பாக்யராஜ்: அடுத்த பிறவியில் பூர்ணிமாவாகப் பிறக்க ஆசை

1 mins read
45529ce7-656a-4b94-86a4-33f70f04080a
புத்தக வெளியீட்டு விழாவில் பாக்யராஜ், பூர்ணிமா. -

'தன்னை உணர்ந்­த­னள் தகைமை உயர்ந்­த­னள்' என்ற தலைப்­பில் நடிகை பூர்­ணிமா பாக்­ய­ராஜ் பற்றி ஒரு புத்­த­கம் வெளி­யீடு கண்டுள் ளது. ரஜினி இதற்கு முன்­னுரை எழு­தி­யுள்­ளார்.

அண்­மை­யில் நடை­பெற்ற புத்­தக வெளி­யீட்டு நிகழ்­வில் பேசிய இயக்­கு­நர் பாக்­ய­ராஜ், தான் அடுத்த பிற­வி­யில் தன் மனைவி பூர்­ணி­மா­வாக பிறக்க ஆசைப்­படு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

"பூர்­ணிமா மூன்று மொழி­களில் நடித்­துக்கொண்­டி­ருந்த முன்­னணி நடி­கை­யாக இருந்­த­போ­து­தான் அவரைத் திரு­ம­ணம் செய்­து­கொள்ள விரும்­பி­னேன். வீடு தேடிச் சென்று பெண் கேட்­ட­போது, அவ­ரது தந்தை உடனே சம்­ம­தித்­தார். அது பெரிய விஷ­யம்.

"எப்­ப­டியோ சினி­மா­வை­யும் குடும்ப வாழ்க்­கை­யை­யும் மிகச் சரி­யாகச் சமா­ளித்து எங்­க­ளுடைய வாழ்க்­கையை வாழ்ந்­து­விட்­டோம்.

"ஆனால் ஒரு விஷ­யம். இன்­னொரு பிறவி இருந்­தால் நான் பூர்­ணி­மா­வா­க­வும் அவர் பாக்­ய­ராஜா­க­வும் பிறக்க வேண்­டும் என ஆசைப்­ப­டு­றேன். அப்­போது தான் அவர் எனக்­குச் செய்த பணி­விடை­களை அவ­ருக்கு நான் திரும்பச் செய்ய முடி­யும்," என்­றார் பாக்­ய­ராஜ்.

அதைக் கேட்டு பூர்­ணி­மா­வின் கண்­களில் ஆனந்­தக் கண்­ணீர் வழிந்­தது.