'வசூல் நாயகன்' யாஷ்

'வசூல் நாயகன்' யாஷ்

3 mins read
1dda3e71-afc4-4cad-964f-54acc0445d61
-

பள்ளி மாண­வ­னாக இருந்­த­போதே பெரிய நடி­க­ராக உரு­வாக வேண்­டும் என்று தாம் கனவு கண்டதாகச் சொல்­கி­றார் 'கேஜி­எஃப்' படத்­தின் நாய­கன் யாஷ்.

இன்று இந்­திய சினி­மா­வின் ஆகப்­பெரிய வசூல் நாய­கன் என்று இவ­ரைத்­தான் குறிப்­பி­டு­கி­றார்­கள். யாஷ் அடுத்து நடிக்­கப் போகும் படம் என்ன, அதை இயக்­கப் போவது யார், அவ­ருக்கு என்ன சம்­ப­ளம் கிடைக்­கும் என்ற கேள்­வி­க­ளுக்கு விடை­களைத் தெரிந்துகொள்ள இந்­திய சினிமா ரசி­கர்­கள் ஆவ­லு­டன் காத்­துக்­கி­டக்­கி­றார்­கள்.

'கேஜி­எஃப்' படம் இது­வரை 700 கோடி ரூபாய்க்­கும் மேல் வசூல் கண்­டுள்­ளது. இந்­திய சினிமா உல­கின் பல்­வேறு சாத­னை­களை முறியடித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், அண்­மைய பேட்­டி­யில் தமது சிறு வயதுக் கனவு நன­வாக எத்­த­கைய சிர­மங்­களைக் கடக்க வேண்டி இருந்­தது என விவரித்­துள்­ளார் யாஷ்.

"பள்­ளி­யில் படிக்­கும்­போது, 'நீ வளர்ந்து பெரிய­வ­னாக ஆனபிறகு யாரைப்­போல் உரு­வாக வேண்­டும் என விரும்­பு­கி­றாய்?' என்று வகுப்­பா­சி­ரி­யர் கேட்­கும் போதெல்­லாம், சினிமா­வில் நடித்து சூப்­பர் ஸ்டார் ஆக மாறு­வேன் என்­பேன். அதைக் கேட்டு எல்­லோ­ரும் சிரிப்­பார்­கள்.

"என் கனவு எட்ட முடி­யாத தூரத்­தில் இருப்­ப­தாக என் பெற்­றோ­ரும் குடும்­பத்­தா­ரும் கரு­தி­னர். நான் கல்­லூ­ரிப் படிப்பை முடிக்க வேண்­டும் என்று வற்­பு­றுத்­தி­னர். அத­னால் வீட்டை விட்டு வெளி­யே­றி­னேன்," என்­கி­றார் யாஷ்.

அதன் பிறகு 'பெனகா' என்ற நாடகக் கு­ழு­வில் இணைந்­த­வர், சில நாட­கங்­களில் துணை நடி­க­ராக நடித்­துள்­ளார். முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களில் நடிப்­ப­வர்­க­ளுக்கு உடல்­நிலை பாதிக்­கப்­பட்­டாலோ, உரிய நேரத்­துக்கு வரா­விட்­டாலோ, அவர்­க­ளுக்­குப் பதி­லாக யாஷ் நடிப்­பா­ராம். அதன் பிறகு இவ­ருக்­கும் நல்ல கதா­பாத்­தி­ரங்­கள் கிடைக்­கத் தொடங்­கின.

முந்­நூறு ரூபா­யு­டன் வீட்டை விட்டு வெளி­யே­றி­ய­வ­ரின் திரைப்­படங்­கள் இப்­போது சர்வ சாதா­ர­ண­மாக 300 கோடி ரூபாய் வசூல் காண்­கின்­றன.

எழு­பத்து ஐந்து நாடு­களில் உள்ள திரை­யரங்­கு­கள் முன்பு யாஷின் பிரம்­மாண்ட பதாகை­கள் வைக்­கப்­பட்­டுள்­ளன. கடந்த ஆறு ஆண்­டு­க­ளாக மேற்­கொண்ட தவத்­துக்கு, கடு­மை­யாக உழைத்­த­தற்­குக் கிடைத்த பலன் இது என்­கி­றார் யாஷ்.

"கன்­னட சினி­மா­வின் தலை­ந­க­ர­மா­கக் கரு­தப்­படும் காந்தி நக­ரில் எனது பதாகை என்­றா­வது ஒரு­நாள் வைக்­கப்­படும் என்ற நம்­பிக்­கை­யு­டன் நீண்ட காலம் காத்­தி­ருந்­தேன். இப்­போது வெளி­நா­டு­க­ளி­லும் என் பதாகை­க­ளைக் காண முடி­கிறது.

"எனது விருப்­பங்­கள், இலக்­கு­கள் குறித்து வெளிப்­ப­டை­யா­கப் பேசத் தயங்­கி­யதே இல்லை. நான் அதி­கம் பேசு­வ­தாக விமர்­சித்­த­னர். ஆனால் நமக்கு நம்­பிக்கை உள்ள விஷ­யங்­க­ளைச் செய்­வ­தில் தயக்­கம்கூடாது.

"அதே சம­யம் இது எனக்கு மட்­டுமே கிடைத்த வெற்­றி­அல்ல. இயக்­கு­நர், தயா­ரிப்­பா­ளர், தொழில்­நுட்­பக் கலை­ஞர்­கள் என்று எல்­லோ­ரும் இணைந்து பெற்ற வெற்றி. பல்­வேறு சாதனை­க­ளைப் புரிந்­துள்ள இரண்டு படங்­க­ளின் பிரம்­மாண்ட வெற்­றிக்­குப் பிறகு எனக்­கான சுமை­யும் கட­மை­யும் அதி­கரித்­துள்­ளன. ரசி­கர்­களை மகிழ்­விக்க வேண்­டும் என்­பது மட்­டுமே எனது தற்­போ­தைய இலக்கு," என்­கி­றார் யாஷ்.

கன்­னடத் திரை­யு­ல­கத்­தின் படைப்­பு­கள் உலக அளவில் பேசப்­பட வேண்­டும் என்று யாஷ் அடிக்­கடி சொல்­வ­துண்டு. நான்கு ஆண்­டு­க­ளுக்கு முன்பு வெளி­யான 'கேஜி­எஃப்' படம், அதை சாதித்­தது என்­கி­றார்.

"கன்­னடத் திரை­யு­ல­கில் சாதித்த பிறகு பல நடி­கர்­கள் இந்தி உள்­ளிட்ட பிற மொழி­களில் கவ­னம் செலுத்­து­வ­தா­க­வும் தாய்­மொ­ழியை மறந்­து­வி­டு­வ­தா­க­வும் கன்­னட ரசி­கர்­கள் மத்­தி­யில் ஆதங்­கம் உள்­ளது. அவ்­வாறு நினைக்­க­வும் கோபப்­ப­ட­வும் ரசி­கர்­களுக்கு உரிமை உண்டு.

"அதே­ச­ம­யம் ஒரு வெற்­றிக்­குப் பிறகு, அதை­விட பெரி­தாகச் சாதிக்க வேண்­டும் என்ற கட்­டாயம் ஏற்­ப­டு­கிறது. அத­னால் ஒரு கலை­ஞன் மற்ற விஷ­யங்­களில் கவனம் செலுத்த வேண்­டி­யி­ருக்­கும். அதே­ச­ம­யம் நாம் சாதிப்­பது, நமது வட்­டா­ரத்­தைச் சேர்ந்த இளை­யர்­களின் கன­வு­களை மேலும் கூர்­படுத்த வேண்­டும்.

"திரைப்­பட நடி­கர் என்­ப­து­தான் எனது கனவு, எனது வாழ்க்கை எனத் தீர்­மா­னித்­து­விட்­டேன். அத­னால் என்னை முத­லில் தூக்கி நிறுத்­திய ரசிகர்­களை மறக்க மாட்­டேன் ," என்று சொல்­லும் யாஷ், அடுத்து 'கேஜி­எஃப்' படத்தின் மூன்­றாம் பாகத்­துக்கு தன்னை தயார்­ப்படுத்­தத் தொடங்­கி­விட்டார்.

எப்­போ­தும் தாடி­யும் மீசை­யு­மா­கத்­தான் காட்­சி­தர வேண்­டும் என்று ரசி­கர்­கள் கேட்­கி­றார்­க­ளாம். நல்ல கதைக்­க­ள­மும் கதா­பாத்­தி­ர­மும் அமைந்­தால் அவற்றை இழக்­கத் தயா­ராக உள்­ளா­ராம்.

'பாகு­பலி' படத்­துக்கு அடுத்­த­ப­டி­யாக ஆயி­ரம் கோடி ரூபாய் வசூலை நோக்கி, நகர்ந்து வரு­கிறது 'கேஜி­எஃப் 2'.