திரைகாணும் முன்பே 20 விருதுகள் பெற்ற படம்

திரைகாணும் முன்பே 20 விருதுகள் பெற்ற படம்

1 mins read
3804bc95-9d2b-46fd-b9a2-efce519715a7
'வாய்தா' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி. -

வெளி­யீடு காணும் முன்பே இருபது விரு­து­களை வாங்­கிக் குவித்­துள்­ளது 'வாய்தா' திரைப்படம். மகி­வர்மன் சி.எஸ். இயக்கி உள்­ளார்.

இயக்­கு­நர் தாமி­ரா­வி­டம் உதவி யா­ள­ரா­கப் பணி­யாற்­றிய போதுதான் இந்­தப் படத்­தின் கதையை எழு­தி­னா­ராம்.

சென்­னை­யில் சாலை­யோ­ரக் கடை­களை அப்­பு­றப்­ப­டுத்­து­வது தொடர்­பான வழக்கு ஒன்றை இவர் நண்­பர் கையாண்­டுள்­ளார். அந்த வழக்கு முடிந்­து­விட்­டது. ஒருவேளை வழக்கு முடி­யா­மல் ஓர் அப்­பாவி பாதிக்­கப்­பட்டு இருந்­தால் என்ன நடந்­தி­ருக்­கும் என்று யோசித்­தாராம்.

"அந்­தக் கற்­ப­னை­தான் இந்­தப் படத்தை உரு­வாக்க கார­ண­மாக அமைந்­தது. இன்­ற­ள­வும் ஒரு­சில வேலை­கள் சாதி­யின் அடிப்­ப­டை­யில்­தான் உள்­ளன. அத­னால் இப்­படத்­தில் குறிப்­பி­டத்­தக்க சாதி அர­சி­ய­லும் கன­மான சம்­ப­வங்­களும் இருக்­கும். அதே­ச­ம­யம், எந்­த­வோர் இடத்­தி­லும் குறிப்­பிட்ட சம்­ப­வத்­தால் உயி­ரி­ழப்பு ஏற்­ப­டு­வ­தா­கவோ, ஒரு­வரு­டைய வாழ்க்­கையே சீர­ழிந்து போன­தா­கவோ காட்­சி­கள் இருக்­காது," என்­கி­றார் மகி­வர்­மன்.

ஒரு சாதா­ரண மனி­தர் நீதி­மன்றத்தை அணு­கும்­போது என்ன மாதி­ரி­யான சங்­க­டங்­க­ளை­யும் பிரச்சி­னை­க­ளை­யும் எதிர்­கொள்­கிறார் என்­பதை இந்­தப் படம் விளக்கு­கிறது. மேலும், பணம் பெற்­றுக்­கொண்டு ஒரு­வ­ருக்­காக நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யா­கும் வழக் க­றி­ஞர் முதல் நீதி­மன்­றத்­தில் உள்ள ஒவ்­வொ­ரு­வ­ரும் ஒரு கட்­டத்­தில் எவ்­வாறு மாறு­கி­றார்­கள் என்­ப­தை­யும் 'வாய்தா' படத்­தில் விரி­வா­கக் காட்­சிப்­ப­டுத்தி உள்­ள­னர்.

திரை காண்பதற்கு முன்பே, பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்ற 'வாய்தா' படத்துக்கு இதுவரை இருபது விருதுகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் முதல் படத்திலேயே தமது அடை யாளத்தை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார் மகிவர்மன்.

, :

  