தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஷாலினி: வீட்டைவிட்டு வெளியேறி நடிகையானேன்

1 mins read

தெலுங்­கில் வெளி­யான 'அர்­ஜுன் ரெட்டி' படம் மூலம் திரை­யு­ல­கில் அறி­மு­க­மா­ன­வர் ஷாலினி பாண்டே. இந்­தப் படத்­தில் விஜய் தேவ­ர­கொண்­டா­வு­டன் முத்­தக்­காட்­சி­யில் நடித்­தது ரசி­கர்­களை வாய்­பி­ளக்க வைத்­தது.

இந்­நி­லை­யில், ரன்­வீர் சிங் ஜோடி­யாக 'ஜெயேஸ்­பாய் ஜோர்தார்' என்ற இந்­திப் படத்­தில் நடித்து முடித்­துள்­ளார் ஷாலினி.

இதன் முன்­னோட்டக் காட்­சித்­தொ­குப்பு வெளி­யீட்டு விழா­வில் பேசிய அவர், சினிமா ஆசை­யால் தாம் வீட்டை விட்டு வெளி­யே­றி­ய­தா­கக் குறிப்­பிட்டு லேசா­கக் கண்­கலங்­கி­னார்.

"நான் பொறி­யி­யல் பட்­ட­தாரி ஆக வேண்­டும் என என் தந்தை விரும்­பி­னார். நானும் அதற்கு முயன்­றேன். ஆனால் படிக்­கப் பிடிக்­க­வில்லை.

"சினி­மா­வில் நடிக்க வேண்­டும் என்­ப­து­தான் என் ஆசை. இதற்­காக பெற்­றோ­ரின் சம்­ம­தம் பெற நான்கு ஆண்­டு­கள் முயன்­றேன். ஆனால் அது நடக்­க­வில்லை என்பதால் வீட்டை விட்டு வெளி­யே­றி­னேன். முத­லில் என்னை ஒதுக்­கிய என் குடும்பத்தார் இப்­போது நான் அடைந்­துள்ள உய­ரத்­தைக் கண்டு பெரு­மைப்­ப­டு­வார்­கள் என நம்­பு­கிறேன்," என்­றார் ஷாலினி பாண்டே.