'இது அம்மா, பிள்ளை கதை'

'இது அம்மா, பிள்ளை கதை'

3 mins read
8e094a98-8fdd-495a-9929-e7ba4fa7081d
-

ஒரே குடும்­பத்­தில் பிறந்த பிள்­ளை­கள் திரு­ம­ணத்­துக்­குப் பிறகு அம்­மாவை எப்­படி பார்த்­துக்கொள்­கி­றார்­கள் என்­ப­தும் பிள்­ளை­க­ளின் அணு­கு­முறை அம்­மா­வுக்கு என்ன மாதி­ரி­யான சங்­க­டங்­க­ளை­யும் துன்­பங்­க­ளை­யும் தரு­கின்­றன என்­ப­தை­யும் யதார்த்­த­மா­கச் சொல்லி இருக்­கி­றா­ராம் சுரேஷ் மாரி.

"தமிழ் சினி­மா­வில் அண்­மைக்­கா­லத்­தில் இது­போன்ற கதையை யாரும் கையா­ள­வில்லை. கே.பால­சந்­தர், விசு, வீ.சேகர் போன்ற வெற்றி இயக்­கு­நர்­கள் இந்த மாதிரி கதை­யைச் சொல்­வ­தில் பெரிய வெற்­றி­க­ளைப் பதிவு செய்­துள்­ள­னர்.

"இந்­தக் கால­கட்­டத்­தில் இந்­தக் கதை­யைச் சொல்­வது பொருத்­த­மாக இருக்­கும் என்று கரு­தி­னேன். என்­னைப் பாதித்த சில உண்­மைச் சம்­ப­வங்­கள்­தான் இந்­தக் கதையை நான் தொடு­வ­தற்­குக் கார­ண­மாக அமைந்­தன.

"அந்­தச் சம்­ப­வங்­களை ரசி­கர்­கள் முன் காட்­சிப்­ப­டுத்த நினைத்­தேன். அந்த வகை­யில் இது எல்­லோ­ரும் ஏற்­றுக்­கொள்­ளும் அம்மா, பிள்­ளை­க­ளுக்­கான பட­மாக இருக்­கும்," என்­கி­றார் சுரேஷ் மாரி.

இந்­தக் கதைக்கு தினேஷ்­தான் பொருத்­த­மாக இருப்­பார் என்று கரு­தி­ய­தால் அவரை ஒப்­பந்­தம் செய்­த­தாக குறிப்­பி­டு­ப­வர், 'அட்­ட­கத்தி' படத்­தில் பணி­யாற்­றி­ய­போதே இரு­வ­ரும் நல்ல நண்­பர்­க­ளா­கி­விட்­ட­தா­கச் சொல்­கி­றார்.

"இந்­தப் படத்­தில் மட்­டு­மல்ல, நிஜத்­தி­லும் தினேஷ் சமர்த்­துப்­பிள்­ளை­தான். எனக்கு நன்கு தெரிந்­த­வர் என்­ப­தால் அவரை நாய­க­னாக்­க­வில்லை.

"கதைப்­படி, ஆட்டோ ஓட்­டு­ந­ராக நடிக்­கி­றார். இந்த கதா­பாத்­தி­ரத்­துக்காக உடல் எடையை கொஞ்­சம் அதி­க­ரித்­துள்­ளார். அத­னால் பாத்­தி­ரத்­து­டன் கச்­சி­த­மா­கப் பொருந்­தி­விட்­டார்.

"தினேஷ் திற­மை­யான நடி­கர். காட்­சிக்­கான சூழ்­நி­லை­யைத் தெளி­வா­கப் புரி­ய­வைத்து விட்­டால் போதும். பிர­மா­த­மாக நடித்­து­வி­டு­வார். அதில் எந்த மாற்­ற­மும் செய்ய வேண்­டி­யி­ருக்­காது.

"நேர நிர்­வா­கத்­தில் அவ­ரைப்­போல் கச்­சி­த­மா­கச் செயல்­ப­டக்­கூ­டிய இளை­யர்­கள் மிகக்­கு­றை­வா­கவே இருப்­பார்­கள். சொன்ன நேரத்­துக்கு முன்­பா­கவே வந்து நிற்­பார். படப்­பி­டிப்­புக்கு வந்­து­விட்­டால் அவ­ருக்கு உடனே 'தீனி' போட்­டாக வேண்­டும்.

"அந்த அள­வுக்கு நடிப்­புப் பசி­யோடு காத்­துக்­கி­டப்­ப­வர். அடுத்த காட்சி என்ன என்று கேட்­டுக்­கொண்டே இருப்­பார்," என்று தினே­ஷைப் பாராட்­டு­கி­றார் சுரேஷ் மாரி.

தினேஷ் பிள்ளை என்­றால், ஊர்­வ­சி­தான் அம்மா. அவ­ரை­விட வேறு எந்த நடி­கை­யும் இந்த கதா­பாத்­தி­ரத்­துக்குப் பொருத்­த­மாக இருக்க மாட்­டார்­கள் என்­பது இயக்­கு­ந­ரின் கருத்து. அதற்­கான கார­ணத்­தை­யும் விவ­ரிக்­கி­றார்.

"ஊர்­வ­சி­யால் மட்­டுமே அழ வைக்­க­வும் உடனே சிரிக்­க­வும் முடி­யும். அவ­ரால் பல பரி­மா­ணங்­களை வெளிப்­ப­டுத்த முடி­யும் என்­பதை பல­முறை நிரூ­பித்­துள்­ளார். அவரை ரசிக்­கா­த­வர்­களே இருக்க முடி­யாது.

"இன்று திரை­யு­ல­கில் உள்ள மூத்த நடி­கை­க­ளால் அம்மா வேடத்­தில் 'சீரி­ய­ஸாக' நடிக்க முடி­யும். ஆனால், கூடவே நகைச்­சு­வை­யை­யும் வெளிப்­ப­டுத்த வேண்­டும் என்று சொன்­னால், அவர்­க­ளால் அவ்­வாறு செய்ய முடி­யுமா என்­பது சந்­தே­கம்­தான். அதற்­காக யாரை­யும் குறைத்து மதிப்­பி­ட­வில்லை.

"கதையை எழுத ஆரம்­பித்­த­போதே ஊர்­வசி அம்மா மட்­டுமே என்­னு­டைய தேர்­வாக இருந்­தார். அவ­ருக்­கும் கதை­யும் கதா­பாத்­தி­ர­மும் பிடித்­தி­ருந்­த­தால் நடிக்க சம்­ம­தித்­தார்.

"படத்­தின் தலைப்­பில் வரும் 'பேபி' அம்மா யாருக்­கும் பயப்­ப­டா­த­வர். பிள்­ளை­க­ளைக் கண்­டிக்­க­வும் செய்­வார். அதே சம­யம் குழந்­தைத்­த­ன­மும் இருக்­கும். அவ­ரு­டைய அந்த ஆளு­மையை திரை­யில் பார்க்­கும்­போது பிரம்­மாண்­ட­மாக இருக்­கும்.

"கதை கேட்­கும்­போதே மிகுந்த ஈடு­பாடு காட்­டி­னார். நடிப்­பி­லும் அந்த ஈடு­பாட்டை முழு­மை­யாக வெளிப்­ப­டுத்­தி­னார்.

"இப்­ப­டத்­தில் இன்­னொரு முக்­கி­ய­மான கதா­பாத்­தி­ரத்­தில் மாறன் நடித்­துள்­ளார். சென்­னை­யைப் பின்­பு­ல­மா­கக் கொண்ட கதை என்­ப­தால் அவர் நடித்­தால் சரி­யாக இருக்­கும் எனத் தோன்­றி­யது.

"என் முடிவு சரி என்­பதை படம் பார்க்­கும்­போது ரசி­கர்­களும் உணர்­வார்­கள். மற்ற கலை­ஞர்­களும் சிறப்­பா­கப் பங்­க­ளித்­துள்­ள­னர். படம் விரை­வில் திரை­கா­ணும்," என்­கி­றார் இயக்­கு­நர் சுரேஷ் மாரி.