எஸ்.ஜே.சூர்யாவின் வெற்றி ரகசியம்

எஸ்.ஜே.சூர்யாவின் வெற்றி ரகசியம்

2 mins read
2b1ff503-b1b9-4f13-ae85-5c11813d45da
-

"ஒரு படத்­துக்­கான கதை­யைக்

கேட்­கும்­போது அதன் இயக்­கு­நர் என்­னைத் திருப்­திப்­ப­டுத்த வேண்­டும் என விரும்­பு­வேன். அதே சம­யம், படப்­

பி­டிப்பு என்­றால் என் நடிப்பு இயக்­கு­ந­ருக்கு மன­நி­றைவு தர வேண்­டும் என ஆசைப்­ப­டு­வேன்," என்­கி­றார் எஸ்.ஜே.சூர்யா.

இயக்­கு­ந­ராக தமிழ் சினி­மா­வில் அறி­மு­க­மான இவர், இன்று கிட்­டத்­தட்ட முழு­நேர நடி­க­ரா­கி­விட்­டார். குறிப்­பாக, வித்­தி­யா­ச­மான வில்­லன் கதா­பாத்­தி­ரங்­கள் என்­றால் எஸ்.ஜே.சூர்­யா­வுக்­குத்­தான் இயக்­கு­நர்­க­ளி­டம் இருந்து முதல் அழைப்பு வரு­கிறது.

இவர் நாய­க­னாக நடித்­துள்ள 'பொம்மை', பேரா­சி­ரி­ய­ராக நடித்­துள்ள 'டான்' ஆகிய படங்­கள் அடுத்­த­டுத்து வெளி­யாக உள்­ளன.

"நான் எப்­போ­துமே இயக்­கு­நர்­க­ளின் விருப்­ப­மான நடி­க­ராக இருக்க விரும்­பு­கி­றேன். படப்­பி­டிப்­பின்­போது என் நடிப்­பைப் பார்த்து இயக்­கு­ந­ருக்கு மன­நி­றைவு

ஏற்­பட்­டால் அது போதும். ரசி­கர்­க­ளுக்­கும் தன்­னால் பிடித்­துப்­போ­கும். அத­னால் படப்­பி­டிப்­பில் இயக்­கு­நர் சொல்­வதை மட்­டுமே கேட்­பேன்," என்று தன் வெற்றி ரக­சி­யத்­தைப் பகிர்­கி­றார் சூர்யா.

வாழ்க்கை நல்­ல­வி­த­மாக போய்க் கொண்­டி­ருப்­ப­தாக குறிப்­பி­டு­ப­வர், அனைத்து நல்ல விஷ­யங்­க­ளுக்­கும் கட­வுள்­தான் கார­ணம் என்று பக்­திப்­ப­ர­வ­சத்­து­டன் சொல்­கி­றார்.

"சிவ­கார்த்­தி­கே­ய­னின் 'டான்' படத்­தில் நடித்த அனு­ப­வம் அரு­மை­யாக இருந்­தது. கதை­யைக் கேட்­ட­போதே மிக­வும் பிடித்­துப்­போ­னது. 'மாநாடு' படம் அதி­ர­டி­யான வெற்றி என்­றால், 'டான்' அழ­கான வெற்­றி­யாக இருக்­கும். இந்­தப் படத்­தின் இயக்­கு­நர் சிபி படப்­பி­டிப்­பில் அழ­காக நடித்­துக்­காட்­டு­வார். நான் இது­வரை ஏற்­றி­ராத கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்­கி­றேன். மேலும், சிவ­கார்த்­தி­கே­ய­னு­டன் நடிக்­கும் முதல் படம்

"அவர் இப்­போது பெரிய இடத்­தில் உள்­ளார். இருப்­பி­னும், தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­களில் பங்­கேற்­ற­போது இருந்த எளி­மையை இப்­போ­தும் அவ­ரி­டம் காண முடி­கிறது.

அடிக்­கடி கவுண்­ட­மணி சாரின்

வச­னங்­க­ளைப் பேசு­வார். இந்­தப் படத்­தில் கல்­லூரி மாண­வ­ராக அவ­ரது நடிப்பு நன்­றாக இருந்­தது. கல்­லூரி கலாட்­டாக்­கள் எல்­லாம் அவ­ரது பாணி­யில் இருக்­கும். அதைக் கடந்த உணர்­வுப்­பூர்­வ­மான சில அம்­சங்­க­ளி­லும் அசத்­தி­யுள்­ளார்.

"என்­னைப் பொறுத்­த­வரை விஜய் சாருக்­குப் பிறகு அனைத்து குடும்­பங்­க­ளி­லும், நம்ம வீட்­டுப் பிள்­ளை­யாக சிவ­கார்த்­தி­கே­ய­னைத்­தான் கரு­து­

கி­றார்­கள். அதற்­குத் தகு­தி­யான குணங்­கள் அவ­ரி­டம் உள்­ளன," என்­கி­றார் எஸ்.ஜே.சூர்யா.