'சிரமப்பட்டால் சாதிக்கலாம்'

'சிரமப்பட்டால் சாதிக்கலாம்'

3 mins read
0f4843b6-3835-4004-b65c-2682372a4ffa
-

படப்­பி­டிப்­பின்­போது நடி­கர், நடி­கை­கள் தனிப்­பட்ட சிர­மங்­க­ளைப் பொருட்­ப­டுத்­தா­மல் நடிக்க வேண்­டும் என்­கி­றார் இளம் நடிகை ரித்­விகா.

அண்­மை­யில் 'ஆதார்' என்ற படத்­தின் படப்­பி­டிப்­பில் கடும் கொசுக்­கடி, பூச்­சிக்­க­டிக்கு மத்­தி­யில் நடித்­தா­ராம். அந்த அனு­ப­வத்தை ஒரு பேட்­டி­யில் அவர் பகிர்ந்­துள்­ளார்.

முழு­நீள திகில் பட­மாக உரு­வாகி வரு­கிறது 'ஆதார்'. சில காட்­சி­களை சென்­னை­யின் புற­ந­கர்ப் பகு­தி­யில் கட்­டு­மா­னப்­பணி நடை­பெ­றும் இடத்­தில் பட­மாக்கி உள்ளனர். சிறிய மருத்­து­வ­ம­னை­யைப் போல் அந்த இடத்தை மாற்றி அமைத்­தி­ருந்­த­ன­ராம்.

"அந்­தக் காட்­சி­களை இரவு நேரத்­தில் பட­மாக்­கி­னர். அத­னால் கட்­டு­மா­னப் பணி­யா­ளர்­கள் தங்­கள் வேலை முடித்து கிளம்­பிச் சென்ற பிறகே படப்­பி­டிப்பை நடத்­த முடிந்­தது.

"அப்­போது மழைக்­கா­லம் என்­ப­தால் எப்­போது மழை பெய்­யும் எப்­போது நிற்­கும் என்று கணிக்க முடி­யாத சூழல். போதாத குறைக்கு கட்­டு­மா­னப் பணி நடக்­கும் இடம் என்­ப­தால் சிமென்ட் மூட்­டை­கள், இரும்­புக் கம்­பி­கள், ஜல்­லிக் கற்­கள் எல்­லாம் குவிக்­கப்­பட்டு இருந்­தன.

"மேலும், தரை­யும் கர­டு­மு­ர­டாக இருந்­தது. கொஞ்­சம் கவ­னக்­கு­றை­வாக இருந்தா­லும் கால்­க­ளைப் பதம் பார்த்து­வி­டும். உண்­மை­யா­கவே கட்­டு­மா­னப் பணி­கள் நடக்­கும் இடத்­தில் முதன்­முறை­யா­கப் படப்­பி­டிப்­பில் பங்­கேற்­றேன்.

"அங்கு ஏரா­ள­மான கொசுக்­கள் வலம் வந்­தன. வேறு சில பூச்­சி­க­ளை­யும் காண முடிந்­தது. பொது­வாக, வெளிப்­பு­றப் படப்­பி­டிப்பு என்­றால் கொசுக்­க­ளி­டம் இருந்து தப்­பிக்க, மருத்­துவ திர­வம் ஒன்றை கைக­ளிலும் முகத்­தி­லும் பூசிக்­கொள்­வோம். ஆனால் இந்த இடத்­தில் அதை­யும் மீறி கொசுக்­கள் கடித்­துத் தீர்த்­தன.

கதைப்­படி நான் அந்­தக் கட்­ட­டத்­தில் ஒரு குழந்­தை­யைப் பெற்­றெ­டுப்­பேன். இதற்­காக சிறிய மருத்­து­வ­ம­னை­யில் உள்ள வார்டு போல் சித்­திரிக்க இரண்டு வரிசை படுக்­கை­களை போட்­டி­ருந்­த­னர். கூடவே சில மின்­ வி­சி­றி­களை­யும் சுழல விட்­ட­னர். அத­னால் கொசுத்­தொல்­லையை ஓர­ளவு சமா­ளிக்க முடிந்­தது," என்­கி­றார் ரித்­விகா.

பிர­ச­வத்­துக்­குப் பிறகு கைக்­கு­ழந்தை இவ­ருக்கு அருகே கிடத்­தப்­பட்­டி­ருப்­பது போன்று காட்­சி­யைப் பட­மாக்கி உள்­ள­னர். ஏற்­கெ­னவே தனது சகோ­த­ரி­யின் குழந்தை­யைக் கவ­னித்­துக்­கொண்­ட அனு­ப­வம் இருந்­த­தால், தாய்-சேய் சம்­பந்­தப்­பட்ட காட்சி­களில் ரித்­வி­கா­வால் இயல்­பாக நடிக்க முடிந்­தி­ருக்­கிறது.

"அதுமட்டுமல்ல, அந்தக் குழந்தையின் தாயும் படப்பிடிப்பின்போது உடன் இருந்தார். இன்னோர் ஆச்சரியமான விஷயம், அவருக்கும் அண்மை யில்தான் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.

"அதனால் ஒரு குழந்தை அழுதால், உடனே எனக்கு அருகே உள்ள படுக்கையில் படுத்திருக்கும் அவர், அழும் குழந்தையை தூக்கிக்கொள்வார். மற்றொரு குழந்தை என்னருகே வந்துவிடும்.

"இப்படி இரு குழந்தைகளும் மாறி மாறி நடித்தன. அதனால் படப்பிடிப்பும் இரு தினங்கள் தடையின்றி நடந்தேறியது.

"அந்த இரண்டு நாள்களையும் மறக்கவே இயலாது. அதிலும் அந்த அழகான இரு குழந்தைகளின் முகங்களும் இன்னும் கண்முன்னே தெரிகின்றன," என்கிறார் ரித்விகா.

கொசுக்கடிக்கு எல்லாம் பயந்தால் சவாலான பாத்திரங்களில் நடிக்க இயலாது என்று குறிப்பிடுபவர், சவால்கள் இல்லாமல் சாதிக்க இயலாது என்கிறார். பல முன்னணி நடிகைகள்கூட இப்போதெல்லாம் சண்டைக் காட்சிகளிலும் மற்ற ஆபத்தான காட்சிகளிலும் பங்கேற்பதை சுட்டிக்காட்டு கிறார்.

'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் தமிழகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட நடிகையாக மாறிவிட்டாலும் சிறப்பான நடிப்புக்காக மக்கள் தன்னை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் ரித்விகாவின் விருப்பமாக உள்ளது.

"அதனால்தான் நல்ல கதா பாத்திரங்கள் என்றால் அது சிறிது நேரமே திரையில் தோன்றும் என்றா லும்கூட ஒப்புக்கொள்கிறேன். அதே சமயம் குறைந்த செலவில் தயாராகும் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நாயகிக்கு இணையான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறேன்.

"குறிப்பிட்ட சில நல்ல கதாபாத்திரங்கள் என்னைத் தேடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. காரணம், இத்தகைய வாய்ப்புகளை நமது திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாகக் கருத வேண்டும்," என்கிறார் ரித்விகா.