தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரூ.30 கோடி திரட்டப்போகும் நடிகர் சங்க நிர்வாகிகள்

1 mins read
a07a7b6c-fae1-4223-8b80-f3a5ac439fe9
நடிகர் சங்க நிர்வாகிகள் கார்த்தி, பொன்வண்ணன், நாசர், விஷால். -

தென்­னிந்­திய நடி­கர் சங்­கத்­துக்­கான சொந்­தக் கட்­ட­டத்தை விரை­வில் கட்டி முடிப்­போம் என்று நாசர், விஷால், கார்த்தி ஆகி­யோர் நடி­கர் சங்­கப் பொதுக்­குழு முடிந்­த­தும் கூட்­டாக தெரி­வித்­த­னர்.

இன்­னும் 40 விழுக்­காடு பணி­கள் மீத­முள்­ள­தா­க­வும் வங்­கி­யில் கடன் பெற்று பணி­களை முடிக்க இருப்­ப­தா­க­வும் அவர்­கள் கூறி­னர்.

"நடி­கர் சங்க கட்­ட­டத்தை கட்டி முடிக்க இன்­னும் ரூ.30 கோடி வேண்­டும். அந்த நிதியை எப்­படி திரட்­டு­வது என்று ஆலோ­சித்­தோம். வங்­கி­யில் கடன் பெற பொதுக்­குழு­வில் அனு­மதி வாங்கி இருக்­கி­றோம்.

"உள் அலங்­கா­ரத்­தோடு சேர்த்து இன்­னும் 40 விழுக்­காடு பணி­கள் பாக்கி உள்­ளது. நடி­கர் சங்க கட்­ட­டப் பணிக்­காக நடி­கர்­க­ளி­ட­மும் நிதி கேட்­போம்.

"கட்­ட­டம் கட்டி முடித்த பிறகு அதில் வரும் வரு­வா­யில் நடி­கர் சங்க உறுப்­பி­னர்­க­ளுக்கு ஓய்­வூ­தி­யம், மருத்­துவ உத­வி­கள் வழங்­கு­வோம்," என்று புதிய நிர்­வா­கி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.