வெளியீட்டு விழாவைத் தவிர்த்த மூன்று நாயகிகள்

வெளியீட்டு விழாவைத் தவிர்த்த மூன்று நாயகிகள்

1 mins read
acb2c744-fa06-4d9e-b52b-74f4ec956fa5
'கன்னித்தீவு' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி. -

நான்கு கதா­நா­ய­கி­கள் நடித்­துள்ள 'கன்­னித்­தீவு' படத்­தின் இசை வெளி­யீட்டு விழா அண்­மை­யில் நடை­பெற்­றது. இதில் மூன்று நாயகி­கள் பங்­கேற்­கா­ததை அடுத்து, மூத்த திரை­யு­ல­கப் பிர­மு­கர்­கள் அவர்­க­ளைக் கண்­டித்­துள்­ள­னர்.

வர­லட்­சுமி சரத்­கு­மார், ஆஷ்னா ஜவேரி, ஐஸ்­வர்யா தத்தா, சுபிக்‌ஷா நடிப்­பில், சுந்­தர் பாலு தயா­ரித்து இயக்­கி­யுள்ள படம் 'கன்­னித்­தீவு'.

இதன் வெளி­யீட்டு விழா­வில் நடி­க­ரும் இயக்­கு­ந­ரு­மான தியா­க­ரா­ஜன், நடி­கர் ஆர்.கே.சுரேஷ், தயா­ரிப்­பா­ளர் சஞ்­சய் லால்­வானி ஆகி­யோர் கலந்துகொண்­ட­னர்.

ஆனால், சுபிக்­‌ஷா­வைத் தவிர மற்ற மூன்று நாய­கி­க­ளை­யும் காண­வில்லை. இத்­த­னைக்­கும் மூன்று பேருக்­கும் கைவ­சம் பெரிய பட வாய்ப்­பு­கள் ஏதும் இல்லை.

இந்­நி­லை­யில் இசை வெளி­யீட்டு விழா­வில் பேசிய சுபிக்‌ஷா, "ஒரு கதா­நா­ய­கன் செய்­யும் அனைத்­தை­யும் கதா­நா­ய­கி­க­ளான நாங்­கள் செய்­தி­ருக்­கி­றோம்.

"இந்­தப் படத்தை அனை­வ­ருக்­கும் பிடிக்­கும் வகை­யில் இயக்­குநர் சுந்­தர் பாலு உரு­வாக்கி உள்ளார்," என்­றார்.