பெண் பாதுகாவலர் பாத்திரத்தில் தமன்னா

3 mins read
3b8b0cf5-0436-47ef-825a-661ca1b1acb5
-

தமி­ழில் சொல்­லிக்­கொள்­ளும்­ப­டி­யான வாய்ப்­பு­கள் அமை­யா­விட்­டா­லும், தெலுங்­கி­லும் இந்­தி­யி­லும் தமன்­னா­வுக்கு இன்­ற­ள­வும் வர­வேற்பு உள்­ளது.

அண்­மை­யில் ஒரு தெலுங்­குப் படத்தில் ஒற்­றைப்­பா­ட­லுக்கு நட­ன­மாடி உள்­ளார். அதை­ய­டுத்து, இந்­தி­யில் உரு­வா­கும் 'பப்ளி பவுன்­சர்' படத்­தில் நடித்து முடித்­துள்­ளார்.

மிக வித்­தி­யா­ச­மான கதைக்­க­ளம், கதா­பாத்­தி­ரம் அமைந்­தி­ருப்­ப­தால் தமக்கு இந்­தப் படம் திரை­யு­ல­கில் பெரும் திருப்பு­மு­னை­யாக அமை­யும் என்று நம்­பு­வ­தா­கச் சொல்­கி­றார் தமன்னா.

முக்­கிய பிர­மு­கர்­க­ளுக்­குப் பாது­காப்பு அளிப்­ப­வர்­க­ளை­யும் கேளிக்கை விடுதி உள்­ளிட்ட இடங்­களில் பாது­காப்­புப் பணி­யில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளை­யும் 'பவுன்­சர்' என்று குறிப்­பி­டு­கி­றார்­கள்.

ஒரே மாதி­ரி­யான சீருடை அணிந்து, நல்ல உடற்­கட்­டு­டன் இருக்­கும் இவர்க­ளுக்கு கணி­ச­மான ஊதி­யம் வழங்­கப்­படு­கிறது. ஆண்­கள் மட்­டுமே ஈடு­பட்டு வந்த இந்­தத்­து­றை­யில், இப்­போது பெண்­களும் கால்­ப­தித்­துள்­ள­னர். ஒரு பெண் 'பவுன்­சர்' பற்­றிய கதையை மைய­மாக வைத்து, 'பப்ளி பவுன்­சர்' உரு­வாகி உள்­ளது.

"வட­இந்­தி­யா­வில் உள்ள அசோலா ஃபதேப்­பூர் என்ற இடத்தை பவுன்­சர் நக­ரம் என்றே குறிப்­பி­டு­கி­றார்­கள். கார­ணம், அங்கு ஏரா­ள­மா­னோர் இந்­தத் துறை­யில் ஈடுபட்­டுள்­ள­னர்.

"அந்த ஊரைச் சேர்ந்த ஒரு பெண் பாது­கா­வ­லர் தன் வாழ்க்­கை­யில் எதிர்­கொள்­ளும் சவால்­கள், பிரச்­சி­னை­களை இந்­தப் படம் அல­சு­கிறது.

"இயக்­கு­நர் மதுர் பண்­டார்­கர் குறித்து நான் தனி­யா­கச் சொல்ல ஏது­மில்லை. நாட்­டின் தலை­சி­றந்த இயக்­கு­நர்­களில் அவ­ரும் ஒரு­வர். படப்­பி­டிப்­பின்­போது மட்­டு­மல்ல, எப்­போ­துமே என்­னி­டம் அன்பு பாராட்­டக்­கூ­டி­ய­வர். அவ­ரு­டைய மகிழ்ச்­சி­யான, நிதா­ன­மான செயல்­பா­டு­க­ளால் எங்­க­ளால் சிறப்­பாக நடிக்க முடிந்­தது.

"இறு­திக்­கட்­டப் படப்­பி­டிப்பு நிறை­வ­டைந்­த­தும் விலை­ம­திப்­பற்ற நினை­வு­க­ளை­யும் படப்­பி­டிப்­பில் கற்­றுக்­கொண்ட விஷ­யங்­க­ளை­யும் என்­னோடு எடுத்து வந்­தி­ருக்­கி­றேன்.

"இந்­தப் படம் எனக்கு நல்ல அனு­ப­வ­மாக அமைந்­துள்­ளது. படப்­பி­டிப்­பின்­போது கிடைத்த ஊக்­கம், பல்­வேறு உணர்ச்­சி­களை திரை­யில் வெளிப்­ப­டுத்த உத­வி­யது. அரு­மை­யான நினை­வு­கள், அழ­கான நட்பு, அற்­பு­த­மான படக்­குழு, மகிழ்ச்­சி­யான நாள்­கள் என்று இந்­தப் படம் என் மன­தில் என்­றென்­றும் நிலைத்து நிற்­கும்," என்­கி­றார் தமன்னா.

'பப்ளி பவுன்­சர்' இந்­தி­யில் மட்­டு­மல்­லா­மல், தமிழ், தெலுங்கு, கன்­ன­டம் உள்­ளிட்ட மொழி­க­ளி­லும் வெளி­யாக உள்­ளது.

தமி­ழில் மட்­டும் படத்­தின் தலைப்பை மாற்ற உள்­ள­ன­ராம். சவு­ரப் சுக்லா, அபி­ஷேக் பஜாஜ், சாஹில் வய்த் உட்­பட பலர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர்.

பெண் பாது­கா­வ­லர் பற்­றிய கதை என்­ற­தும் உடனே இதில் நடிக்க ஒப்­புக்­கொண்­டா­ராம் தமன்னா.

மேலும், மதுர் பண்­டார்­கர் இயக்­கத்­தில் நடிக்க வேண்­டும் என்­ப­தும் தமது கன­வாக இருந்­தது என்­கி­றார்.

"இந்­தி­யா­வில் எந்த மொழி­யி­லும் இத்­த­கைய கதைக்­க­ளத்­து­டன் ஒரு படம் உரு­வா­ன­தாக எனக்­குத் தெரி­ய­வில்லை. தவிர, இது போன்ற கதா­பாத்­தி­ரங்­கள் அமை­வது அரி­தான விஷ­யம். அத­னால் மிகுந்த ஆர்­வத்­து­டன் நடித்­தேன்.

"உண்­மை­யில் இந்த கதா­பாத்­தி­ரத்­துக்கு ஏற்ப நிறை­வான நடிப்பை என்­னால் வழங்க முடி­யுமா என்ற சந்­தே­க­மும் அச்­ச­மும் மன­தில் நில­வி­யது. ஆனால், இயக்­கு­நர் மதுர் அனைத்­தை­யும் மாற்றி அமைத்­து­விட்­டார். அவர் சொல்­வ­தைக் கேட்­டால் போதும். எல்­லாம் நூறு விழுக்­காடு சரி­யாக அமை­யும்," என்­கி­றார் தமன்னா.

தமிழ்த் திரையுலகை தாம் ஒதுக்கிவிட்டதாக கூறப்படுவது சரியல்ல என்று குறிப்பிடுபவர், நல்ல வாய்ப்புகள் அமைந்தால் எந்த மொழியிலும் நடிக்க தாம் தயார் என்கிறார்.

மேலும், ஒற்றைப் பாடலுக்கு நடனமாடுவது, சில நிமிடங்களே திரையில் தோன்றும் கதாபாத்திரம் என்றாலும், ரசிகர்களின் மனதைக் கவரும் எனில் அதில் நடிப்பது ஆகியவை தவறல்ல என்றும் அண்மைய பேட்டியில் கூறியுள்ளார் தமன்னா.