ரவிமரியாவை வில்லன், நகைச்சுவை நடிகராக மட்டுமே பலர் அறிந்திருப்பர். ஆனால், அவர் ஓர் இயக்குநர். 'ஆசை ஆசையாய்', 'மிளகா' என இரண்டு படங்களை இயக்கி உள்ளார். அதன் பிறகு, நட்புக்காக ஒரு படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் தலைகாட்டப்போக, இப்போது முழு நேர நகைச்சுவை நடிகராகிவிட்டார்.
"முதல் காதலை எப்படி மறக்க முடியாதோ, அதேபோல் முதல் படத்தையும் மறக்க இயலாது. இயக்குநர் ஆக வேண்டும் என்பதற்காகத்தான் சென்னை வந்தேன். ஆனால், நடிகராகவும் ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டனர்.
"நானும் இயக்குநர்தான் என்றாலும், நான் நடிக்கும் படங்களின் இயக்குநர்களுடைய பணியில் ஒருபோதும் தலையிட்டதில்லை. அவர்களாக என்னிடம் ஏதாவது யோசனை கேட்டால் தெரிவிப்பேன். ஏனெனில் இயக்குநர்கள் எவ்வளவு சுமையை சுமக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.
"வருங்காலத்தில் நிச்சயமாக அனைவரும் அசந்துபோகும் வண்ணம் ஒரு படத்தை இயக்குவேன். அண்மையில் வெளியான 'இடியட்' படம் வரை எனக்கான, தனித்துவமான கதாபாத்திரங்கள் அமைந்து வருகின்றன. எனவே, முழு நகைச்சுவை நடிகராக மாறிவிட்டேன்," என்கிறார் ரவிமரியா.
தற்போது 'குருமூர்த்தி', அசோக் செல்வனின் 'ஹாஸ்டல்', விஷ்ணு விஷாலின் 'ஜெகஜால கில்லாடி', 'காட்டேரி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் ரவிமரியா.

