தமக்கு விரைவில் இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளதாக வெளியான தகவலை நாக சைதன்யா மறுத்துள்ளார்.
இதுபோன்ற பொய்த் தகவல்கள் தமக்கு மன வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
"சமந்தாவும் நானும் இன்னும் சட்டப்படி பிரியவில்லை. அதற்குள் அடுத்த திருமணத்துக்கு தயாராகிவிட்டதாகக் கூறப்படுவது உண்மை அல்ல. தயவு செய்து யாரும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட வேண்டாம்," என நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.

