'ஓட விட்டு சுடலாமா': முழு நீள பழிவாங்கும் கதை

'ஓட விட்டு சுடலாமா': முழு நீள பழிவாங்கும் கதை

1 mins read
4ecae571-55d4-4b17-9029-df878e26d219
-

இப்­போ­தெல்­லாம் படத் தலைப்பை வைத்தே ரசி­கர்­க­ளைக் கவர வேண்­டும் என்­ப­தில் இயக்­கு­நர்­களும் தயா­ரிப்­பா­ளர்­களும் கவ­ன­மாக உள்­ள­னர். அந்த வகை­யில், ஒரு புதுப் படத்­துக்கு 'ஓட விட்டு சுட­லாமா' என்று தலைப்பு வைக்­கப்­பட்­டுள்­ளது.

புது­மு­கங்­க­ளான அமீர் சுஹீல், கோபிக்கா ஆகி­யோர் நாய­கன், நாய­கி­யாக நடிக்­கி­றார்­கள். தயா­ரிப்­பா­ளர் வினித் மோகன் முக்­கிய கதா­பாத்­தி­ரத்தை ஏற்­றுள்­ளார். ஜிஜேஷ் இயக்­கு­கி­றார்.

கதைப்­படி நாய­கன் ஒரு ஆட்டோ ஓட்­டு­நர். அவன் காத­லிக்­கும் பெண்ணை பெரிய ரவுடிக் கும்­ப­லைச் சேர்ந்த ஒருவன் சீர­ழித்­து­வி­டு­கி­றான்.

எந்­த­வித வலு­வான பின்­பு­ல­மும் இல்­லாத நாய­க­னி­டம், அரிய சக்­தி­க­ளைக் கொண்ட ஒரு கார் வந்து சேர்­கிறது. அதை வைத்­துக்­கொண்டு அந்த ரவு­டிக் கும்பலை பழி­வாங்­கு­கி­றான்.

"இது­தான் கதை. தமிழ் சினிமா­வுக்­குப் பழி­வாங்­கும் கதை­கள் புதி­தல்ல. எனி­னும் அதை முற்­றி­லும் புதிய கோணத்­தில் சொல்­கி­றோம்," என்­கி­றார் இயக்­கு­நர் ஜிஜேஷ்.

'ஓட விட்டு சுடலாமா' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி.