'கனவுகள் பற்றி பேசும் படம்'

'கனவுகள் பற்றி பேசும் படம்'

3 mins read
06b5696b-cf63-4afd-a9bc-55e947556356
, :    -

திரை­யு­ல­கம் இப்­போது நல்ல நிலை­யில் இருப்­ப­தாகச் சொல்­கி­றார் சிவ­கார்த்­தி­கே­யன். அவ­ரது நடிப்­பில் உரு­வாகி உள்ள 'டான்' படம் இன்று வெளி­யீடு காண்­கிறது.

இதை­ய­டுத்து செய்­தி­யா­ளர்­களைச் சந்­தித்­துப் பேசிய சிவா, தாம் தற்போது நடித்து வரும் 'அயலான்' படம் நாடு முழு­வ­தும் உள்ள சினிமா ரசி­கர்­க­ளைக் கவ­ரும் வகை­யில் இருக்­கும் என்­றார்.

"சிபி சக்­க­ர­வர்த்தி 'டான்' படத்தை மிகச்­சி­றப்­பாக இயக்கி உள்­ளார். இந்­தப் படம் மாண­வர்­க­ளின் பிரச்­சி­னை­க­ளை­யும் கன­வு­க­ளை­யும் பற்றி பேசும் படைப்­பாக உரு­வாகி உள்­ளது.

"இதில் நான் கல்­லூரி மாண­வ­னா­க­வும் சில காட்­சி­களில் பள்ளி மாண­வ­னா­க­வும் நடித்­திருக்கிறேன். "பள்ளி மாண­வ­னாக நடிக்க கொஞ்­சம் சிர­மப்­பட வேண்­டி­யி­ருந்­தது. இயக்­கு­நர் கூறி­யதை அடுத்து எட்டு கிலோ வரை எடை குறைத்­தேன். அதன் பிறகு மாண­வர் தோற்­றத்­துக்கு கச்­சி­த­மா­கப் பொருந்­திப்­போ­னேன்," என்­றார் சிவ­கார்த்­தி­கே­யன்.

கல்­லூ­ரி­யில் படித்­த­போது உடன் படித்த மாண­வர்­கள் இவரை 'டான்' என்று செல்­ல­மாக அழைப்­பார்­க­ளாம். அதை மன­தில் வைத்­தி­ருந்து இந்­தப் படத்­துக்கு அதையே தலைப்­பாக்கி உள்­ளார் சிவா. மற்­ற­படி இவர் டான் போன்ற கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்­க­வில்­லை­யாம்.

"நண்­பர்­கள் சிலர் இதை எனக்கு நினை­வூட்­டி­னர். அதன் பிறகே இதை தலைப்­பாக வைக்­க­லாம் என்று தோன்­றி­யது.

"எனது முந்­தைய இரண்டு படங்­கள் வசூல் ரீதி­யில் வெற்றி பெற்­றுள்­ளன. இரண்­டுமே நூறு கோடி ரூபாய்க்­கும் மேல் வசூல் பெற்­ற­தால் என்­னு­டைய சம்­ப­ளத்தை உயர்த்­தி­விட்­ட­தாக சிலர் பேசிக் கொண்­டி­ருக்­கின்­ற­னர். அது தவ­றான தக­வல். நான் இன்னும் சம்­ப­ளத்தை உயர்த்­த­வில்லை.

"எனக்­கான சம்­ப­ளத்தை நிர்­ண­யிப்­பது தயா­ரிப்­பா­ளர்­கள்­தான். இவ்­வ­ளவு கொடுத்­தால் கட்­டுப்­ப­டி­யா­கும் என யோசித்து தயா­ரிப்­பா­ளர்­கள்­தான் தொகையை முடிவு செய்­கி­றார்­கள்," என்­றார் சிவ­கார்த்­தி­கே­யன்.

ஓடிடி தளங்­கள் தவிர்க்க முடி­யா­தவை என்று குறிப்­பிட்ட அவர், குறைந்த செல­வில் எடுக்­கப்­படும் சிறிய படங்­க­ளுக்கு ஓடிடி தளங்­கள் மிகப்­பெ­ரிய ஆத­ரவை வழங்கி வரு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

எனி­னும் ஓடிடி தளங்­க­ளுக்­காக தயா­ரிக்­கப்­படும் படங்­கள் அல்­லது இணை­யத்­தொ­டர்­களில் தாம் நடிக்­கப் போவ­தில்லை என்­றும், இப்­போ­துள்ள சூழ­லில் தாம் பெரிய திரை­க­ளுக்­கான படங்­களில் நடிப்­ப­தற்கு மட்­டுமே முக்­கி­யத்­து­வம் அளிப்­ப­தாகவும் சொல்­கி­றார்.

"கண்­டிப்­பாக அது­தான் எனது இலக்கு. எனது படங்­கள் திரை­ய­ரங்­கு­களில் வெளி­யா­வ­தற்­கு­த்தான் முன்­னு­ரிமை அளிப்­பேன். இரண்டு ஆண்­டு­க­ளுக்குப் பிறகு திரை­யு­ல­கம் இப்­போது நன்­றாக உள்­ளது.

"கொரோனா நெருக்­கடி குறைந்­து­விட்­ட­தால் மக்­கள் இப்­போது திரை­ய­ரங்­கு­க­ளுக்கு அதி­க­மாக வரு­கி­றார்­கள். நல்ல படங்­களுக்கு ஆத­ர­வும் தரு­கி­றார்­கள்.

"பெரும் பொருள்­செ­ல­வில் உரு­வா­கும் முன்­னணி நடி­கர்­க­ளின் படங்­களை திட்­ட­மிட்டு எடுத்­தால் கண்­டிப்­பாக அது லாபம் தரும். பாடல் உரி­மம், தொலைக்­காட்சி உரி­மம், ஓடிடி உரி­மம் என சினிமா வியா­பா­ரத்­தின் தளம் விரிந்­தி­ருக்­கிறது.

"ஒரு படம் எல்லா மொழி பேசும் மக்­க­ளால் விரும்­பப்­படும்­போது அது உலகப்­படம் ஆகிறது. இந்­திய மக்­க­ளால் விரும்­பப்­ப­டும்­போது அது 'பான் இந்­தியா' வகை பட­மாகிறது. எனது நடிப்­பில் அடுத்து வரும் 'அய­லான்' படம் அத்­த­கைய படைப்­பாக இருக்­கும்.

"அடுத்து கமல்­ஹா­சன் தயா­ரிப்­பில் நடிக்­கி­றேன். அதை நினைத்­தால் பெருமை­யாக இருக்­கிறது. நான் ரஜி­னி­யு­டன் நடிப்­ப­தாக எல்­லோ­ரும் பேசிக்­கொண்டு இருக்­கி­றார்­கள். ஆனால் அது­கு­றித்து தயா­ரிப்­புத் தரப்­பில் இருந்து என்­னி­டம் யாரும் பேச­வில்லை. அவரு­டன் நடிக்­கும் வாய்ப்பு அமைந்­தால் கட்­டா­யம் நடிப்­பேன். அதில் சந்­தே­கமே வேண்­டாம்," என்­றார் சிவா.