, அதன் பிறகு மேடு பள்­ளம் என்று கீழ்­நோக்கி இறங்­கி­னால்­தான் படப்­பி­டிப்பு நடந்த இடத்­தைச் சென்­ற­டை­யும் முடி­யும். இதற்கு சில மணி­நே­ரம் ஆகும்.

"ஆண்ட்­ரியா கொஞ்­சம்­கூட முகம் சுளிக்­கா­மல், தினமும் எங்­க­ளு­டன் நடந்து வரு­வார். அது மட்­டு­மல்ல, தன்­னால் இயன்ற படப்­பி­டிப்­புக் கரு­வி­க­ளை­யும் சுமந்­தார். அவர் எப்­போ­துமே சுறு­சு­றுப்­பா­கச் செயல்­படக்­கூ­டி­ய­வர். நடக்­கும் போதும்­கூட அவர்­தான் முன்னே செல்­வார். கரடுமுர­டான பாதை­யில் ஓடு­வது, எதி­ரி­க­ளு­டன் சண்டை போடு­வது என அடி­த­டிக் காட்­சி­களில் மிகுந்த ஈடு­பாடு காட்­டி­னார்," என்­கி­றார் அழகு கார்த்­திக்.

எவ்­வ­ளவு பெரிய வச­ன­மாக இருந்­தாலும், ஒரே 'டேக்'கில் பேசி முடித்­து­வி­டு­வாராம் ஆண்ட்­ரியா. உல­கி­லேயே அதிக மழை பெய்­யக்­கூ­டிய பகு­தி­யான சிர­புஞ்­சி­யில்­தான் மொத்த படப்­பி­டிப்­பும் நடந்­துள்ளது. தமிழ் சினிமா ரசி­கர்­க­ளுக்கு இந்த இடம் புதி­தாக இருக்­கும். இது­வரை எந்த தமிழ்ப்­ப­ட­மும் அங்கு எடுக்­கப்­பட்­ட­தில்­லை­யாம்.

"எனக்­குத் தெரிந்­த­வரை அங்கு எந்த படப்­பி­டிப்பு நடந்த­தில்லை. அங்­குள்ள குறிப்­பிட்ட பகு­தி­யில் நினைத்­த­வு­டன் படப்­பிடிப்பை நடத்­தி­விட முடி­யாது. மேலும், எல்லா பொருள்­க­ளுமே ஒன்­றுக்கு மூன்று மடங்கு விலை அதி­க­மா­னது. ஏரா­ள­மான சுற்­று­லாப் பய­ணி­கள் அங்கு வந்து செல்­கி­றார்­கள். எங்­கள் படக்­கு­ழு­வில் 112 பேர் இருந்­தோம். அத­னால் 13 டன் மளி­கைப்­பொ­ருள்­க­ளைக் கொண்டு சென்­றோம். இந்­தப் படம் ஆண்ட்­ரி­யா­வின் திரைப்­ப­ய­ணத்­தில் முக்­கிய திருப்­பு­மு­னை­யாக அமை­யும்," என்­கி­றார் அழகு கார்த்­திக்.