தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னைப் பெண் பாவ்யா

2 mins read

'கதிர்' என்ற படத்­தின் மூலம் கோடம்­பாக்­கத்­தில் அறி­மு­க­மாகி உள்­ளார் பாவ்யா த்ரிகா. ஏற்­கெ­னவே கன்­னட படத்­தில் நடித்­த­வர்.

விளம்­ப­ரப் படங்­களில் நடித்து வந்த இவரை, முத­லில் அடை­யா­ளம் கண்­டு­கொண்­டது கன்­ன­டத் திரை­யு­ல­கம்­தான். அங்­கி­ருந்து பாவ்­யாவை தமிழ்த் திரை­யு­ல­கத்­துக்கு அழைத்து வந்­துள்­ள­னர்.

முதல் படத்­தி­லேயே தன் நடிப்­புக்­காக பாராட்டு பெற்­றுள்ள பாவ்­யா­வுக்கு பல மொழி­கள் அத்­துப்­ப­டி­யாம். சிறு வயது முதலே சினிமா நடி­கை­யாக வேண்­டும் என்ற கன­வு­டன் வளர்ந்து ஆளா­கி­யுள்­ளார்.

பஞ்­சாபி பெண்­ணான இவர், பிறந்து வளர்ந்த இடம் சென்னை. அத­னால் பஞ்­சாபி மொழியை தவிர்க்க முடி­ய­வில்லை.

"நான் கிட்­டத்­தட்ட தமிழ்ப் பெண்­ணா­கத்­தான் வளர்ந்­தி­ருக்­கி­றேன். மெரினா கடற்­கரை, சத்­யம் திரை­ய­ரங்கு, சிந்­தா­த­ரிப்­பேட்டை என்று சென்­னை­யில் எனக்­குத் தெரி­யாத இடங்­களே இல்லை. அந்த வகை­யில் என்னை சென்­னைப் பெண் என்­றும் சொல்­ல­லாம். பள்­ளிப்­ப­டிப்பு முடிந்த பிறகு நான் சென்­னை­யில் உள்ள கல்­லூ­ரி­யில்­தான் ஊட­கத்­து­றை­யில் பட்­டப்­ப­டிப்பை முடித்­தேன்.

"கல்­லூ­ரி­யில் எனக்கு மூத்­த­வர்­கள் பலர் இன்று தொலைக்­காட்­சித் தொடர்­கள், நிகழ்ச்­சி­கள், திரைப்­ப­டத் துறை­யில் அசத்தி வரு­கி­றார்­கள்.

"மாட­லிங், சினி­மாத்­து­றை­யில் சாதிக்க விரும்­பும் பெண்­க­ளுக்கு அவர்­க­ளது குடும்­பத்­தார், குறிப்­பாக தந்­தை­தான் முதல் எதிர்ப்­பா­ளர்­க­ளாக இருப்­பார்­கள். ஆனால் என் விஷ­யத்­தில் இது தலை­கீ­ழா­கி­விட்­டது.

"நான் ஊட­கத்­து­றை­யில் வரு­வ­தற்கு அப்­பா­தான் முக்­கிய கார­ணம். அவர் அரசு அதி­கா­ரி­யாக பணி­யாற்­றி­னார். விளம்­ப­ரங்­கள், திரைப்­ப­டங்­களில் நடிக்க வேண்­டும் என்று பெரும் ஆர்­வம் இருந்­தது. ஆனால், வேலைப்­ப­ளு­வால் அவ­ரது ஆசை நிறை­வே­ற­வில்லை.

"எனி­னும், 'நீதானே என் பொன் வசந்­தம்' படத்­தில் சமந்­தா­வுக்கு தந்­தை­யா­க­வும் 'விஸ்­வ­ரூ­பம்' படத்­தில் பாகிஸ்­தான் தீவி­ர­வா­தி­யா­க­வும் என சின்­னச் சின்ன கதா­பாத்­தி­ரங்­கள், விளம்­ப­ரப் படங்­களில் நடித்­துள்­ளார்.

"அவ­ரைப் பார்த்­துத்­தான் கதா­நா­யகி ஆக­வேண்­டும் என்ற ஆவல் எனக்கு உரு­வா­னது. அதைப் புரிந்­து­கொண்ட அப்பா, அவ­ரது சினிமா கனவை என் வழி­யாக நிறை­வேற்­றிப் பார்க்க விரும்­பி­னார்.

"நான் சிறு­மி­யாக இருக்­கும்­போதே என்­னை விளம்­ப­ரப் படங்­களில் நடிக்க வைத்­தது அவர்­தான். எட்டு வய­தி­லேயே விளம்­ப­ரப் படங்­கள் மூலம் நான் பிர­ப­ல­மா­கி­விட்­டேன். இப்­போது என் ஆசைப்­படி சினிமா நடி­கை­யா­கி­விட்­டேன்," என்­கி­றார் பாவ்யா.

திரை­யு­ல­கில் முத­லில் தன்னை நிலைப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும் என்­ப­தற்­குத்­தான் முன்­னு­ரிமை அளிக்­கப்­போ­வ­தாக குறிப்­பி­டு­ப­வர், விருது, நடி­கை­களில் முத­லி­டம் என்­பன போன்ற எதிர்­பார்ப்­பு­கள் எல்­லாம் இப்­போ­தைக்கு தமக்கு இல்லை என்­கி­றார்.

சென்­னைப் பெண்­ணாக, தமிழ் பேசி வளர்ந்த தமக்கு, கோலி­வுட் ரசி­கர்­க­ளின் ஆத ரவு கிடைக்­கும் என்­றும் நம்பிக்கை உள்ளதாம்.

இவர் நடித்­துள்ள கன்­ன­டப் படம் விரை­வில் வெளி­யாக உள்­ளது. தமி­ழில் அடுத்து நடிக்­கும் படம் தொடர்­பான பேச்­சு­வார்த்­தை­யும் நடை­பெற்று வரு­கிறது.