பழம்பெரும் நடிகர் சக்கரவர்த்தி நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 62.
கடந்த 1980களில் தொடங்கி 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் சக்கரவர்த்தி.
அவற்றுள் 'சிகப்பு ரோஜாக்கள்', 'ஆறிலிருந்து அறுபது வரை', 'முள்ளில்லாத ரோஜா', 'தர்மயுத்தம்', 'ராஜாதி ராஜா' உள்ளிட்ட படங்கள் அடங்கும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு திரையுலகில் இருந்து விலகி. மும்பையில் வசித்து வந்தார்.
மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக பின்னணிக் குரல் கொடுக்கும் பணியைச் செய்து வந்தவர், தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்படும் பிறமொழிப் படங்களுக்கும் 'டப்பிங்' பேசினார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாரடைப்பு காரணமாக தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்ததாக குடும்பத்தார் தெரிவித்தனர். சக்கரவர்த்திக்கு மனைவியும் இரு மகன்களும் உள்ளனர். அவரது மறைவுக்கு திரை உலகத்தினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

