'வெப்', 'இன்ஃபினிட்டி', 'குருமூர்த்தி', 'பகாசூரன்' என தமிழில் பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் நட்டி எனும் நட்ராஜ்.
இந்தியில் முன்னணி ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த இவரை, கோடம்பாக்கத்து நண்பர்கள் முழு நேர நடிகராக மாற்றிவிட்டனர்.
"நண்பர்கள் இணைந்து தயாரித்த 'நாளை' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியவர், திடீரென அமெரிக்கா சென்றுவிட்டார். அதனால் என்னை நடிக்க வைத்தனர். அந்த கதாபாத்திரத்துக்கு வேறொரு பெயர்தான் இருந்தது. ஆனால், நண்பர்கள் என்னை நட்டி என்று கூப்பிடுவதால் அதையே கதாபாத்திரத்துக்கும் சூட்டிவிட்டனர். இன்றளவு அந்தப் பெயர் நிலைத்துவிட்டது. கேமரா முன்பு நடிகராக நின்ற முதல் நாள் இன்றும் மனதில் பசுமையாகப் பதிந்துள்ளது.
"அது மட்டுமல்ல, முதல் நாளன்றே நாசருடன் நடிக்க வேண்டும் என்றனர். அதைக்கேட்டதும் உதறல் எடுத்துவிட்டது. அதைப் புரிந்துகொண்டு நாசர்தான் என்னை ஆசுவாசப்படுத்தினார். அதன்பிறகு நடிப்பும் பழகிவிட்டது," என்கிறார் நட்டி.
இவர் திரையுலகில் பணியாற்றத் தொடங்கி 23 ஆண்டுகள் ஆகிவிட்டன. நாயகனாகத்தான் நடிப்பேன் என இவர் அடம்பிடிப்ப தில்லை. அனுபவம் கைகொடுப்பதால் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்க முடிகிறது என்கிறார்.
"ஒரு படத்தை முடித்த பிறகே அடுத்த பட வேலைகளில் ஈடுபடுவேன். இதன் காரணமாக என்னால் எந்தவிதமான குழப்பங்களோ, பிரச்சினைகளோ படக்குழுவுக்கு ஏற்படுவதில்லை. நடிப்பு, ஒளிப்பதிவு ஆகிய இரண்டுக்கும் இந்தக் கொள்கையைத்தான் கடைப்பிடிக்கிறேன்," என்கிறார் நட்ராஜ்.

