நல்ல படைப்புகள் வெளிவர வேண்டும் என்றால் வித்தியாசமாக சிந்திக்கக்கூடிய புதிய இயக்குநர்கள் வர வேண்டும் என்றார் இளையராஜா.
இயக்குநர் சாமி இயக்கத்தில் உருவாகி உள்ள குழந்தைகளுக்கான திரைப்படம் 'அக்காகுருவி'. இளையராஜா இசையமைத்துள்ளார்.
இப்படம் மிக நேர்த்தியாக, நல்ல படைப்பாக உருவாகி உள்ளது என அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
"நான் பல உலக சினிமாக்கள் பார்ப்பது வழக்கம். அதில் எனக்கு ஆர்வம் அதிகம். அப்படி 'சில்ட்ரன் ஆப் ஹெவன்' என்ற படத்தைப் பார்த்து வியந்தேன்.
"சிறு குழந்தைகளின் உலகத்தை, ஒரு சின்ன பிரச்சினையை அவர்கள் எப்படிச் சமாளிக்கிறார்கள் என்பதை மிக யதார்த்தமாக, அற்புதமான படைப்பாக தந்துள்ளனர். இதுபோன்ற படங்கள் தமிழில் ஏன் வருவதில்லை என வருத்தமாக இருந்தது. ஆனால் இயக்குநர் சாமி அதே படத்தை நம் ஊரில் எடுத்தால் எப்படி இருக்கும் என யோசித்து, அந்தக் கதையை மாற்றி, ஆங்கிலத்தைவிட தமிழில் சுவாரசியமாக படமாக்கி உள்ளார்.
"மணிரத்னம் இயக்கிய முதல் படத்திற்கு நான் இசையமைத்த காரணம் அதுதான். புதிய இயக்குநர்கள் அதிக எண்ணிக்கையில் வர வேண்டும்," என்றார் இளையராஜா.
, :

