செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்துள்ள 'நானே வருவேன்' படத்தில் சுவீடனைச் சேர்ந்த எல்லி அவ்ரம் நாயகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில், அவர் இணையம் வழி ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது தனுஷைப் போன்ற கனிவான, கண்ணியமான சக நடிகரை இதுவரை தாம் பார்த்ததில்லை எனக் குறிப்பிட்டார்.
மேலும், செல்வராகவனை பார்த்து தாம் வியந்து போனதாகவும் அவர் ஓர் அனாயாசமான இயக்குநர் என்றும் பாராட்டு தெரிவித்தார்.
'கண்பத்', 'குட்பை' படங்களைத் தொடர்ந்து புதுப்படம் ஒன்றில் ஒப்பந்தமாகி உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்திய திரையுலகில் அறிமுகமானதை மிகச்சிறந்த வாய்ப்பாக கருதுவதாகக் கூறினார்.
"படப்பிடிப்பின்போது தனுஷ் எதற்காகவும் பதற்றம் அடைய மாட்டார். அவர் நிபுணத்துவம் வாய்ந்த திறமையான நடிகர். அவருடன் நடித்த நாள்கள் மறக்க முடியாதவை," என்கிறார் எல்லி.
'நானே வருவேன்' படம் மிக விரைவில் திரை காண உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் செல்வராகவனும் தனுஷும் இணைந்துள்ளனர்.
படப்பிடிப்பின்போது செல்வராகவன், தனுஷுடன் எல்லி.

