தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வில்லனாக மாறிய ஜெய்

3 mins read
ff94456c-af10-4ad4-abd4-3173ef6191e5
-

நாய­க­னாக நடித்து வரும் நிலை­யில், வில்­ல­னாக நடிக்க ஜெய் எப்­படி ஒத்துக்கொண்டார் என்று கோடம்­பாக்­கத்­தில் பல­ரும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­கி­றார்­கள்.

மிகுந்த தயக்­கத்­து­டன்­தான் வில்­ல­னாக நடிக்க முடி­யுமா என்று ஜெய்­யி­டம் கேட்­டுள்­ளார் இயக்­கு­நர் பத்ரி. ஜெய்­யும் முத­லில் லேசாகத் தயங்­கி­யுள்­ளார். ஆனால் படத்­தின் முழுக்­க­தை­யை­யும் கேட்ட பிறகு அந்­தக் தயக்­கம் மறைந்து, உடனே 'அண்ணே நான் நடிக்­கி­றேன்' என்­றா­ராம்.

"என்­ன­தான் வில்­லத்­த­ன­மான கதா­பாத்­தி­ரம் என்­றா­லும் ரசி­கர்­கள் ஜெய்யை நேசிப்­பார்­கள். அப்­ப­டித்­தான் அவ­ரது பாத்­தி­ரம் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. 'பட்­டாம்­பூச்சி' என்ற தலைப்­பை­யும் அவர் தோள் மீது­தான் சுமத்தி உள்­ளோம். கதைப்­படி நரம்­புத் தளர்ச்­சி­யால் பாதிக்­கப்­பட்­ட­வ­ராகத் திரை­யில் தோன்­று­வார்.

"பொது­வாக நரம்­புத் தளர்ச்சி உள்­ள­வர்­க­ளுக்கு இரண்டு நிமி­டங்­க­ளுக்கு ஒரு­முறை கை கால்­ நடுங்­கும். அவ்­வாறு உட­லசை­வு­கள் ஏற்­படும்­போது வார்த்­தை­களும் தடு­மாற்­ற­மா­கத்­தான் வந்­து­வி­ழும். 'நான் கிளம்பு­கி­றேன்', பிறகு வரு­கி­றேன்' என்­பன போன்ற ஒன்­றி­ரண்டு வார்த்­தை­களை உச்­ச­ரிப்­ப­தற்­கும்­கூட அவ­கா­சம் தேவைப்­படும். சின்ன வார்த்­தையை நீள­மாக இழுத்து இழுத்­துப் பேசு­வார்­கள்.

"இது­போன்ற சவா­லான கதா­பாத்­தி­ரத்தை ஜெய் இது­வரை ஏற்­ற­தில்லை. இது சினி­மா­வுக்­காகச் சொல்­லப்­படும் கற்­பனை வியாதி அல்ல. உல­கம் முழு­வதும் ஏரா­ள­மா­னோர் பாதிக்­கப்பட்டுள்­ள­னர்," என்­கி­றார் பத்ரி.

தனது கதா­பாத்­தி­ரத்­தின் தன்­மை­யைப் புரிந்­து­கொண்ட ஜெய், உட­ன­டி­யாக இத்­த­கைய பாதிப்பு உள்ள சிலரை நேரில் சந்­தித்­தா­ராம். அவர்­க­ளி­டம் இந்­நோ­யின் தாக்­கம் குறித்து கேட்­ட­றிந்­துள்­ளார். மேலும், நோயா­ளி­க­ளி­டம் காணப்­படும் அறி­கு­றி­கள், அவர்­கள் பேசும் விதம், உடல்­மொழி என அனைத்­தை­யும் கவ­னித்­துள்­ளார். படப்­பி­டிப்பு தொடங்­கி­ய­தும் நரம்பு பாதிப்பு குறித்து தனக்கு விரி­வாக விளக்கி, பயிற்சி­யும் அளிக்க ஒரு பயிற்றுவிப்பாளரைப் பணி அமர்த்தும்படி கேட்­டுக்­கொண்­டா­ராம்.

"நரம்புப் பிரச்­சினை உள்­ள­வர்­க­ளுக்கு அடிக்­கடி உட­லின் ஏதா­வது ஒரு பகு­தி­யில் வலி ஏற்­படும். நரம்பு இழுத்­துக்கொண்­டால் மிகுந்த வேத­னை­யாக இருக்­கும். கழுத்­தில் சுளுக்கு ஏற்­பட்­டால் தவித்­துப் போவோம். ஆனால் ஜெய், இந்­தப் படத்­துக்­காக தின­மும் அந்த வலி­யைப் பொறுத்­துக்கொண்­டார்.

"இப்­ப­டத்­தில் உடல் வலி­மை­யில் குறை­பாடு உள்ள ஜெய் அறிவுத்திறன் உள்­ள­வராக இருப்­பார். அப்­படி கெட்ட புத்­தி­ உள்ள ஜெய்யை நல்ல புத்­திக்­கா­ர­ரான காவல்­துறை அதி­காரி சுந்­தர்.சி எப்­படி வெற்றிகொள்­கி­றார் என்­பதே கதை. எந்த இடத்­தி­லும் விட்­டுக்­கொ­டுக்­கா­மல் படத்தை உரு­வாக்கி உள்­ளோம்," என்­கி­றார் இயக்­கு­நர் பத்ரி.

'பட்­டாம்­பூச்சி' படத்­தின் முதல் காட்­சி­லேயே கதை தொடங்கி­வி­டும் என்று குறிப்­பி­டு­ப­வர், படத்­தின் இறு­திக்­காட்சிவரை விறு­வி­றுப்பு குறை­யாது என உத்­த­ர­வா­தம் அளிக்­கி­றார். மேலும், குற்­ற­வாளி செய்­யும் தவ­று­களைக் காவல்­துறை அறி­வாற்­ற­லு­டன் செயல்­பட்டுக் கண்­டு­பி­டிக்­கும் காட்­சி­கள் சுவா­ர­சி­ய­மாக இருக்­கு­மாம்.

"பொதுவாக மாற்­றுத்திற­னா­ளி­கள், கூடு­தல் மனவலிமை உள்­ள­வர்­களாக இருப்­பார்­கள். உதா­ர­ணத்­துக்கு, பார்­வைக் குறை­பாடு உள்­ள­வர்­க­ளுக்கு செவித் திறன் அதி­கமாக இருக்­கும். இது இறை­வன் கொடுத்த ஆற்­றல்.

"எனவே எந்த அள­வுக்கு வலி, வேத­னை­களை எதிர்­கொள்கிறாரோ, அதற்கு இணை­யாக தனது மன வலி­மை­யை­யும் நடிப்­பில் வெளிப்­ப­டுத்தி உள்­ளார் ஜெய்.

"அவர் எனக்குத் தம்பி மாதிரி. பல ஆண்­டு­க­ளா­கப் பழகி வரு­கி­றோம். முன்பு 'ஆக்­‌ஷன்' படத்­துக்கு நான் வச­னம் மட்­டுமே எழு­தி­னேன்.

"பட்­டாம்­பூச்சி' படத்தின் வெற்றி என்னைப் பெரிய நடி­கர்­க­ளி­டம் அழைத்­துச் செல்­லும் என்ற நம்­பிக்கை இருக்­கிறது. அது­மட்­டு­மல்ல, நல்ல கதை­கள்­தான் பெரிய நாய­கர்­களி­டம் நம்மை அழைத்­துச் செல்­லும் என்­ப­தை­யும் உணர்ந்­துள்­ளேன்.

"'பட்­டாம்­பூச்சி' படத்­தின் தயா­ரிப்­பா­ளர் குஷ்பு எனக்கு அண்ணி. கடந்த இரு­பது ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக சுந்­தர்.சி. சாரு­டன் இருக்கிறேன். அவர்­தான் என்­னு­டைய குரு­நா­தர். குடும்ப அட்­டை­யில் மட்­டுமே எனது பெயர் இல்லை. மற்­ற­படி, அவ­ரு­டைய குடும்­பத்­தில் நானும் ஒரு­வன்," என்று பாசம் ததும்ப பேசு­கிறார் பத்ரி.

, :

  